'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை [முகம்மதை] அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - (குர்ஆன் 2 :146)
இந்த குர் ஆனின் வசனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவோம் வாருங்கள்..!
தமிழர் மதம்
ஏழாம் தந்திரம் - 13. குருபூசை, மாகேசுர பூசை
அழி தகவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. - (திருமந்திரம் பாடல் - 1864)
பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே. - (திருமந்திரம் பாடல் - 1865)
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. - (திருமந்திரம் பாடல் - 1866)
- சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட இந்த நூலுக்கு விளக்கவுரை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. எனவே அதில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் ஆய்வுக்கு உரியது.
- இக்கட்டுரையின் தலைப்போடு முரண்படுவதால் அல்ல, இப்பாடல்களின் விளக்க உரைகளே ஒன்றுக்கொன்று முரண்படுகிறது.
- ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறும் திருமந்திரத்தின் முதல் பாடலாக "வினாயகர் வணக்கம்" சேர்க்கப்பட்டு இருப்பதன் மூலம் இதில் இடைச்சொருகள் இருப்பது உறுதியாகிறது.
- பாடலுக்கு விளக்கமும் பிழை, இடைச் செருகளும் உண்டு. இருந்தாலும் இந்த நூலை தேர்ந்தெடுக்க காரணம் தொல்காப்பிய நூல் விதி இதை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இதுபற்றிய விளக்கம் "புனித நூல்கள்" தலைப்பில் விளைவாக எழுதப்பட்டுள்ளது.
பிழையான விளக்கவுரை 1 - ஜி வரதராஜன்
சரியான விளக்கவுரை (இதற்கு முந்தய பாடலில் இருந்து துவங்குவோம்)
அழிதகவு இல்லா அரன் அடியாரைத்
தொழுகை ஞாலத்துத் தூங்கி இருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
பதவுரை
அழிதகவு - வருந்துதல்
இல்லா - இல்லா
அரன் - தீவினைகளை அரிப்பவனின்
அடியாரைத் - அடியாரை
தொழுகை - வழிபாடு (பின்பற்றல்)
ஞாலம் - உலகம்
தூங்கியிருள் - செறிந்தஇருள், மிகுந்தஇருள்.
நீங்கும் - நீங்கும்
பழுது படாவண்ணம் - குறையில்லாத வகையில்
பண்பனை நாடித் - நற்பண்புக்கு நிலைக்களனாய் உள்ளவனை நாடி
தொழுதெழ - தொழுது எழுந்தால்
வையகத்து - உலகத்தில்
ஓர்இன்பம் ஆமே - ஒரு இன்பம் ஆகுமே
விளக்கம்: வருந்துதல் இல்லா தீவினைகளை அரிப்பவனின் அடியாரை பின்பற்ற உலகத்தின் மிகுந்த இருள் நீங்கும். குறையில்லாத வகையில் நற்பண்புக்கு நிலைக்களனாய் உள்ளவனை நாடி அவனுடன் தொழுது எழுந்தால் உலகத்தில் இன்பம் உண்டாகும்.
பகவர்க்கு ஏதாகிலும் பண்பு இலர்ஆகிப்
புகுமத்தராய் நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஓத்து நின்ற ஊழி தோறூழி
அகமத்தராகி நின்று ஆய்ந்து ஓழிந்தாரே - (திருமந்திரம் பாடல் - 1865)
பகவர்-க்கு - (பகவன், பகவர்) மனிதர்க்கு, அடியார்க்கு
ஏதாகிலும் - எது ஆகினாலும்
பற்று இலர் ஆகி - விருப்பு வெறுப்பு இன்றி
புகுமத்தர்-ஆய் - அதிக உற்சாகம் உள்ளவன்
பூசனை - அன்றாட இறை வணக்கம்
முகமத் - ஓடு - முகமத் உடன்
ஊழி தோறூழி - ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவர்
அகமத் - தராகி - அகமத் தராகி
ஆய்ந்து - தெரிந்தெடு, களைந்து எடு, ஆராய்; நுட்பமாய்ப் பார்
விளக்கம்: அடியார் அவர்க்கு எது ஆகினாலும் விருப்பு வெறுப்பின்றி அதிக ஈடுபாட்டோடு நின்று அன்றாட இறை வணக்கம் செய்யக்கூடிய முகமத் உடன் சேர்ந்து நின்று ஊழி தோறூழி செய்து அகமத் தராகி நின்று ஆய்ந்து நீக்கினார்.
வித்தகமாகிய வேடத்தர் உண்ட ஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே. - (திருமந்திரம் பாடல் - 1866)
அத்தன் - தகப்பன், மூத்தவன், மூத்தோன், குரு, முனிவன்
அருந்திய வண்ணமாம் - குடித்தது போல
சித்தந் தெளிந்தவர் - அறிவு தெளிவு பெற்றவர்
சேடம் - மிச்சப்பொருள்; கழிந்தமீதி; எச்சில்;
முத்தியாம் - வீடு பெறலாம்
என்று நம் மூலன் மொழிந்ததே. - என்று திருமூலர் சொல்கிறார்
விளக்கம்: தூதராகிய வந்தவர் உண்ட உணவை குரு அயன்மால் அருந்தியது போல மீதமுள்ளதை அருந்தினால் அறிவு தெளிவு பெற்று வீடு பெறலாம் என்று திருமூலர் சொல்கிறார். (வேத ஞானத்தை உணவோடு உவமையாக்கி கூறுகிறது இப்பாடல், இதை ஒத்த ஒரு நபி மொழி உண்டு - கனவில் நபியிடமிருந்து பெற்று உமர் அருந்திய பால் தொடர்பான நபிமொழி)
குறிப்பு: மேற்சொன்ன பாடல்கள் முழுவதும் முகமது நபி அவர்களை பற்றிய தீர்க்க தரிசனமாகும். இதில் பயன்படுத்திய வார்த்தை முகத்தை பற்றியும் அகத்தை பற்றியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்னும் பெயரல்ல என்போர் சிலர்.
1) பிழையான பகுப்பு 1: அதன் பகுப்பு முகம்+அது+ஓடு மற்றும் அகம்+அது+ராகி என்று இருக்க வேண்டும் என்று சிலர் கூறியதை பார்க்க முடிந்தது.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொகாப்பியத்தின் சொற்களுக்கான புணர்ச்சி விதிப்படி, முகம்+அது+ஓடு = முகம்மதோடு என்றும் அகம்+அது+ராகி = அகம்மதராகி = என்றுதான் இடம்பெற முடியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்று இடம்பெறாது. முகமத்+ஓடு=முகமத்தோடு என்றும் அகமத்+அர்+ஆகி=அகமத்தராகி என்பதே சரியான பகுப்பு.
2) முகம்+மத்தம் (மத்து)+ஓடு (உடன்) மற்றும் அகம்+மத்தர்+ஆகி என்றுதான் பிரிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதுண்டு.
சரி இதை பகுப்பாய்வுக்கு உட்படுத்த்துவோம்.
முகம் + மத்தம் + ஓடு = ?
முகம்+மத்தம் = ? மகரப்புணர்ச்சி
(ம்+ம = ம)
முகம் + மத்தம் = முகமத்தம்
மத்தம் + ஓடு = ? தனிக்குறில் முன் ஒற்று
ம் + ஓ = (ம்மோ)
மத்தம் + ஓடு = மத்தம்மோடு
நீங்கள் சொல்லுவது போல பிரித்தால் முகம் + மத்தம் + ஓடு = முகமத்தம்மோடு என்றுதான் வருமே தவிர முகமத்தோடு என்று குறிப்பிட முடியாது.
அகம் + மத்தர் + ஆகி = அகமத்தராகி
மத்தர் என்பது தமிழ் சொல்லா? எந்த சங்க நூலில் உள்ளது? கன்னடத்தில் தான் அப்படி ஒரு சொல் உள்ளது. மத்தன் (மத்து+அன்) என்பதை மத்தர் (மத்து +அர்) என்று கூற முடியுமே என்று கூறினால், மத்து என்பதன் பொருள் என்ன? எனவே இந்த பகுப்பு பிழை.
எனவே
அகமத் + அர் + ஆகி = அகமத்தராகி
என்று தான் இந்த சொல்லை பகுக்க முடியும்.
எனவே இது தெளிவாக முகமது நபியை பற்றிய முன்னறிவுப்புதான் என்று கூறலாம்.
பைபிளின் மூலப் பிரதியான ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டிலும் கிரேக் மொழியில் புதிய ஏற்பாட்டிலும் முஹம்மத என்ற தீர்க்கதரசி வருவார் என்பது முன்மொழியப்பட்டுள்ளது.
ஹீப்ரு மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டை பிறட்டுகின்ற போது சங்கீதம் என்ற புத்தகத்தில் அத்தியாயம் 5, வசனம் 16 சொல்லுகின்றது.
மூலமொழியில்: חִכּוֹ מַמְתַקִּים וְכֻלּוֹ מַחֲמַדִּים זֶה דוֹדִי וְזֶה רֵעִי בְּנוֹת יְרוּשָׁלִָם
உச்சரிப்பு: Hik.ko ma m.taq.qim we.kul.low ma.ha.mad.dim zeh do.w.di we.zeh re.‘i be.no.wt ye.ru.sha.lim
ஆங்கில மொழிபெயர்ப்பு: “His mouth is most sweet: yea, he is altogether lovely. This is my beloved, and this is my friend, O daughters of Jerusalem”.
தமிழ் மொழிபெயர்ப்பு: “ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர், அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது, இத்தகையவரே என் நேசர்” - (சங்கீதம் 5:16)
இங்கு முஹம்மதிம் என்ற சொல்லில் முஹம்மத் என்ற பெயருக்கு பின்னால் ”திம்” பாவிக்கப்பட்டிருப்பது; ஹீப்ரு மொழியில் பன்மைக்கு பயன்படுத்தும் இலக்கிய நடையாகும்.
பொதுவாக அரபு, ஹீப்ரு போன்ற மொழிகளில் இரண்டு பன்மை இருக்கின்றது.
1. மரியாதைக்காக பயன்படுத்துவது.
2. பல என்ற ஒன்றுக்கு மேற்பட்டவற்றை குறிக்க, பன்மைக்கு பயன்படுத்துவது.
இந்த நடைமுறையை பைபிளில் பல இடங்களில் பார்க்க முடியும். உதாரணமாக,
”துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்”. (ஆதியாகம்ம் 1-1)
இங்கு ”தேவன்” என்பதற்கு ஹீப்ரு மொழியில் இலோஹிம் என்று சொல்லப்படுகின்றது. இலா என்ற சொல்லுடன் ஹிம் என்ற மரியாதைக்குரிய பன்மை பாவணையை பயன்படுத்தி யிருக்கின்றார்கள்.
இன்று வரை கிறிஸ்தவர்களால் மூலப்பிரதியாக பார்க்கப்படும் ஹீப்ரு மொழி பைபிளில் முஹம்மதிம் என்ற சொல் இடம்பெறுகிறது, இருந்துவருகிறது. ஆனால் மொழிபெயர்க்கும் போது தமிழாக இருந்தால் ”விரும்பத்தக்கவர்” ஆங்கிலமாக இருந்தால் “Lovely” ” “Praised” என்று மொழிமாற்றம் செய்கின்றார்கள்.
ஆயிரம் தடவை விரும்பத்தக்கவர் பொருந்திக் கொள்ளத்தக்கவர் என்று வாசித்தாலும் அது எந்த வகையிலும் நியாயமற்றதும் பொருத்தமற்றதுமாகும். ஒரு பெயரை அவ்வாரு மொழிபெயர்ப்பதற்கு எந்த அதிகாரமும் இவர்களுக்கு இல்லை.
எவரது பெயரையும் இவ்வாரு மொழிபெயர்ப்பு செய்து பாவிப்பதற்கு எவருக்கும் எந்த தகுதியுமில்லை.
தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிகளில் ஒருவர்தான் ”முன்னியர் சுவாட்” இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் முன்னியர் என்பது திரு (Mr.) சுவாட் என்பது கருப்பு (Black) என்றும் பொருள். இதனை இவ்வாறு மொழிபெயர்த்து சொன்னால் திரு கருப்பு, (Mr. Black) என்று சொல்ல வேண்டும். இவரது பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவரை ஆங்கிலயராக அல்லது தமிழில் மொழிபெயர்த்தால் அவரை ஒரு த்மிழனாகத் தான் பார்க்கமுடியும்.
ஆனால் இவ்வாறு மொழிபெயர்த்ததால் தான் முஹம்மதிம் என்பதற்கு ‘altogether lovely’ , ’loved one’ என்று பாவிக்கப்படுகின்றது.
ஆனால் இன்றுவரை மூலப்பிரதி முஹம்மதிம் என்றே இருந்துவருகிறது. எனவே அந்த வசனம் இவ்வாறு இருக்க வேண்டும்.👇👇👇👇
“ஆம் எருசலேமின் பெண்களே! என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர், முகமது, இவரே என் நேசர்” - (சங்கீதம் 5:16)
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்;
எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (
குர்ஆன் 61:6)
குர்ஆனின் இந்த வசனத்தை ஆய்வு செய்ய பைபிளை நோக்கினால்,
கர்த்தருடைய விசேஷ ஊழியன் என்ற தலைப்பில் கீழுள்ள வசனத்தை காணலாம்.
"இதோ! என் வேலைக்காரன், אחמד (நான் அவரை ஆதரிக்கிறேன்); நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது ஆவியை வைக்கிறேன் அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார். அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரலிடவும்மாட்டார். அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்" [ஏசாயா 42:1-4]
ஹீப்ருவில், (எட்மோக்) אחמד என்பதை ஆங்கிலத்தில் "WHOM I UPHOLD" என்று அல்லது தமிழில் "நான் அவரை ஆதரிகிறேன்" என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால் பெயரை நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. இப்பொழுது கூகுளில் இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யுங்கள்.
ஹீப்ரு முதல் ஆங்கிலம்
ஹீப்ருவிலிருந்து அரபு = அலிஃப், ஹா, மிம், தால் = அஹ்மத் / அஹ்மத்
ஹீப்ருவிலிருந்து சீனம்
சீனத்திலிருந்து ஆங்கிலம்
ஹீப்ரு முதல் பிரஞ்சு வரை
ஹீப்ரு முதல் கிரேக்கம் வரை
கிரேக்கத்திலிருந்து ஆங்கிலம்
விக்கிபீடியாவில் இருந்து: ஏசாயா 42 முஸ்லீம்களால் குறிப்பிடப்படும் ஆரம்பகால மற்றும் மிகவும் பொதுவான தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகும். முஹம்மது [ﷺ] காலத்திலிருந்தே, அது அவரைத் தவிர வேறு யாராலும் நிறைவேற்றப்படவில்லை என்று முஸ்லிம்கள் நம்பினர். முதல் வசனம் இவ்வாறு தொடங்குகிறது: “இதோ, நான் ஆதரிக்கும் என் வேலைக்காரன்; என்னுடைய தேர்ந்தெடுக்கப் பட்ட…”. "நான் யாரை ஆதரிக்கிறேன்" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தையானது "אתמך" (Etmokh) ஆகும். இந்த வார்த்தை இங்கு தவிர முழு பைபிளிலும் எங்கும் காணப்படவில்லை. முஸ்லீம் ஆசிரியர்கள், "அத்மாச்"(etmokh) மற்றும் அஹ்மத் என்ற பெயரான "אחמד" எழுத்துக்கு இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி, ஒரு நோக்கம் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைத்தனர். கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியரின் பெயரை மறைப்பதற்காக இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வேதாகமத்தின் எழுத்தாளர்களால் செய்யப்பட்டது, அது "אחמד" (அஹ்மத்). முஹம்மது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்காரன் என்று முஸ்லிம்களால் நம்பப்படுகிறது
A spiritual reformer will come from a foreign land (outside Bharat) with his disciples (companions). His name will be Mahamad (Muhammad). He will dwell in a desert. (Bhavisyath Purana 3:5-8)
முகமது அகமது என்ற இரண்டு பெயர்களில் இந்து மத வேதங்களில் வரக் கூடிய பல முன்னறிவிப்புகள்
அ) சாமவேதம் - உத்தரசிகா - மந்த்ரா 1500 (சாம வேதம் இரண்டாவது பிரிவு - புத்தகம் 7 - அத்தியாயம் 5 - செய்யுள் 1)
ஆ) சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 (சாம வேதம் புத்தகம் 2 - அதிகாரம் 2 - சுலோகம் 8)
இ) யஜூர் வேதா - அதிகாரம் 31 - செய்யுள் 18
ஈ) ரிக் வேதம் புத்தகம் 8 - துதிப் பாட்டு 6 - செய்யுள் 10
உ) அதர்வண வேதம் - புத்தகம் 8 - அதிகாரம் 5 - செய்யுள் 16
ஊ) அதர்வண வேதம் புத்தகம் 20 - அதிகாரம் 126 - செய்யுள் 14
எ) சாம வேதம் - உத்தர்சிக் - மந்த்ரா 1500 - பிரிவு 2
ஏ) சாம வேதம் - புத்தகம் 7 - அதிகாரம் 1 - பகுதி 5 - செய்யுள் 1
'அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.' - (சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை)
"மேலும் நாங்கள் உங்களை அனுப்பவில்லை, ஆனால் அனைத்து உலகங்களுக்கும் (அதாவது, மனித ஜின் உலகங்களுக்கும்) கருணையின் உருவகமாகவே அனுப்பினோம்" (குர்ஆன் 21:108)