பிறரின் பொருளை அபகரித்தல்

தமிழர் சமயம்

 
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். (வெஃகாமை - 171)

பொருள்: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் (குறள் - 178)

பொருள்: ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும் 
 

கிறிஸ்தவம் 


மற்றொருவனிடமிருந்து நான் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை. நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது. நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன். ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை. நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால் அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான் (யோபு 31:38-40)

“லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது, “ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும். (உபாகமம் 27:25)

ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள். உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள். களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார். (சங்கீதம் 12:5)

பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. (நீதிமொழிகள் 23:10

இஸ்லாம் 

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள். (புஹாரி :2453 அபூஸலாமா (ரலி))

 நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (குர்ஆன் 4:10)

அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (குர்ஆன் 89:17-20)

தேவனின் பாஷை *

  • எல்லா பாஷையும் தெய்வத்தால் உண்டாக்கப் பட்டது.
  • தேவனுக்கு பாஷைகள் தேவையில்லை.
  • பாஷைகள் மனிதர்களுக்காக ஏற்படுத்தப் பட்டது.

கிறிஸ்தவம்

மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு மகனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது. (ஆதியாகமம் 10:5)

உலகம் பிரிக்கப்பட்டது: வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். (ஆதியாகமம் 11:1)

கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். (ஆதியாகமம் 11:6)

எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார். (ஆதியாகமம் 11:7)

உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார். (ஆதியாகமம் 11:90)  

இஸ்லாம்

"ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" - (குர்ஆன் 14:4)

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (குர்ஆன் 10:47)   

தமிழர் சமயம்

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. - (திருமந்திரம் ) 

இந்து மதம்

நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே. - (கீதை 15.15)

மேற்கண்ட வசனங்கள் பாஷைகள் பலவும் இறைவனால் உருவாக்கப் பட்டத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறுகிறது. 

பெந்தகோஸ் கிறிஸ்தவர்கள் பேசும் தேவபாசை பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது:

“நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 8 அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார். 9 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்:

, “‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே, உமது பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம்.
10 உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம்.
11 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
12 மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே எங்கள் குற்றங்களையும் மன்னியும்.
13 எங்களைச் சோதனைக்கு உட்படப் பண்ணாமல் பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’
  

வடமொழி பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என்றால்,

சமஸ்கிருதம் என்பது செம்மை படுத்தப்பட்டது என்று பொருள். யாரால்? மனிதர்களால்! மனிதர்களால் உருவான பாஷை எப்படி தேவபாஷையாகும்.? 


யூகம்

தமிழர் சமயம் 

காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் (உலக நீதி 68)

பொருள்: கண்ணால் காணாதவற்றைப் பற்றிக் கட்டுக்கதைகள் சொல்லாதே 

 

இஸ்லாம்

ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். -  (குர்ஆன் 10:36)

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (அல்குர்ஆன் 49:12
 

கிறிஸ்தவம் & யூத மதம் 

அவர்கள் கடவுளை அறிந்திருந்தாலும், அவர்கள் அவரைக் கடவுளாக மதிக்கவில்லை அல்லது நன்றி செலுத்தவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் யூகங்களில் பயனற்றவர்களாகி, அவர்களின் முட்டாள்தனமான இதயம் இருண்டுவிட்டது. (ரோமர் 1:21)

மனிதர்கள் அமீபாவிலிருந்து அல்ல, ஆதமிலிருந்து வந்தவர்கள்.

இஸ்லாம் 


மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1) 
 

கிறிஸ்தவம் 


"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்." - (அப்போஸ்தலர் 17:26)

தமிழர் சமயம் 


திருமந்திரம் - மனித இன மூலம்

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. (இரண்டாம் தந்திரம் - 9. பாடல் 6)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பதவுரை: ஆதி - தொடக்க; பகவன் - ‘பகு’ என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் ஆகும். பகுத்தவன் பகவன் எனப்பட்டான். எனவே தன்னுடம்பை பகுத்து/பிரித்து தன் துணைக்கு தந்த முதல் மனிதன் ஆதி பகவன் எனப்பட்டான். அவரிடமிருந்தே உலகில் உள்ள மக்கள் அனைவரும் தோன்றினார். 

மணக்குடவர் உரை: உலக மொழிகளில் உள்ள எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து. 
 

இந்து மதம்  


அவர் மகிழ்ச்சியாக இல்லை. எனவே மக்கள் (இன்னும்) தனியாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இல்லை. அவர் ஒரு துணையை விரும்பினார். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் கட்டித்தழுவுவது போல் அவர் பெரியவரானார். இந்த உடலையே இரண்டாகப் பிரித்தார். அதிலிருந்து கணவனும் மனைவியும் வந்தனர். எனவே, யாஜ்ஞவல்கியர் கூறினார், இது (உடல்) ஒரு பாதி, பிளவுபட்ட பட்டாணியின் இரண்டில் ஒன்று போன்றது. எனவே இந்த இடம் மனைவியால் நிரப்பப்படுகிறது. அவன் அவளுடன் ஐக்கியமானான். அதிலிருந்து மனிதர்கள் பிறந்தார்கள். (பிருஹதாரண்யக உபநிஷத் 1.4:3)

அரசியலில் மதம் தலையிட வேண்டிய அவசியம் என்ன?

அரசியலும் மதமும் பிரிந்தது எப்போது? Quora 

திருக்குறள் அரசியல் பேசவில்லையா?

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு” (குறள் 384)

பொருள்: சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.

முதுமொழிக் காஞ்சி அரசியல் பேசவில்லையா? 

முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று. -  (நல்கூர்ந்த பத்து 9:1)
பதவுரை: முறையில் - முறைமையில்லாத; நல்கூர்ந்தன்று - வறுமையுறும் 
பொருளுரை: முறை செய்யாத அரசனுடைய நாடு எந்நாளும் வறுமையுடையதாகும். 

திருமந்திரம் அரசியல் பேசவில்லையா?

நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாடொறும் நாடு கெடுமுட னண்ணுமால்
நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே. - (பாடல் 239: முதல் தந்திரம் 13. இராசதோடம் (அரசாட்சி முறை)) 
 

விளக்கம்ஒரு நாட்டுக்கு அரசனாக இருக்கின்றவன் அந்த நாடு முழுவதிலும் தினந்தோறும் தவ வழியில் வாழ்பவர்களுக்கு எந்தவொரு துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசனுக்கு என்று விதிக்கப்பட்ட நீதியிலும் தர்மத்திலும் சிறிதளவும் பிழை வந்துவிடாமல் தினந்தோறும் நடந்துகொள்ள வேண்டும். இதில் எதை செய்யத் தவறிவிட்டாலும் அவனுடைய நாட்டின் வளம் குன்றும். மக்களிடையே அறியாமை தோன்றும். அந்த நாட்டில் இருக்கும் செல்வங்கள் எல்லாம் தினந்தோறும் குறைந்து கொண்டே வந்து அரசனும் விரைவில் இறந்து போவான்.

திருக்குர்ஆன் அரசியல் பேசவில்லையா?

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 4:58)

திருவிவிலியம் அரசியல் பேசவில்லையா?

அரசன் நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் அரசன் சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் அரசனுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும். - (நீதிமொழிகள் 29:4)  

இவைகள் கூறும் அரசின் மாண்பும், அரசனின் மாண்பும், குடிமக்கள் மாண்பும் பேணப்பட்டால் அதுதான் பொற்காலம். இவைகள் கூறும் அரசியலின் கூறுகளை தனித்தனியாக பிரித்தது இன்று குடியரசு என்றும் பொதுவுடைமை என்றும், சோசியலிசம் என்றும், கேப்பிடலிசம் என்றும் தனித்தனியே முழுமைபெறா சிக்கலான உருக்களாக உலாவருகிறது. இவை அனைத்தின் பண்புகளும் சரியான விகிதத்தில் ஒருங்கே அமையப்பெறும் பொழுதுதான் பொற்கால ஆட்சி நடைபெறும்.

ஆனால் அறநூல்கள் கூறும் நல்ல அரசாட்சியின் பண்புகளை கூறுபோட்டு பிரித்தவர்களின் வாக்குமூலம் இதோ!

முழுமையாக வாசிக்க : Must_Readable.pdf