முன்னுரை
கார்ல்மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் இருவரும் உடன் பிறந்தவர்கள் அல்ல என்றாலும் ஏறக்குறைய சகோதரர்கள் போல. மார்க்ஸின் எங்கல்ஸ் உடனான நட்பு ஒவ்வொருவரும் கனவு காணும் நட்பு என்று சொன்னால் அது மிகையாகாது. மார்க்ஸ் காலந்தோறும் வாசிக்கவும் எழுதவும் பொருளாதார உதவி உட்பட பல்வேறு வகைகளில் உதவிய எங்கல்சின் கரங்கள் பின்னாளில் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" என்கிற சிறிய நூலை மார்க்ஸ் உடன் இணைந்து எழுதியதுடன், மார்க்ஸ் இறந்த பிறகு மார்க்ஸின் மூலதனம் நூலின் முதல் பாகம் தவிர மற்றவைகளை தொகுத்து வெளியிடவும் உதவியது.
அதேபோல மார்க்ஸ்-இன் மனைவி ஜென்னியும் ஒவ்வொரு ஆண்மகனும் கனவுகாணும் மனைவி ஆவார். அழகிலும், குணத்திலும், அறிவிலும், குடும்ப பின்னணியிலும் ஜென்னி அவர்கள் முதல் வரிசைக்கு சொந்தக்காரர். இவர்களின் காதல் கதையும் இல்லற வாழ்க்கையும் வார்த்தைகளில் வருணிக்க முடியாத அழகும் தியாகமும் நிறைந்தது.
சுருங்க சொன்னால் ஏங்கல்ஸ் மற்றும் ஜென்னி என்ற இருவரில் ஒருவர் இருந்திருக்கவில்லை என்றாலும் மார்க்ஸ் தனது வாழ்நாளில் செய்து முடித்த காரியங்கள் நிறைவேறியிருக்க சாத்தியம் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். வறுமையை தவிர வேறு எதுவும் கண்டிராத போராளியான கார்ல்மார்க்ஸ் பிறப்பால் கிறிஸ்தவத்துக்கு மாறிய யூத குடும்பமாக இருந்தும் இருந்தும் தன்னை நாத்தீகராக அவர் அறிவித்து கொண்டார். சார்லஸ் டார்வின்-இன் சமகால மனிதரான மார்க்ஸ்-இன் வாழ்க்கையில் காதல், நட்பு, வறுமை, நாடு நாடாக ஓட்டம், போராட்டம் என அனைத்து அம்சங்களும் இருக்கிறது.
இப்பொழுது மார்கஸின் தனிப்பட்ட வாழ்க்கை செய்திகளை ஒதுக்கி விட்டு மார்க்ஸின் தத்துவம் என்ன? அது எவரின் தாக்கத்தால் உருவானது, அதன் நோக்கம் போன்ற விவாத பொருளுக்குள் நுழைவோம். அதோடு அந்த தத்துவங்கள் இறைமறுப்பை நிறுவுகிறதா என்றும் பார்ப்போம்.
மார்க்ஸியம் என்றால் என்ன?
மார்க்சியம் (அ) பொதுவுடைமை தத்துவம் என்றும் அழைக்கப் படக்கூடிய கோட்பாட்டின் அடிப்படை இயங்கியல் பொருள்முதல்வாதம் (
Dialectical Materialism) தத்துவம் ஆகும். இன்று பொதுவுடைமை தத்துவத்தை விளக்க பல உபதத்துவங்கள், நீட்சி தத்துவங்கள், கருத்துக்கள், கோணங்கள் இருந்தாலும், பொதுவுடைமை தத்துவம் தொடங்கியது இயங்கியல் பொருள்முதல்வாதம் எனும் புள்ளியிலிருந்துதான். எனவே மார்க்சிய தத்துவத்தின் அடிநாதமாக இவ்விரண்டின் பின்புலத்தையும், கருத்தையும் சற்று வாசிப்போம். ஒரு கருத்து சரியா பிழையா என்பதை ஆய்வு செய்ய அதன்
- அடிப்படை தத்துவம்,
- அதை உருவாக்கியவரின் பின்புலம் மற்றும்
- நோக்கம்
ஆகியவைகள் ஆய்வு செய்யப்படவேண்டும். எனவே அந்த அடிப்படையில் முதலில் இந்த தத்துவத்தை உருவாக்கியவரின் பின்புலத்தை ஆய்வு செய்வோம்.
மார்க்ஸ் சிறுவயதிலிருந்தே நாத்தீகர் இருந்தவர், மேலும் கடவுள் மறுப்பை தான் உருவாக்கிய தத்துவத்தின் மூலம் நிறுவுகிறார். எனவே கடவுளை மறுக்கும் அவரின் தத்துவத்தின் அடிப்படை சரியா பிழையா என்று ஆய்வு செய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான நோக்கம். அவரின் தத்துவத்தின் அடிப்படையே பிழையாக இருந்தால் அவரின் கடவுள் மறுப்பு கருத்தும் பிழைதான் என்பதை அறியலாம். மார்ஸிசத்தின் மறு பெயர் இயங்கியல் பொருள்முதல்வாதம் ஆகும். எனவே இவ்விரு சொல்லை பிரித்து அதன் மூலத்தை ஆய்வு செய்வோம்.
மார்க்ஸ் தத்துவத்தின் அடிப்படை

இயக்கவியல் - உலகம் நிலையானது அல்ல, மாறாக தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிறது. இந்தப் மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றுகின்றன. அவைதான் இயக்கவியல் விதிகள். இந்த உலகில் உள்ள அனைத்தும் ஏதோ ஒருவகையில் இயங்கி கொண்டே இருக்கிறது. இந்த கருத்தை மார்க்ஸ் அந்நாளில் கருத்து ஆதிக்கம் செலுத்திய ஹெகல் [Georg Wilhelm Friedrich Hegel] என்கிற தத்துவஞானியிடம் இருந்து எடுக்கிறார் ஆனால் அவரிடம் மார்க்ஸ் சில இடங்களில் [
கருத்துமுதல்வாதத்தில்] முரண்பட்டு அவரின் கொள்கைகள் முழுமை அடையாதவையாக கருதுகிறார். எனவே அவரின் கருத்துக்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதுவதுடன் அதை முழுமைப் படுத்த முயலும் பொழுது அவருக்கு கிடைத்த தத்துவம் தான் "பொருள்முதல்வாதம்" ஆகும். இயக்கவியல் கோட்பாடு அறிவியல் ரீதியானது என்று சிலர் வாதிடுவார் ஆனால் பெரும்பாலோனோர் அவ்வாறு கருதுவதில்லை. மதங்கள் இயக்கவியலுக்கு எதிரானது என்பது தவறான வாதம் என்பதற்கு சமய நூல்களில் பல சான்றுகள் உள்ளன, அதை பிறகு விவாதிப்போம். மார்க்ஸ் நாத்தீகராவதற்கு இவர் தான் முக்கிய காரணமாக அமைந்தார்.
பொருள்முதல்வாதம் - பொருள் மட்டுமே உண்மை, அதுவே பிரபஞ்சத்தின் அடிப்படை என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. அதாவது, மனது, ஆன்மா போன்ற கருத்துகளுக்கு அப்பால், பொருள் மட்டுமே உண்மையானது. பொருள்தான் முதலில் தோன்றியது கருத்து அல்ல, பொருள்களில் ஒன்றான மனிதனின் மூலையில் படிப்படியாக பின்னாளில் கருத்து தோன்றியது என்று வரையறுப்பதன் மூலம் கடவுள் எனும் கருத்தை மார்க்ஸ் மறுக்கிறார். “பொருள் சார்ந்த உலகை (Materialistic World) மனித மூளை பிரதிபலித்த கருத்துக்களாக மாற்றுகிறது என்றும் ஐம்புலன்களால் ஏதோ ஒரு வகையில் உணரகூடியவைகளே பொருள்கள் ஆகும் அல்லாதவை கருத்துக்கள் ஆகும் என்பன இவரின் வரையறைகள். இறைவன் என்ற ஒரு கருத்தியலை உடைப்பதில்தான் பொருள்முதவாத கருத்தியலை தொடங்க முடியும். எனவே இதற்கான மூலத்தை ஃபயர்பெக் என்னும் நாத்திகர் எழுதிய "The Essence of Christianity" என்ற நூலின் மூலம் மார்க்ஸ் பெறுகிறார்.
மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் - இயங்கியல் மற்றும் பொருள்முதல்வாதம் என்கிற இரு தத்துவங்களை ஒன்றோடொன்று பொருத்தி உலக இருப்பை, சமூக மாற்றங்களை வரலாற்று ரீதியாகப் மார்க்ஸ் விளக்க முயல்கிறார். இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டே தனது தத்துவங்களை மார்க்ஸ் வடிவமைக்கிறார். அவை தத்துவத்தோடு நின்றுவிடாமல் சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் நீள்கிறது. இன்னும் மார்க்சியம் மட்டுமல்ல கம்யூனிச தத்துவத்தை உள்வாங்கிய அனைவரும் இந்த அடிப்படையின் மீதுதான் அவர்களின் சிந்தனை கோட்டையை கட்டினார்கள், கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் நீட்சி தத்துவங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை, காரணம் அடிபபடியே பிழை என்கிறபொழுது இந்த அடிப்படையை கொண்டு நீட்சியாக உருவாக்கப்பட்ட தத்துவங்கள் சரியா என்று ஆய்வு செய்ய வேண்டியதில்லை. ஒருவேளை அவர்களின் பயணம் இந்த அடிபப்டைக்கு முரண்படும் தாதிவத்துக்கு அவர்களை நகர்த்தி இருந்தால் அப்பொழுது அந்த நீட்சிகளை ஆய்வு செய்யலாம். ஆனால் மார்க்ஷியம் இந்த அடிபப்டைகள் மீது தான் கட்டி எலிப்பப்பட்டுளள்து என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவம் பற்றி ஆய்வு செய்தல் கட்டுரையின் நோக்கத்தை பூர்த்தி செய்ய போதுமானது.
இயங்கியல் தத்துவம் பொறுத்தவரை, உலகமும் உலகில் உள்ள பொருட்களும் சதா காலமும் இயங்கி கொண்டே இருக்கின்றது என்பதை சமய நூல்கள் மறுக்க வில்லை. இறைக்கோட்பாடும் மற்றும் சமயங்களின் முதல் கருப்பொருளும் அதன் நோக்கமும் இந்த தத்துவத்தை விரிவாக விளக்குவது அல்ல. ஆனாலும் இயக்கவியலின் கூறுகள் சமய நூங்களில் பரவி கிடப்பற்கான பல சான்றுகளை தர முடியும், மேலும் மதங்கள் முழுமையாக மாறாநிலை தத்துவத்தை [Metaphysics] தாங்கி நிற்கிறது என்ற முடிவுக்கு வருவது அறியாமையின் வெளிப்பாடு.
இறை மறுப்பிற்கான மூலமாக எடுத்து கொள்ளப்பட்ட நூல் கிறிஸ்தவம் தொடர்பான செய்திகளை அடிபபடையாக கொண்டது. கிறிஸ்தவ சமயமும் அதன் கோட்பாடும் உலகம் முழுவதுமான இறை கோட்பாட்டிற்கான பிரதிநிதி அல்ல. கிறிஸ்தவ இறை கொள்கைக்கும் கருத்துக்களுக்கும் முரண்படும் சமயங்கள் பல உள்ளது. துருக்களை நீக்கி சரியான இறை கொள்கையை புரிந்து கொள்ளும் வழிமுறையை புனித நூல்கள் வரையறுத்துள்ளது. அந்த வரையறையை அறிந்து அதன் அடிப்படையில் நோக்கும் பொழுது முதலில் உண்டானது பொருளா அல்லது கருத்தா என்கிற குழப்பம் தீரும். கருத்து முதலாக இருக்கவே முடியாது என்பதற்கான காரணம் அதை சுமந்திருக்கும் மனிதன் என்கிற பொருள். மனிதன் இல்லாமல் எப்படி அந்த கருத்து உருவாகி இருக்க முடியும்? என்கிற வாதம் ஆகும்.
மார்க்சியம் ஏற்றுகொண்ட அறிவியல் விதிகள் என்னவென்றால் பொருளும் (Law of Conservation of Mass) ஆற்றலும் (Law of Conservation of Energy) அழிக்கப்பட முடியாது ஆனால் அது மற்றொன்றாக மாறும் என்பதாகும். இதன் பொருள் இவை இரண்டும் ஆதி அந்தம் அற்றவை. எனவே தொடக்கமும் முடிவும் இல்லாத விடயங்கள் அறிவியலின் அடிப்படையில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதை அடிப்படையாக கொண்டு இறைவனின் இருப்பை உறுதி செய்ய முடியாது என்று கூறலாம். ஏனென்றால் ஒரு பொருளில் இருப்பை அறிவியல் ரீதியாக இரண்டு வகைகளில் உறுதி செய்ய முடியும். 1- நோக்கி அறிதல் 2- நோக்கி அறிந்ததை கொண்டு யூகித்து அறிதல் என்பதாம். முதலில் ஆதி அந்தம் இல்லாமல் ஒரு பொருள் இருக்க முடியும், இரண்டு நோக்கி அறிந்ததை கொண்டு காணமுடியாததை யூகித்து அறிய முடியும். பொருள் முதல்வாதம் மறுக்கும் பொருளின் இருப்பை யூகித்து அறிய இன்னும் பல நூறு நோக்கி அறிந்த ஆதாரங்களை சமர்பிக்க முடியும். அது வேறொரு கட்டுரையில்.

மார்க்சியத்தை பின்பற்றிய ஜார்ஜ் சோரேல் என்பவரால் சிண்டிகலிசம் உருவாக்கப்பட்டது. சிண்டிகலிசம் என்பது தொழிலாளர்கள் புரட்சி மூலம் மாற்றத்தை தேடும் ஒரு தத்துவம் ஆகும். அதன் தீவிரவாத போக்கின் காரணமாக பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டு இருந்தது. சிண்டிகலிசத்தை கொண்டு கம்யூனிசத்தை கணிப்பது எவ்வளவு தவறான அணுகு முறையோ அதைவிட பலமடங்கு பிழையான அணுகுமுறை கிறிஸ்தவ மத குறைகளை கொண்டு ஒட்டுமொத்த இறைகோட்பாடையும் சமயத்தையும் மறுப்பதாகும். . இருநூறு ஆண்டுகளுக்கு முன் உலகில் உள்ள அனைத்து புனித நூல்களின் ஜெர்மன் அல்லது ஆங்கில பதிப்பு மார்க்ஸுக்கு கிடைத்து இருக்க வாய்ப்பில்லை என்பது நிதர்சனம். ஆக மற்ற சமயங்களின் தத்துவங்களை வாசித்து ஆய்வு சிஎய்யாமல் கிறிஸ்தவ தத்துவத்தை மற்றும் வாசித்து கடவுளை மறுக்கும் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையே பிழை என்று உணர முடிகிறது.
வேறுவகையில் சொல்வதென்றால் கிறிஸ்தவத்தில் உள்ள பிழைகளை கொண்டு உலக சமயங்களுக்கு பொதுவான இறைவனை மறுக்க துவங்கி அதை இயங்கியல் எனும் கோட்பாட்டோடு பொருத்தி, அதற்க்கு உலக சமயங்கள் இயங்கியலுக்கு முரண்படுகிறது என்கிற தவறான கருத்தை திணித்து உருவாக்கப்பட்டதுதான் மார்க்சியம். பொருள்முதல்வாதம் எனும் தத்துவத்தில் இருந்து உருவானது இறைமறுப்ப அல்ல, மாறாக இறைமறுப்பை விளக்க உருவானதுதான் பொருள்முதல் வாதம் ஆகும்.
பொதுவுடைமை தத்துவம் ஜியோனிசவாதிகளால் உருவாக்கப்பட்டதா?
நோக்கமின்றி எந்த ஒரு செயலும் செய்யப்படாது. ஆனால் மார்க்ஸின் வரலாற்றை படிக்கும்பொழுது அவரது நோக்கம் பிழையானது என்று எங்கும் சந்தேகிக்க முடியவில்லை. எனவே மார்க்ஸுக்கும் சியோனிசத்துக்கும் நேரடி தொடர்பு இருந்தது என்கிற கருத்துக்கு ஆதாரம் நமக்கு கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வருவதுதான் சரி ஆனால் மறைமுக தொடர்பு இருந்ததா என்று அறிய வேண்டிய அவசியம் இருப்பாதால் மார்க்ஸ் மீது கருத்து தாக்கம் செய்த சிலரை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
மார்க்ஸ் மீது தாக்கம் செலுத்திய நபர்கள்-
Immanuel Kant
-
Georg Wilhelm Friedrich Hegel
-
Ludwig Feuerbach
-
Adam Smith and David Ricardo
-
Jean-Jacques Rousseau
-
Charles Fourier and Henri de Saint-Simon
-
Pierre-Joseph Proudhon
-
Charles Darwin
-
Friedrich Engels
-
Lewis H. Morgan &
- Moses Hess
ஆய்வில் உற்று நோக்கப்பட வேண்டிய நபராக மோசஸ் ஹெஸ் [Moses Hess] தோன்றுகிறார். ஏன்?
- இவர் கருத்தியல் ரீதியாக மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் மீது கருத்து அதிகம் தாக்கம் செலுத்தியவர்.
- இவர்தான் சியோனிஸத்தை உருவாக்கிய தியோடர் ஹெர்ஸல் (Theodor Herzl) மீதும் கருத்து ஆதிக்கம் செலுத்தியவர்.
- ஹெஸ் ஒரு யூதராக மட்டுமல்லாமல் ஆரம்ப கால தீவிர சியோனிசவாதியாக மட்டுமல்லாமல் அது தொடர்பாக பல நூல்களை எழுதி சியோனிச சிந்தனை தாக்காத்தை யூதர்கள் மத்தியில் எற்ப்படுத்தியத்தில் பெரும் பங்கு உடையவர்.
காந்தி கொலையுண்ட பிறகு RSS மற்றும் Godsay இடையே எந்தவித தொடர்புமில்லை என்று நடத்தப்பட்ட நாடகம் போல பின்னாளில் மார்க்ஸ் அவர்கள் ஹெஸ்-உடன் முரண் பட்டதை பார்க்க வேண்டியதில்ல என்றாலும் Mosas Hess கார்ல்மார்க்ஸ் மீது சிந்தனை தாக்கம் செலுத்தியவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி படுத்துகிறது.
மிக அடிப்படையான விடயம் என்னவென்றால் சரியான தத்துவத்தின் பக்கம் அதாவது ஒரு நேர்கோட்டில் மக்களை இணைப்பதுதான் தான் கடினமே தவிர, எட்டுத் திசைகளுக்கும் மக்களை சிதறடிக்க குழப்பமான சிந்தனை தூண்டுதல் போதுமானதாக அமையும். அந்தவகையில் மார்க்ஸ் ஹெஸ் உடன் முரண்பட்டாலும் சியோனிச கொள்கை உடையவருக்கு அவரது இலக்கு ஈடேறி அவருக்கு அது இலாபத்தைதான் கொடுத்துள்ளது என்றே கருதவேண்டி உள்ளது. ஏனென்றால் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்துவது சியோனிஸ்டுகள் அவர்களின் நோக்கத்தை அடைய அவர்கள் கையாளும் அணுகுமுறைகளில் மிகப் பிரதானமானது ஆகும்.
கற்பனாவாதத்திலேயே உழல்வது போல தெரிகிறதா? சியோன்களின் அவர்களுக்கு என்று ஏற்படுத்திய கையேடு நூலான protocol-இல் அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் ஒருவேளை உங்களுக்கு இந்த உண்மையை உணர்த்தலாம்.


யூத பயங்கர வாதிகளின் இரகசிய அறிக்கை போன்ற ஒரு முகம் தெரியாத யூக அடிப்படையில் அமைந்த நூலை எப்படி நம்புவது என்ற கேள்விக்கு ஹென்றி ஃபோர்ட் சொன்ன பதிலைத் தான் நானும் சொல்ல விரும்புகிறேன். "இந்த நூல் உண்மையா பொய்யா என்று உறுதிபட கூற ஆதாரம் என்னிடம் இல்லை ஆனால் இந்த திட்டங்கள் என் கண்முன் நடப்பதை என்னால் உணரமுடிகிறது"