ஒரு தமிழனாய் ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? சித்தாந்த ஒற்றுமை என்ன?

நன்மை தீமையை ஆய்ந்து அறிய வேண்டும்...!

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். - குறள் 511

- எப்படி தெரியுமா நன்மையையும் தீமையையும் பிரித்து வரையறை செய்ய முடியும்? 

சுயஅறிவும் நூலறிவும் சேர்தல் வேண்டும்!

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. - குறள் 636

- தமிழில் வேதம் (முதல் நூல் எனப்படும் கடவுள் மனிதனுக்கு பணித்தது- நன்னூல்& தொல்காப்பியம் பொருள் அதிகாரம் மரபியல்.94) உண்டு அவை என்னவென்று உனக்கு தெரியுமா?

அந்த நூலைத்தான் ஆய்ந்து அறியவேண்டும்! அவைகளின் சிந்தாந்த தொகுப்பு பின்வருமாறு

தமிழர் மதம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறது (திருமந்திரம் 2104) : அதாவது சாதி, மதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு இல்லை, பல கடவுள்களும் இல்லை.

- ஒவ்வொரு மதத்திற்க்கும் ஓர் தெய்வம் இல்லை :

எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே? - சிவவாக்கியர் 222

- சிலைகளை இறைவனாக வணங்க கூடாது - சித்தர் சிவாவாக்கியர் பாடல்கள்

செங்கலும் கருங்கலும் "சிவந்தசாதி லிங்கமும்"
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ! 35

பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! 36

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

- மறு ஜென்மம் பூர்வ ஜென்மம் என ஏதும் கிடையாது !!

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47

- ஆனால் மறுமை உண்டு !!

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)

மறுமை என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

- சோதிடம் பைத்தியகாரத்தனம் !!

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில். - நாலடியார் 52

புனிதமாக கருதப்படும் தாலி தமிழர் மதம் இல்லை 

அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை'''

19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் இந்துமத ஆதிக்கம் அதிகமானபிறகு தொடங்கியதே!

- வரதட்சணை கூடாது !!

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே! - அகநானூறு பாடல் 90 - மருதன் இளநாகனார்

திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ’விலை’(சீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர்.

- வட்டி பெரும்பாவம் !!

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
(திருமந்திரம் - முதல் தந்திரம் - 20, அறஞ்செயான் திறம் - பாடல் எண் 1.)

மனிதனின் பிறப்பே இறைவனை வணங்கத்தான் 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - குறள் - 01:09.

- அவனை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா? 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - நாலடியார் 001

- இத்தனையும் அறிந்தபிறகு ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? இவை அனைத்தும் இஸ்லாத்தின் சித்தாந்தம். இந்து மதத்திற்கு எதிரான கொள்கைகள்.

இந்து மதத்தில் இருந்துகொண்டு
சிலையை வணங்காமல் இருக்க முடியுமா?
சாதி இல்லை என்று சொல்ல முடியுமா?
தாலி வேண்டாம் என்றோ?
வரதட்சணை வேண்டாம் என்றோ?
ஆண் தான் பெண்ணுக்கு விலை கொடுக்க வேண்டும் என்றோ?
வட்டி கூடாது என்றோ?
சோதிடம் பொய் என்றோ?
மறு ஜென்மம் இல்லை என்றோ கூறிவிட முடியுமா?

"முடியாது" ஏனென்றால் இவைகள் தான் இந்து மதத்தின் அடிப்படைகள். ஒரு தமிழன் இஸ்லாமியனாய் இருந்தால்தான் தமிழனாக இருக்க முடியும். இந்துவாக அல்ல.

- ஏற்றுக்கொள்ளும் சித்தாந்ததில் பிழைகள் இருக்க கூடாது, பின்பற்றுபவர்களில் இருக்கத்தான் செய்யும். இது அனைவர்க்கும் பொருந்தும், தமிழனாய் இஸ்லாமிய கொள்கைகளே ஏற்றுகொள்ள சிறந்தது இணக்கமானது. முஸ்லிம்களிடத்தில் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் இஸ்லாமிய கட்டமைப்பு ஒரு தானியங்கி சமூக சுத்திகரிப்பு இயந்திரம் போல, தன்னை தானே அவ்வப்போது சீர்திருத்திகொள்ளும்.

- அரபி மொழி பிரச்னை என்றால் இந்துமதம் சம்ஸ்கிருத மொழியை புனிதமாக சொல்கிறது தமிழை சூத்திர மொழி என்கிறது. ஆனால் முகமது நபி அவர்கள் எந்த ஒரு அரபியும் எந்த ஒரு அரபி அல்லாதவரை விட சிறந்தவர் கிடையாது, மொழியால் சிறப்பில்லை, குலத்தால் சிறப்பில்லை, நிறத்தால் சிறப்பில்லை என்பதொடு நற்குணமும் இறை அச்சமுமும் அதிகம் கொண்டவரே சிறந்தவர் என்ற அவரின் முற்போக்கு போதனைகளை வாசித்தால் உனக்கு ஒருவேளை அறிவு வளரலாம்.

- இத்தனை கற்ற பிறகும் இதை அப்படியே விட்டுவிடலாமா என்றால்? 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - 391

ஹிந்துக்கள் மாடு சாப்பிடுவது இல்லை, என்றால் சில ஹிந்துக்கள் உண்ணுகிறார்கள், ஹிந்து மதத்தில் அனுமதி உள்ளதா?

"ஹிந்து" என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் என்ன? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் தான் "இந்து மதத்தில் பசு மாமிசம் உண்ண அனுமதி உண்டா?" என்ற கேள்விக்கான பதில்.

இந்து என்பது சமயத்தின் பெயரா? அல்லது பூகோள பெயரா?

பூகோள பெயரென்றால், நிச்சயமாக மக்களிடையே சமயங்கள் வேறுபடும், எனவே அதன் பண்பாடும் வேறுபடும். எனவே அதில் சிலர் பசு மாமிசம் உண்ணுவதில் ஆச்சரியம் இல்லை. அது அவர்களது பண்பாடு!

மேற்கண்ட தகவலின் படி ஹிந்து என்பது பூகோலப்பெயர். அதாவது சிந்துநதியை சுற்றி இருந்த மக்கள் என்று பெயர். இது பூகோலப் பெயர் என்றால் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல.

ஹிந்து என்பது ஒரு சமயத்தின் பெயரென்றால், அது ஒரு பாரம்பரித்துடன் இருக்கவேண்டும். தொல்காப்பிய முதல்நூல் வழிநூல் தத்துவம் உலக சமயம் அனைத்துக்கும் பொருந்தும். இதை உறுதிப்படுத்த, ரிக்வேதம் 350 ரிஷிகளாலாலும், எழுதப்பட்டது, பைபிள் 40 தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டுள்ளது, தமிழர் நூலான புறநானூறு கிட்டத்தட்ட 150 புலவர்களாலும், அகநானூறு 146 புலவர்களாலும், நற்றிணை 175 புலவர்களாலும், குறுந்தொகை 206 புலவர்களாலும், ஐங்குறுநூறு ஐவராலும், பாத்திற்றுப்பத்து எட்டு பேராலும், கலித்தொகை ஐவராலும் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும். ஒரு நூலை பலர் எழுதுவது எப்படி சாத்தியமானது? யார் வேண்டுமானாலும் இப்படி ஒருநூலில் பாடலை இணைத்துவிட முடியுமா? இல்லை. அதுதான் பாரம்பரியம். பின்னாளில் வரும் ஆசிரியரை பற்றி தீர்க்க தரிசனம் வழங்கப்பட்டு இருக்கும். இந்த செய்திகளை ரிக் வேதத்திலும், அவ்வையாரின் நல்வழியிலும், பைபிளிலும் காண முடியும். இது ஒரு நீண்ட தலைப்பு.

எனவே இந்து என்கிற சமயம் எங்கே? யாரால்? பாரம்பரியமாக பின்பற்றப் பட்டு வந்தது என்கிற தரவுகள் உள்ளது என்று ஆராய்ந்தால் அதன் மொழியும் நமக்கு சொல்வது தமிழர்களுக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை என்று. எனவே தமிழர்கள் பசுமாமிசம் உண்ணக் கூடாதென்று இல்லை. தமிழர்களைப் போல இந்து பாரம்பரியத்தை சாராத யாரும் பசுமாமிசம் உண்ணகூடாதென்று இல்லை.

சரி, இப்போ உண்மையில் இந்துக்கள் பசுமாமிசம் சாப்பிடக் கூடாதா? wiki

இனவெறி!


ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து, 
இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா?” 
என்று கேட்டார்கள். 

அதற்கு நபி அவர்கள்,

 “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” 
என்றார்கள். - நூல்: அஹ்மத்
    • இறைவன் ஞானம் வழங்கிய எந்த இஸ்லாமிய அறிஞரும் இன மத வெறியர்களாக இருக்கவில்லை.
    • உலக தீவிரவாத்தில் மிக சொற்பமாக இஸ்லாமிய தீவிர வாதிகள் இருந்த போதிலும்,  ஐ.எஸ் உட்பட அனைத்து தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அறிஞர்களும் பிரச்சாரம் செய்பவராகவே இருக்கின்றனர்.
    • கொடுமைகளுக்கு குண்டு வெடிப்பு போன்று தீவிரமாக மார்கத்திற்கு முரணான முறையில் எதிர்வினை ஆற்றிய ஒரு சிலர்ர்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் ஆதரிக்கவில்லை.
    • எத்தனையோ நிழல் உலக தாதக்கள் இந்த துணைக்கண்டத்தில் இருந்தும் ஒரு சில அரபி பெயர்தாங்கிகளை ஊடகங்கள் முன்னிலைபடுத்தி பேசி வருகின்றன ஆனால் அவர்களையும், கொலை கொள்ளை நிகழ்த்துபவர்களையும் அவர்கள் செயல்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் விமர்சிப்பவர்களாகவே கண்டனம் செய்பவர்களாகவே உள்ளனர்.
    • தினமும் அறிஞர் வாயிலாக இறைவனின் போதனைகளை கேட்கும் திருக்குரானை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்த உண்மை இது.
எனவே இஸ்லாம் இதை போதிப்பது மட்டுமின்றி அதிகார, மத, இன வெறி என அனைத்தையும் நடைமுறையில் தடை செய்துள்ளது.

பற்று வேறு வெறி வேறு.

அல்ஹம்துலில்லாஹ்.

இன்பமும் துன்பமும் இணைந்தே வரும்

தமிழர் சமயம்


இன்பம், இடர்என்று இரண்டுஉற வைத்தது;
முன்புஅவர் செய்கையி னாலே முடிந்தது;
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்புஇலார் சிந்தை அறம்அறி யாரே(திருமந்திரம் 267)

இன்பம், நன்மை, அறம் என்று நேராக மட்டுமே வகுத்துவைக்காமல் இன்பத்தோடு துன்பம், நன்மையோடு தீமை, அறத்தோடு மறம் என்று எதிராகவும் வகுத்து இரண்டையும் இணைத்தே வைத்தான் இறைவன். நன்மையோ தீமையோ, ஒருவர் முன்பு செய்தது எதுவோ அதுவே அவர்க்குப் பின்னும் விளைந்தது என்றால் எதைச் செய்யவேண்டும்? எதைச் செய்தால் அறமாகும் என்று அறியாமல் முட்டிக்கொள்கிற மூடர்களைப் பற்றி என்ன சொல்ல? அன்பைக் கொடுத்தால் இன்பம் விளையாதா?

இஸ்லாம்


நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. - (குர்ஆன் 94:5-7)

கிறிஸ்தவம் 


[கடவுளின்] கோபம் ஒரு கணம் மட்டுமே, அவருடைய தயவு வாழ்நாள் முழுவதும் இருக்கும். அழுகை இரவைத் தாமதப்படுத்தலாம், ஆனால் காலையில் மகிழ்ச்சி வரும். - (சங்கீதம் 30:5)

இரண்டு உலகம்

தமிழர் சமயம் 


இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. - (குறள் 374)

பதவுரை
இருவேறு உலகம் - மனித உலகம், அசுரர் உலகம் 
இயற்கை - இயல்பு, அமைப்பு, பண்பு; 
திரு வேறு - சிறப்பு வேறு; 
தெள்ளியர் ஆதலும் வேறு - ஞானம் பெறுதலும் வேறு.

பொருளுரை: இரு வேறு உலகத்தின் இயல்பு வேறு, அதன் சிறப்பு வேறு, அதில் அறிவுடையார் ஆதலும் வேறு. அதாவது அறிவின் தன்மையும் அளவும் வேறு வேறு.

இதில் "இருவேறு உலகம்" என்பதன் பொருளாக அனைத்து பொழிப்புரையாளர்களும் இவ்வுலகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் இருவேறு நிலைகளை குறிப்பிடுவதாக எழுதியுள்ளனர். ஆனால் அது இருவேறு இயற்கை இயல்பை குறிக்கிறது. 

"திரு"-வுக்கு செல்வந்தர் என்று குறிப்பிடும் உரையாசிரியர்கள், செல்வந்தருக்கு உலகத்தின் இயற்க்கை மாறுபடவில்லை என்பதை சிந்திக்க வில்லை என்றே கருதுகிறேன். ஞானம் பெற்றோருக்கும் பெறாதோருக்கும் உலகம் இரு வேறு இயற்கையை வழங்கவில்லை. ஞானம் என்பதே இயற்கையை புரிந்து கொள்ளும் அறிவுதான். எனவே இது இயற்கை மாறுபடும் இரு உலகை குறிப்பிடுகிறது. அது மனித மற்றும் அசுர (ஜின்) உலகமாக இருக்கலாம் அல்லது பூவுலக மற்றும் மேலுலகமாக இருக்கலாம்.

 

இஸ்லாம்


இஸ்லாம் ஒரே பூமியில் இரண்டு வகையான உலகத்தை குறிப்பிடுகிறது. மனித உலகம், ஜின்கள் உலகம். நம்முடைய உலகின் இயல்பும் சிறப்பும் நாம் அறிந்ததே. அதில் உள்ள ஞானத்தை அறியவே நாம் கல்வி கற்கிறோம். ஜின்கள் உலகம் பற்றியும் அதன் இயல்பு பற்றியும் இஸ்லாம் கூறும் செய்திகள் கீழே தொகுக்கப் பட்டுள்ளது.  

ஜின்னுலக இயற்கை  

நம் கண்களுக்கு புலப்படாத ஜின்கள் உலகம்  

ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்!

ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம்!

நம்முடைய கண்களுக்கு ஜின்கள் ஒரு போதும் தெரியாது ஆனால் விலங்குகள் கண்களுக்கு தெரியும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன! (நூல் : அபூதாவுத் : 4439)

ஜின் படைப்பு 

இந்த உலகில் அல்லாஹ் மனிதர்களை படைக்கும் முன்பே ஜின் இனத்தை அல்லாஹ் படைத்துவிட்டான்!

மனிதர்களை அல்லாஹ் மண்ணால் படைத்தான் என்றால் ! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்த்தவன் தான்! ஜின் இனத்தை அல்லாஹ் நெருப்பால் படைத்தான் ! (அல்குர்ஆன் :15 : 27 | 55 : 15 | 18 : 50)

உருவ அமைப்பு  

ஹதீஸ்களில் உள்ள செய்திகளை வைத்து ஜின்களில் மொத்தம் மூன்று வகையினர் உள்ளனர் !

1 ) நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ளவைகள்!
2 ) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழும் ஜின்கள்!
3 ) ஆகாயத்தில் பறக்கக்கூடிய ஜின்கள்! (நூல் : முஷ்கிலுல் ஆஸார் : 2473)

வசிப்பிடம்  
 
ஜின்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

1 ) இருட்டான இடங்கள்
2 ) பாழடைந்த இடங்கள்
3 ) பராமரிப்பில்லாத கட்டிடங்கள்
4 ) பராமரிப்பில்லாத மைதானங்கள்
5 ) பாலை வனங்கள்
6 ) அடர்ந்த காடுகள்
7 ) மலைகள்
8 ) ஓடைகள்
9 ) மையவாடிகள்
10 ) பாழடைந்த பள்ளிவாசல்கள்
11 ) கிணறுகள்
12 ) சமுத்திரங்கள்
13 ) வயல் வெளிகள்
14 ) சுரங்கங்கள்
15 ) பொந்துகள்
16 ) வீட்டின் முகடுகள்
17 ) மரங்கள்
18 )குகைகள்
19 ) ஒட்டகம் போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள்
20 ) அசுத்தமான (நஜீஸ்) இடங்கள் போன்றவைகளில் ஜின்கள் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. (நூல் : மஜ்முஉல் பதாவா : பாகம் 19 : பக்கம் 40 : 41)

உணவு  

ஜின்களும் மனிதர்களை போன்று உண்ணும் ஆனால் அவைகளின் உணவுகள் மாறுபடும்!

1) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியின் எலும்புகள்!
2) கெட்டியான சாணம்!
3) இது அல்லாமல் சில ஜின்கள் நம்மை போன்று நெருப்பு மூட்டி பாத்திரங்களை வைத்து சமைத்து சாப்பிட கூடியவைகளும் உண்டு! (நூல் : புகாரி : 3860 | முஸ்லீம் : 762 |திர்மிதி : 3311)

ஆற்றல்

நபி சுலைமான் (அலை) அவர்களிடம் ஒரு பலம் பொருந்திய ஜின் கூறியது : நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் பைத்துல் முகத்திஸில் ராணியின் சிம்மாசனத்தை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறிய ஒரு பலம் பொருந்திய ஜின் அதையும் செய்தும் முடித்தது! (அல் குர்ஆன்: 27 : 39)  
 
ஆனால் அல்லாஹ் அதற்கு பின்பு ஜின்களால் வானம் செல்ல முடியாத அளவுக்கு ஒரு பாதுகாப்பை உண்டாகினான் அது தான் நெருப்பு கல் (வால் நட்சத்திரம்) அவர்கள் வானம் பக்கம் சென்றால் அல்லாஹ் அவர்களை நெருப்பு கல் மூலம் விரடி அடிப்பான் அல்லது அதனை கொண்டு நெருப்பில் பொசுக்கி விடுவான் (அல்குர்ஆன் : 72:9)  
 
பெரும் பெரும் கட்டிடங்களை எந்த கருவின் உதவி இல்லாமல் அவைகளை கட்டி முடிக்க முடியும்! (அல் குர்ஆன் : 38 : 37)  
 

ஜின்னுலக ஞானம்   


ஜின்களுக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் 
 
மனிதர்களுக்கும் மற்றும் ஜின் படைப்புகளுக்கும் நேர் வழி படுத்த அல்லாஹ் நபிமார்களை அனுப்பி உள்ளான்!

ஜின்களில் நபி மார்களின் பேச்சை கேட்டு கட்டுப்பட்டவர்களும் உண்டு அவர்களை மறுத்துவர்களும் உண்டு! (அல்குர்ஆன் : 6 : 130)

 

மேலுலகம் 

இரு உலகம் என்று குறள் கூறுவது பூவுலகையும் மேலுலகையும் குறிப்பிடுவதாக இருந்தால், அதன் சிறப்பும் ஞானமும் வேறுபட்டே இருக்கிறது. 

மேலுலக இயற்கை  

(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - (திருக்குர்ஆன் 2:25

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒருநாள் தினம் ஹதீஸ் கூறிக் கொண்டிருந்த போது அவர்களுடன் கிராமப்புற மனிதர் ஒருவரும் கூட அமர்ந்திருந்தார். அப்போது ‘சுவனத்தில் விவசாயம் செய்ய ஒரு மனிதன் தனது இரட்சகனிடம் அனுமதி கோருவார். அதற்குப் பதில் தரும் வகையில் அல்லாஹ் நீ விரும்பியது (இங்கு) உனக்கில்லையா எனக் கேட்பான். அவர் ஆம். என்பார், அப்படியானால் நான் விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என அவன் அல்லாஹ்விடம் கூறுவான் (அதில் அவன் ஈடுபட்டதும்) அது உடன் முளைத்து, அதன் தளைகள் கண்பார்வைக்கு கவர்ச்சியானதாகி, அது நன்றாக வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையையும் எட்டி, மலைகள் போன்று ஆகிவிடும். அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ், ஆதமின் மகனே உன்னை நான் விட்டுவிடுகின்றேன். உன்னை எதனாலும் மன நிரப்பம் அடையச் செய்ய முடியாது என்று கூறுவான். உடனே அக்கிராமவாசி: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! விவசாயம் செய்ய விரும்பும் அந்த மனிதர் , ஒன்று குரைஷியராக அல்லது அன்ஸாரி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அவர்கள்தாம் விவசாயிகள், நாம் விவசாயிகள் அல்லவே! என்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் (புகாரி)

முடிவுரை

இரண்டு உலகம் என்பது இங்கேயே என்றால் அது மனிதர் மற்றும் அசுரர் (ஜின்) உலகை குறிக்கிறது. பூவுலக அல்லது மேலுலகை குறிக்கிறது என்று கருத முடியுமா என்று தெரியவில்லை. மேலும் வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. கீழுலகை அது குறிப்பிட வாய்ப்பில்லை ஏனென்றால் அங்கு எந்த "திரு"-வும் அதாவது சிறப்பும் இல்லை.

 

"தென்னாட்டுடைய சிவனே போற்றி" என்ற மாணிக்கவாசகர் கூற்றில் தென் நாடு எது? புரியும் படி விளக்கம் கொடுக்க முடியுமா?

திருமந்திரம் இதற்கான பதிலை தருகிறது!

ஏன் திருமந்திரம் சொல்வதை நம்ப வேண்டும்? ஏனென்றால் திருமந்திரம் ஒரு வேதநூல்!

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (10.01 பாயிரம் - 05. திருமூலர் வரலாறு, பாடல் 5)

திருமூலருக்கு குருவாக (நாதனாக) இருந்து திருமந்திர வேதத்தை தந்தவர் யார்? நந்தி!

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

எதத்னை நந்தி உண்டு? நான்கு!

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

இதில் திருமூலரின் ஆசிரியரான நந்தி யார்? எண்மர்!

இந்த நால்வரும் மனிதரா? பசுவா? தேவரா? தேவர்கள்!

சரி இந்த நான்கு பேரின் வேலை என்ன? ஒவ்வொரு திசைக்கும் குருவாக இருந்து வேதத்தை கொடுப்பவர்கள்!

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நால் விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

ஒவ்வொரு திசைக்கும் ஒரு நந்தி!

அதில் தென்னாட்டவர்க்கு இறைவனின் வேதத்தை உபதேசிக்க வந்த நந்தி தேவரின் பெயர் எண்மர்!

மற்ற மூவரும் மற்ற மூன்று திசைக்கு உறியவர்கள்!

இப்போ தென்னாடு என்பதை புரிய வேண்டுமென்றால், சைவ வேதம் என்னென்ன மொழிகளில் உண்டு என்று அறிவதால் கிடைக்கும்! தமிழில் மட்டும்தான். மற்ற மொழிகளில் இதிலிருந்து தழுவி எழுதப்பட்டது, அதுவும் பொருள் புரியாமல்.!

தென்னாடு என்பது ஏறக்குறைய இந்தியா முழுவதும்! நான்கு திசைகளில் வடக்கு தெற்கை எங்கிருந்து பிரிப்பது? பூமிப்பந்தை சரியாக பிரித்தல் இமயமலைக்கு மேலே உள்ள பகுதி வடக்காகவும் கீழே உள்பகுதி தெற்க்காகவும் விளங்கும்! எப்படி?

இதற்கான ஆதாரங்கள்,

  • ஆரியர்கள் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிற வரலாற்று தகவல் வடக்கு என்பதை இன்னும் தெளிவாக பிரித்தது அறிவிக்கிறது.
  • சமஸ்கிருத மொழியின் இடமாக விக்கிபீடியா சொல்வது : சம்ஸ்கிருதத்தோடு ஒத்துப்போகும் மொழிகளாவன, இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் வேத சமஸ்கிருதத்தின் நெருங்கிய பழங்கால உறவினர்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் வடமேற்கு இமயமலையின் தொலைதூர இந்து குஷ் பகுதியில் காணப்படும் நூரிஸ்தானி மொழிகள், அத்துடன் அழிந்துபோன அவெஸ்தான் மற்றும் பழைய பாரசீக மொழிகள் - இரண்டும் ஈரானிய மொழிகள். சமஸ்கிருதம் இந்தியாவின் எந்த பூர்வீக மொழியின் இலக்கணத்தோடும் பொறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.
  • ரிக் வேதங்கள் முழுவதும் மாடு மற்றும் குதிரையினை பெருமை பேசுவதன் காரணம் ஸ்டெப்பி புல்வெளியில் கால்நடைகளை மேப்பதை தவிர வேறெந்த பொருளாதாரமும் கிடையாது.
  • இமயமலையில் உள்ள ஸ்ரீநகர் என்கிற ஊர் "திருநகர்" என்று முக்காலத்தில் வழங்கப் பட்டது என்கிற தகவல்
  • சிந்துசமவெளியில் தமிழன் மூல எழுத்துக்களோடு ஒத்துப் போகிறது என்கிற தகவல்

இதுவெல்லாம் போதுமான சான்றுகள்.

தமிழ் கூறும் நல்லுலகம் இமயமலைக்கு கீழயேயும், சமஸ்கிருதம் அதற்கு வெளியேயும் இருந்து வந்தது என்று.

எனவே தென்னாடு என்பது ஏறக்குறைய இன்றைய இந்தியா முழுவதும்! 

கர்மா

இந்து மதத்தில் கர்மா என்று அழைக்கப்படும் சொல்லுக்கு தமிழ் சமய நூல்களில் கருமம் என்றும், பைபிளில் கிரியை என்றும், இஸ்லாத்தில் அமல் என்றும் சொல்லப்படுகிறது. 

அது அல்லாமல் செயல், வினை, தொழில், வேலை, காரியம் போன்ற வார்த்தைகளாலும் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் Deeds, Actions, doings போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப் படுகிறது.

கருமம் இருவகைப்படும் அவை வெவ்வேறு மொழியில் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு சொற்க்களால் அடையாள படுத்தப்பட்டுளள்து. அவையாவன,

அறம் மறம்
நல்லறம் புல்லறம் 
நற்செயல் தீச்செயல்
சரி தவறு 
பாவம் புண்ணியம்
நீதி அநீதி
நியாயம் அநியாயம்
கிரமம் அக்கிரமம் 
ஹலால் ஹராம்
அனுமதிக்கப்பட்டது தடுக்கப்பட்டது 

இவைகள் பெரும்பாலும் அனைத்து பண்பாடுகளிலும் ஒரே வரையறையுடன் காணப்படுகிறது. அவைகளின் பட்டியல் ஆதாரங்களுடன் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 

இந்துவோ, தமிழரோ, முஸ்லீமோ, கிறிஸ்தவனோ அல்லது அவர் எந்த சமையத்தை சார்ந்தவராகிலும், தான் எதை நம்புகிறானோ குறைந்தபட்சம் அந்த நம்பிக்கையின் படி எது சரியோ அதைச் செய்யவும், எது பாவமோ அதை விட்டு விடவும் ஆர்வம் ஏதுமமின்றி, அடுத்தவர் நம்பிக்கையையும் சமையத்தையும் நோக்கி விரல் சுட்டுவதும், பொறாமைப்படுவதும், வெறுப்பை உமிழ்வதும் யாருக்கு என்ன பயனைத் தரும்? 

ஆய்வாளர்கள் பெரும்பாலும் பண்பாடுகளிடையே உள்ள வேற்றுமையை மட்டுமே முதல் பொருளாக கைக்கொண்டு பட்டியலிட முனைந்துள்ளார். ஆனால் ஒற்றுமையயை பட்டியலிட்டு அவற்றை மக்களிடையே செயல்பாட்டுக்கு கொண்டுவர இயன்றால் அது மகத்தான சமூக இணக்கப்பாட்டிற்கு வழிவகுக்கும். 

கருமங்களில் நல்லதும் தீயதும் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளது. 

வரதட்சனை


 தமிழர் சமயம் 

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே - (அகநானூறு பாடல் 90)- மருதன் இளநாகனார்

பொருள்: திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ‘’விலை’’ (ஸ்ரீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர்.

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், 5
பெறல் அருங் குரையள் ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், 10
தருகுவன் கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே? (அகநானூறு 280)

பொருள்: பொன்னால் செய்து வைத்தது போல் பூத்துக் கிடக்கும் செருந்திப் பூக்கள் பலவற்றை இவள் தலையில் அணிந்திருக்கிறாள். 

திண்ணிதாக இருக்கும் மணலில் நண்டை ஓடும்படிச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

வளையல் அணிந்த இந்தச் சிறுபெண்ணைப் பெறற்கரிய பொருள்களைக் கலம் கலமாக கட்டிக் கொடுத்தாலும் இவளைப் பெறமுடியாது.

எனவே ஒன்று செய்யலாம். 

நான் வாழும் ஊரை விட்டுவிட்டு இவள் தந்தைக்கு அறம் செய்யலாம். 

இவள் தந்தை உப்பு உழவு செய்யும்போது உடனிருந்து உழைக்கலாம். 

கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனுடன் மீன் பிடிக்கச் செல்லலாம். 

அவனுடன் படுத்து உறங்கலாம், அவனைப் பணிந்து நடந்துகொள்ளலாம். அவன் கூடவே இருக்கலாம். 

அப்படி இருந்தால் அவன் இவளை எனக்குத் தரக்கூடும்.

அவன் கொடையாளி. கடலில் மூழ்கி எடுத்துத் தான் கொண்டுவந்த முத்துக்களை, தேனீக்கள் மொய்க்கும் கரையில் எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பண்பு கொண்டவன்.  

கானலம் பெருதுறையின் தலைவன். பரதவன். இவளுக்குத் தந்தை. இவன் எனக்கு இவளைத் தந்துவிடுவான். இப்படித் தலைவன் நினைக்கிறான்.  


இந்து மதம் 

அர்ஷா திருமணம் 

ஆர்ஷவிவாஹா என்பது திருமணத்தின் நீதியான வடிவம். ஒரு மணமகனிடமிருந்து ஒரு ஜோடி கால்நடை, ஒரு மாடு மற்றும் ஒரு காளை அல்லது இரண்டு ஜோடிகளைப் பெற்ற பிறகு, ஒரு மனிதன் தனது மகளை மணமகளாகப் பரிசளிக்கும் ஒரு வகையான திருமணமாகும். முன்னாள் மகள் விற்பனை. ஒரு ஜோடி பசுக்களுக்கு ஈடாக ஒருவரின் கன்னி மகளை மணமகளாக வழங்குமாறு யாக்ஞவல்கிய முனிவர் பரிந்துரைக்கிறார்.

அசுர திருமணம் 

அசுரவிவாஹா என்பது மணமகன் தன்னால் இயன்ற செல்வத்தை மணமகள் மற்றும் அவளுடைய உறவினர்களுக்கு வழங்கிய பிறகு, ஒரு கன்னியைப் பெறுவது ஒரு வகையான திருமணமாகும். 

 

கிறிஸ்தவம் 

Jacob loved Rachel. And he said, “I will serve you seven years for your younger daughter Rachel.” Laban said, “It is better that I give her to you than that I should give her to any other man; stay with me.” So Jacob qserved seven years for Rachel, and they seemed to him but a few days because of the love he had for her. (Genesis 29:18-20) 
 
யாக்கோபு ராகேலை நேசித்தார். அதற்கு அவர், “உன் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உனக்கு சேவை செய்வேன்” என்றார். லாபான், “நான் அவளை வேறு ஒருவருக்குக் கொடுப்பதைவிட, அவளை உனக்குக் கொடுப்பது நல்லது; என்னுடன் இருங்கள்." ஜேக்கப் ராகேலுக்காக ஏழு வருடங்கள் பணிபுரிந்தார், அவர் அவள் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக அவை அவருக்கு சில நாட்களே தோன்றின.(ஆதியாகமம் 29:18-20)

Ask me a great amount for a dowry, and I will give whatever you ask of me, but give me the young lady as a wife.” (Genesis 34:12 WEB)

வரதட்சணையும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான். (ஆதியாகமம் 34:12)   

இஸ்லாம்

‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

“எனவே, அவர்களது எஜமானர்களின் அனுமதியுடன் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக்கொடைகளை நல்ல முறையில் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.” -(4:25) 

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்.’ (குர்ஆன் 33:50) 
 

வரதட்சணையை மறுப்பவனே வெறுப்பவனே

மனிதன்.
ஆண்மகன்.
தமிழன்.
முஸ்லிம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்


தமிழர் சமயம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே(திருமந்திரம் 2104)

பதவுரை 
ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.
ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது
நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.
நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..
நாணாமே = வெட்கப் படாமல்
சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை
நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

பொருளுரை 
ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. - புறநானூறு : 192

பதவுரை
யாதும் – அனைத்தும்; ஊரே - நமது ஊர் தான்
யாவரும் – அனைவரும்; கேளிர் - நமது உறவினர்
தீதும் - தீயவையும் (நமக்கு நேரும் தீமையும்)
நன்றும் - நல்லவையும் (நம்மைச் சேரும் நன்மையும்)
பிறர்தர - பிறர் தருவதால்; வாரா – வாராது, வருவதல்ல
நோதலும் - வருந்துவதும்
தணிதலும் - அது தீர்வதும்
அவற்றோர் - அவற்றை, முன் சொல்லியவற்றை
அன்ன - போல (உவம உருபு)
சாதலும் - சாவது
புதுவது - புதிது
அன்றே (அன்று + ஏ): அன்று - இல்லை
வாழ்தல் - வாழ்தல்
இனிதுஎன - இனியது என
மகிழ்ந்தன்றும் – மகிழ்வதும்; இலமே - இல்லை
முனிவின் - வெறுப்பு ஏற்பட்டு (முனிவு - வெறுப்பு, வருத்தம்)
இன்னாது - துன்பம் மிக்கது (வாழ்வு துன்பம் மிக்கது)
என்றலும் - என்று சொல்வதும்; இலமே - இல்லை
மின்னொடு - மின்னலுடன்
வானம் - வானம்
தண்துளி: தண் - குளிர்ந்த; துளி - மழைத்துளி
தலைஇ - பெய்வதால் (தலைதல் - மழைபெய்தல்)
ஆனாது – விடாமல், தொடர்ந்து
கல்பொருது - கல்லுடன் மோதி (பொருதுதல் - மோதுதல், போர்செய்தல்)
இரங்கும் - ஒலிக்கும் (இரங்குதல் - ஒலித்தல்)
மல்லல் - வலிமை மிக்க
பேர்யாற்று (பெரிய + ஆற்று) - பெரிய ஆற்றின்
நீர்வழி - நீரின் ஓட்டத்தின் வழியே
படூஉம் – செல்லும், பயணப்படும்
புணைபோல - மிதவை போல (புணை - தெப்பம்)
ஆருயிர் (அருமை + உயிர்) - இந்த அரிய உயிர்
முறைவழி - விதியின் வழியே
படூஉம் - செல்லும், பயணப்படும்
என்பது - என்பது
திறவோர் - திறம் கொண்டு அறிந்தோர் (பகுத்தறிந்தோர்)
காட்சியின் - நூலின் மூலம், தந்த அறிவின் மூலம்
தெளிந்தனம் - தெளிவு பெற்றோம்
ஆகலின் - ஆனதால்
மாட்சியின் - பெருமை மிக்க
பெரியோரை - பெரியவர் என்று
வியத்தலும் - வியந்து அடிபணிவதும்; இலமே - இல்லை
சிறியோரை - சிறியோர் என்று
இகழ்தல் - இகழ்ந்து பழித்தல்
அதனினும் - அதனை விட (பெரியோர் என அடிபணிதலை விட)
இலமே - இல்லை
 
பொருளுரை
அனைத்தும் நமது ஊர் தான்; அனைவரும் நமது உறவினரே. நமக்கு நேரும் தீமையும், நம்மைச் சேரும் நன்மையும் பிறர் தந்து வருவதல்ல; நாம் எற்படுத்திக் கொள்வது. அதுபோல் தான் நமது துயரமும், அதன் தீர்வும். சாவும் புதிது அல்ல; நமது பிறப்பின் பொழுதே உறுதியாகிவிட்ட ஒன்று. வாழ்வதே இனிது என்றோ, வாழ்வின் இனிமையான பொழுது நிலையானது என்றோ மகிழ்வதும் இல்லை; வெறுப்பு ஏற்பட்டு இந்த வாழ்வு துன்பம் மிக்கது என்று சொல்வதும் இல்லை. மின்னலுடன் வானம் குளிர்ந்த மழை பெய்வதால் முடிவில்லாது கல்லுடன் மோதி ஒலிக்கும் வலிமை மிக்க பெரிய ஆற்றின் நீர் ஓட்டத்தின் வழியே செல்லும் மிதவையைப் போல இந்த அரிய உயிரும் விதியின் வழியே செல்லும் என்பது திறம் கொண்டு பகுத்தறிந்தோர் தந்த அறிவின் மூலம் தெளிவு பெற்றதனால், சிறப்பு மிக்க பெரியோர் என்று யாரையும் வியந்து அடிபணிவதும் இல்லை; அதைவிட, சிறியோர் என்று யாரையும் இகழ்ந்து பழித்தலும் இல்லை. 

இஸ்லாம்

இன்னும், நிச்சயமாக உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் (என்றும் கூறினோம்). - (குர்ஆன் 23:52)

உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். (குர்ஆன் 21:92)

(ஆரம்பத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கை வழி நடக்கும் சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் தோன்றவே) நேர்வழியில் செல்வோருக்கு நற்செய்தி அறிவிப்போராகவும், (தீயவழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் தனது தூதர்களை அனுப்பி வைத்தான். மேலும், மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விசயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காக சத்திய வேதத்தையும் தன்இறைதூதர்களுக்கு அல்லாஹ் அருளினான்.'' (அல்குர்ஆன் 2:213)

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். - (அல்குர்ஆன் 49:13) 

கிறிஸ்தவம் 

நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும். ஆதியாகமம் 9:8&9

முடிவுரை

கிறிஸ்தவத்தில் இஸ்லாத்திலும் உள்ள "மனிதன் படைக்கப் பட்டவன்" என்கிற கருத்தும் "குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் அல்ல" என்கிற கருத்தும் பல காரணங்களால் விமர்சிக்கப்படுகிறது. அதில் ஒன்று, ஒரே ஜோடியிலிருந்து எப்படி மனித இனம் பெருகியது? சகோதரர்களும் சகோதரிகளும் மணமுடித்தால் தான் இது சாத்தியம். இந்த நடைமுறை மனித ஒழுங்குக்கும் சிந்தனைக்கும் மாற்றமாகவும் ஆபாசமாகவும் உள்ளது என்பது தான் அது. 

ஆனால் அனைத்து பண்பாட்டின் ஆரம்ப கால நூல்களும் இவ்வாறுதான் சொல்கிறது. அனைவரும் உறவினர்கள் என்பதும், ஒரே குலத்தை சார்ந்தவர்கள் என்பதும் எப்படி சாத்தியம்? எனவே ஒழுக்கம் என்பதும் அறம் என்பது காலத்துக்கு காலம் மாறுபடும் ஆனால் அது இறைவனால் வகுக்கப் படுமே தவிர மனிதர்களால் அல்ல. 

(பின்னர்) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:38)

மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். (திருக்குர்ஆன் 2:213)

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். (திருக்குர்ஆன் 2:4) 

“...உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.” (திருக்குர்ஆன் 23:50)

வட்டி

தமிழர் சமயம்


திருமூலர் திருமந்திரம்

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. (திருமந்திரம் - முதல் தந்திரம் - 20 அறஞ்செயான் திறம்-1.)

(பொழிப்புரை)  மரத்தின் உயரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிவதற்கு ஒப்பானது, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மூலம் சம்பாதித்தவை, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டு ஒழிவதே ஆகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.

(குறிப்புரை)  பட்டி - பட்டிமை(களவு); அஃதாவது வேண்டியவாறே ஒழுகுந்தன்மை. பொருள் முட்டுவந்துழி அது நீங்குதற்பொருட்டுத் கடன் கொள்பவர்பால் அம் முட்டுப்பாடே காரணமாக அவர் பொருளை `வட்டி` என்னும் பெயரால் தாம் வேண்டும் அளவு பறிப்பார், தம் பொருளைப் பிறர்க்கு ஈயாதவரினும் கொடியராதல்பற்றி அவரை, `பட்டிப் பதகர்` என்றார்.
பதகன், பெயர்ச்சொல்.: கொடும்பாவி, கீழ்மகன்

திரிகடுகம் 

தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,
நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும்
இம் மூவர் ஆசைக் கடலுள் ஆழ்வார். - (நல்லாதனார் திரிகடுகம் 81)

(பொருள் : வாசி - வட்டி, துறை - நீர்த் துறை)

பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், வட்டிக்கு கொடுத்துப் மிகுதியான பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவார்.

தமிழ் பழமொழி : வட்டி ஆசை முதலுக்கு கேடு.

இஸ்லாம்


ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.- (அல்குர்ஆன் 3:130)

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நீண்ட காலம் தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:276)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் 30:39)

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அல்குர்ஆன் 4:161)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! “அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.”
(அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி) புஹாரி 2085)

வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.)

கிறிஸ்தவம் 


உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். - (யாத்திராகமம் 22:25)
 
வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி,  - (எசேக்கியேல் 18:8)

 வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை,  - (எசேக்கியேல் 18:13)

தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை  - (ங்கீதம் 15:5)
 



யூதர்களின் வட்டி திட்டம்




பெரும் பாவங்கள்

தமிழர் சமயம் 


கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே 

பொழிப்புரை

1) பிற உயிரைக் கொல்லுதல்,
2) பிறர் பொருளைக் களவு செய்தல்,
3) கள்ளுண்டல்,
4) நெறிநீங்கிய காமத்து அழுந்தல்,
5) பொய் கூறல்`

என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம். 



இஸ்லாம் 


1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. உறவினர்களை வெறுத்தல்
10. விபச்சாரம்
11. ஆண் புணர்ச்சி
12. வட்டி
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
16. தலைவன் அநீதி செய்தல்
17. பெருமை
18. பொய்ச்சாட்சி கூறல்
19. மது அருந்துதல்
20. சூது
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
22. மோசடி செய்தல்
23. களவு
24. வழிப்பறி
25. பொய்ச் சத்தியம்
26. அநீதி இழைத்தல்
27. கப்பம் பெறல்
28. தகாத உணவு
29. தற்கொலை
30. பொய்
31. கெட்ட நீதிபதி
32. அதிகாரியின் இலஞ்சம்
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
34. கூட்டிக் கொடுத்தல்
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
37. முகஸ்துதி
38. கற்ற கல்வியை மறைத்தல்
39. சதி செய்தல்
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
41. விதியைப் பொய்ப்படுத்தல்
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்
43. கோளுரைத்தல்
44. திட்டுதல் (சபித்தல்)
45. வாக்கு மாறுதல்
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
47. கணவனுக்கு மாறு செய்தல்
48. உருவப் படம் வரைதல்
49. ஒப்பாரி வைத்து அழுதல்
50. கொடுமை செய்தல
51. வரம்பு மீறுதல்
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
54. துறவிகளைத் துன்புறுத்தல்
55. மமதையும், தற்பெருமையும்
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
57. அடிமை ஒளிந்தோடல்
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
60. மேலதிக நீரைத்தடுத்தல்
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆவைத் தவற விடல்
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்

எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும். - (குர்ஆன் 32:20)

விதி

தமிழர் மதம் 


ஈண்டு நீர் வையத்துள், எல்லாரும், எள்துணையும்
வேண்டார்மன், தீய; விழைபமன், நல்லவை;-
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டாவிடுதல் அரிது.. - (நாலடியார் 109)

 (பொ-ள்.) ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது - மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.

(வி-ம்.) மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில் யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் (விதியினால்) அவர்கள்பால் வந்து அடையகூடியது நன்மையோ தீமையோ அடையாமல் விடுதல் இல்லை.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். - 380

பரிமேலழகர் உரை: மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?  

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - 377

பரிமேலழகர் உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.

இஸ்லாம்


இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 57 : 22)

ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?'' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆம் (தெரியும்)'' என்று சொன்னார்கள். அவர் "அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள்? நற்செயல் புரிய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஒவ்வொருவரும் "எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது "எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல் : புகாரி 6596) 

”அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம் செய்கிறான்.கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் உவ்வொரு நிலை மாற்றத்தின் போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து ‘அலக்’ (கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக இருக்கிறது.இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது (1) ஆணா? பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா? (3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) நூல் புகாரி : 318) 

விதியை மதியால் வெல்ல முடியுமா?  முடியும்..!

பதவுரை: மதி - அறிவு, வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய செய்கடன். (சங். அக.)

நாயகம் (ﷺ) நவின்றார்கள்; “விதியை, ‘துஆ’வைத் தவிர வேறு எதுவும் மாற்றாது. ஆயுளை, நன்மையை தவிர வேறு எதுவும் அதிகரிக்கச் செய்யாது. ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்.” (ஆதாரம் இப்னு மாஜா: 4914)

 

கிறிஸ்தவம்


குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.

என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. (சங்கீதம் 139 :16)

எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை! பறவை வானில் பறப்பது உட்பட⁉

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. (மத்தேயு 10 :29)

முடிவுரை


ஊழ் எனப்படும் விதி உண்டென்றும் அனைத்தும் அவற்றின் அடிப்படையிலேயே நிகழுகிறது.