வேத ஆய்வு நடைமுறை

பொய் வேதங்கள் மூன்று முறைகளில் தோன்றி இருக்க வாய்ப்பு உண்டு 
  • இறைவாக்கில்லாமல் மனிதர்கள் எழுதிய நூல்கள் 
  • இறைவாக்கில் சிலவற்றை சேர்த்தும் சிலவற்றை நீக்கியும் மனிதர்கள் திரிபு செய்த நூல்கள்
  • எழுதப்படாமல் மனனமாக தலைமுறை தலைமுறையாக சொல்வழி கடத்தப் பட்டு மறதியினால் மாற்றப்பட்ட நூல்கள்

யூதர்களின் பொய் வேதம் பற்றி குர்ஆன்


அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை (தாலமுத்) எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (குர்ஆன் 2:79)

 மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (குர்ஆன் 2:78)

தமிழ் மரபு


வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். - 640

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - 641

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் - 642
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. (தொல்காப்பியம 3:643)

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் பார்க்கிறது

இதன் சுருக்கமான கருத்தானது, ஒரு செயலை செய்து பெரும் அனுபவ அறிவு அல்லாமல், கிடைக்கப் பெரும் அறிவு கொண்டு அறிவில் முந்தியவனால் எழுதப்படும் நூல் முதல் நூலாகும். வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். அதாவது வழிநூலை எழுதும் முனைவன் பிற்காலத்தை சார்ந்தவனாகவும், அக்காலத்தில்புழக்கத்தில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்துவர். 

இந்த அடிப்படையை கருத்தில் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது மெய்யிலிருந்து பொய்யை பிரித்து எடுக்க இயலும். ஆனால் இதற்கு மொழிப் புலமையும், வரலாற்று புலமையும், தத்துவ புலமையும் மிக மிக  அவசியம். மேலும் திருமந்திரம் உட்பட பலநூல்கள் மேலும் நுணுக்கமாக இந்தவரையரையும் அது அவ்வாறு பிரயோகப்படுத்துள்ளது என்பதை விளக்கமாகவும் நமக்கு தகவல்களாக தருகிறது. அதை மறைநூலின் வரையறையில் தெளிவாக விளக்கியுள்ளோம். 
 

தமிழர் சமயம் கூறும் எழுதா கற்பு


பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்
சொல் உள்ளும்
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.  - (குறுந்தொகை 156 - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.)

குறுந்தொகை பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது  

பொய்யிலிருந்து மெய்யை பிரிப்பதற்கு ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு நடைமுறை உள்ளது. ஆனால் வேதத்திற்க்கான வரையறையை அறிந்து கொள்வதன் மூலம் பொய்யை வடிகட்டுவது மிக எளிது. வெவ்வேறு மரபுகள் என்னென்ன வழிமுறைகளை கையாளுகிறது என்று பார்ப்போம். பிறகு சரியான முறை எதுவென்று பார்ப்போம். 

கிறிஸ்தவ வேத ஆய்வு நடைமுறைகள்

அடிப்படை விதிகள்

    1. வசனம் வசனத்தை விளக்கும்.(அப்போஸ்தலர் 17:11, ஏசாயா 28:9-10, 2பேதுரு 1:20)
    2. ஒரு கோட்பாட்டை நிறுவிட குறைந்தது இரு சாட்சிகள் தேவை.(2கொரிந்தியர் 13:1, வெளி 11:3)
    3. பூரண வேத ஒத்திசைவு தேடு. கண்டடைவாய். (மத்தேயு 4:4, 2தீமோத்தேயு 3:16-17)
    4. எழுதப்பட்டதைத் தாண்டி செல்லாதே. (1கொரிந்தியர் 4:6, வெளி 22:18)

விரிவான விதிகள்

    • மூல வேதம் எபிரேயு (பழைய ஏற்பாடு) / கிரேக்க (புதிய ஏற்பாடு) மொழிகளில் உள்ளது. தமிழில் படிக்கும்பொழுது பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புப்பதிப்புகளை படித்துப் பார்க்கவும்: எந்த ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்புப் பதிப்பும் முற்றிலும் சரியானது என சொல்ல முடியாது. அதனால் எந்தவொரு வசனத்தையும் பலவகைப்பட்ட மொழிபெயர்ப்புப் பதிப்புகளில் படித்து ஒப்பிட்டுப் பார்த்து, எந்த மொழிபெயர்ப்பில் அவ்வசனம் வேதாகமத்தின் பிற வசனங்களுடன் ஒத்திசைவாக உள்ளதோ, அதன் மூலம் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
குறிப்பு: தமிழில் பல பொழிபெயர்ப்புப் பதிப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் அளவு நிறைய வகைகள் இல்லை. அதனால் ஆங்கிலம் தெரியுமெனில், இந்த மூன்று வகையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு வகைகளை கலந்து பார்ப்பது நல்லது:
        • செயல்பாட்டு சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NIV New International Version.
        • முறை சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NASB New American Standard Bible.
        • கட்டற்ற மொழிபெயர்ப்பு - உதாரணம்: The Message Bible.
    • முக்கியமான எபிரேய/கிரேக்க வேதாகம வார்த்தைகளை புரிந்து கொள்ளவும்: இடைவரி மொழிபெயர்ப்பு (interlinear) மற்றும் சொற்பிறப்பியல் (etymology) தெரிந்துகொள்ள வைன்'ஸ் (Vine's) மற்றும் ஸ்டராங்'ஸ் (Strong's) குறிப்புகள் பார்த்து, விளக்கவுரை செய்யவும்.
    • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஓர் வார்த்தையின் சரியான விளக்கத்தை வசனங்களே அருளும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    • முரண்பாடாகத் தென்படும் வசனங்களை சரிதீர்க்க வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) சரிபார்க்கவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
    • எந்த ஒரு கோட்பாட்டையும் ஒன்றிற்கு மேலான வசனங்களின் ஆதரவுடன் நிறுவவும். (அடிப்படை விதி #2 பார்க்கவும்).
    • வசனங்களை சூழல் பொருத்தம் (context) பார்த்து படிக்கவும். வசனத்தின் நுண்சூழலும் (micro context), பெருஞ்சூழலும் (macro context) கருத்தில் கொள்ளவும். 
    • எந்தவொரு விசயத்திலும், நேரடியாக விசயத்தை சொல்லும் (direct statements) வசனங்கள் பொருள் விளக்கவேண்டிய (interpretative) வசனங்களை விட முன்னுரிமை பெறும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).
    • வசனங்களில் உள்ள அடையாளங்களையோ, உவமைகளையோ, உருவகங்களையோ நிஜம் எனத் தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. மேலும், வேதத்தில் ஒரு பகுதியினை அடையாள பொருள் எனக் கருதினால், சீராக அப்பகுதியில் உள்ள அனைத்தையும் அடையாளமாக கருத வேண்டும். மாறாக, அப்பகுதியில் பாதி விசயங்களை அடையாளங்களாகவும், பாதி விசயங்களை நிஜங்களாகவும் கருதக்கூடாது.
    • வேத அடையாளங்கள், உவமைகள், மற்றும் உருவகங்களுக்கு சொந்தமாய் யோசித்து விளக்கம் சொல்லாமல், மற்ற வசனங்களைப் பயன்படுத்தி விளக்கவும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    • புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்க வேண்டும்.
    • எபிரேயர் 6:1-2 வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் கொள்ளவும்: "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசங்கள்... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரம்."
குறிப்பு: இந்த கிறிஸ்தவஆய்வு நடைமுறை பைபிளுக்குள்ளேயே ஆய்வுகளை மேற்கொள்ள பயன்படுகிறதே தவிர உலக வேதங்களோடு ஒப்பீட்டாய்வு செய்ய பயன்படாது.அதிலும் கூட இந்த வழிமுறை முற்றிலும் பிழையானது ஏனென்றால் அடிப்படையிலேயே சில பிழை உள்ளது.
    • இயேசு பேசிய மொழி அராமிக், கிரேக்கம் அல்ல. 
        1. வீட்டஸ் சைரா (பழைய சிரியாக்) , கிரேக்க மொழியிலிருந்து ஆரம்பகால கிளாசிக்கல் சிரியாக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதில் 4 சுவிசேஷங்களின் பெரும்பாலான-ஆனால் அனைத்துமே இல்லை— குரேடோனியன் சுவிசேஷங்கள் மற்றும் சைனாய்டிக் பாலிம்ப்செஸ்ட் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
        2. கோடெக்ஸ் கிளைமாசி ரெஸ்கிரிப்டஸ் , கோடெக்ஸ் சினைட்டிகஸ் ரெஸ்கிரிப்டஸ் மற்றும் பிற்கால சொற்பொழிவுக் குறியீடுகள் (வாடிகன் சர். 19 [A]; செயின்ட் கேத்தரின் மடாலயம் பி, சி, டி) போன்ற கையெழுத்துப் பிரதிகளில் கிறிஸ்தவ பாலஸ்தீனிய அராமிக் லெக்ஷனரி துண்டுகள் குறிப்பிடப்படுகின்றன.
        3. கிளாசிக்கல் சிரியாக் பெஷிட்டா , ஹீப்ருவின் (மற்றும் சில அராமிக், எ.கா. டேனியல் மற்றும் எஸ்ராவில்) பழைய ஏற்பாட்டின் அராமைக் [ மேற்கோள் தேவை ] ஒரு ரெண்டரிங், மேலும் புதிய ஏற்பாடு அதன் அசல் அராமிக் மொழியில், இன்னும் பெரும்பாலான சிரியாக் தேவாலயங்களில் தரமாக உள்ளது.
        4. தி ஹர்க்லீன் , கிரேக்க மொழியில் இருந்து கிளாசிக்கல் சிரியாக் மொழியில் ஹர்கெலின் தாமஸ் எழுதிய கடுமையான நேரடி மொழிபெயர்ப்பு
        5. அசிரியன் மாடர்ன் பதிப்பு , 1997 இல் வெளியிடப்பட்ட கிரேக்கத்திலிருந்து அசிரியன் நியோ-அராமிக் மொழிக்கு புதிய மொழிபெயர்ப்பு மற்றும் முக்கியமாக புராட்டஸ்டன்ட்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளது
        6. மற்றும் பல்வேறு பேச்சுவழக்குகளில் பல சிதறிய பதிப்புகள்
      • எனவே ஒரு மொழியில் உள்ள நூலை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் பொழுது மொழிபெயர்ப்பு விதிகள் பின்பற்றப் பட்டுள்ளதா என்பதை எந்த பதிப்போடு நாம் சரி காண்பது?. விதிகள் பின்பற்றப்படாத மொழிபெயர்ப்பில் கருத்துக் பிழைகள் நிச்சயம் நிகழும். ஆனால் மூலமே ஆறு வகை என்றால் எப்படி இதை நாம் கையாள்வது?
      • மூலமொழியில் உள்ள அத்தியாயங்களும் வசனங்களும் மொழிபெயர்ப்பு நூலில் உள்ளதா அல்லது சிலவைகள் நீக்கப் பட்டுள்ளதா என்றும் சரிக்கான முடியாது. 
      • மூலமொழியில் உள்ள செய்திகளோடு கூடுதலான வசனங்கள் அல்லது அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டுள்ளதா என்றும் சரிகாண முடியாது. ஏனென்றால் மூலமே இது போன்ற பிரச்சனைகளோடு உள்ளது.
      • உள்ளவைகளை ஆய்வு செய்தால் பெஷிட்டாவின் புதிய ஏற்பாட்டில் 22 புத்தகங்கள் உள்ளன, அவற்றில் யோவானின் இரண்டாவது நிருபம், யோவானின் மூன்றாவது நிருபம், பீட்டரின் இரண்டாவது நிருபம், யூதாவின் கடிதம் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகம் ஆகியவை இல்லை, அவை ஆன்டிலிகோமெனாவின் புத்தகங்கள். 'மேற்கத்திய ஐந்து' புத்தகங்கள் இணைக்கப்படுவதற்கு முன், கிழக்கு தேவாலயத்தின் புதிய ஏற்பாட்டின் நியதி மூடல் ஏற்பட்டது. அதன் நற்செய்தி உரையில் இயேசு மற்றும் விபச்சாரத்தில் எடுக்கப்பட்ட பெண் (யோவான் 7:53-8:11) மற்றும் லூக்கா 22:17-18 என அறியப்படும் வசனங்களும் இல்லை, ஆனால் 'மார்க்கின் நீண்ட முடிவு' உள்ளது. 
      • இயேசு காலத்தில் பைபிள் நிறைவு செய்யப் படாமல், வெவ்வேறு காலங்களில் அது மாற்றப் பட்டு கொண்டே வந்துள்ளது. ஆனால் அவ்வாறு மாற்றுவதற்க்கு அனுமதி இல்லை என்பதை பைபிளே கூறுகிறது. "எது உண்மையான பைபிள்?" எகின்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாம்

 அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (குர்ஆன் 4:82)

 மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (குர்ஆன் 16:44)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன். அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி) நூல்: அஹ்மத் 15478

 (நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கடுபட்டவன்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக்கூடாது? என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

    1. ஸஹீஹ் (ஆதாரபூர்வமானவை)
    2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
    3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
    4. ளயீப் (பலவீனமானது)
இவற்றில் ஸஹீஹ் மட்டுமே ஆதாரப்பூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,
நடைமுறைப்படுத்த வேண்டிய ஹதீஸ்களாகும்.

ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ (ஆதாரபூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில தகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, அறிவிப்பளரின் வரிசை. ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஹதீஸ்களை நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, நபிகள் நாயகம் தொடர்பான ஒரு செய்தியை ஒருவர் அறிவித்தால், தனக்கு அந்தச் செய்தியை கூறியது யார்? அவர் யாரிடம் கேட்டார்? அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார்? என்று சங்கிலித்தொடராக கூறிக்கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அதோடு,

    1. இந்த சங்கிலித்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
    2. அனைவரும் உறுதியான நினைவாற்றல் உடைவயர்களாக இருக்க வேண்டும்.
    3. அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    4. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்.
இந்தத்தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தால் மட்டுமே அதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஒப்புக்கொள்ளப்படும். அவ்வாறல்லாமல் அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே ஒரு சம்பவம் ஆதாரப்பூர்வமான ஹதீஸாக ஆக முடியாது. 
 

சனாதனம்


முடிவுரை

இதற்கு முன் கிறிஸ்தவமமும் திருக்குறளோடு ஒப்பிட்ட வரலாறும் அதன் மூலம் பிறந்த நூல்களும் இன்றுவரை உண்டு. இதனை ஏற்காத தமிழ் பற்றாளர்கள் சாடி பேசியும் எழுதியும் வருகிறார்கள்

அதேபோல இஸ்லாமியர்களும் உலக வேதங்களோடு தனது வேதத்தை ஒப்புநோக்கி பல நூல்கள் எழுதி வந்துள்ளனர். அவைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகாமல் இல்லை. 

மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து சமயங்களும்  ஒன்று மற்றொன்றோடு ஒப்பிடப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக, 

சில ஒப்பாய்வுகள்:
    1. இஸ்லாம் Vs சைவம்  
    2. குறளும் குர்ஆனும்
    3. சைவமும் குறளும்  
    4. எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர்
    5. இசுலாம் தமிழர் சமயம்
    6. கீதையும் குறளும் 
    7. பகவத்கீதையும் திருக்குர்ஆனும்
    8. திருக்குறள் & பைபிள் - கடவுள் வாழ்த்து
    9. கன்பூஷியஸின் சிந்தனைகளுக்கும் குறளும்
    10. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
    11. விஞ்ஞானத்தின் ஒளியில் திரு குர்ஆனும் பைபிளும்
    12. இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்
    13. குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?
    14. இஸ்லாமும் இந்துமதமும் 
    15. இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்
    16. இந்து வேதங்களில் இஸ்லாம்
    17. தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு
இதுபோல ஒன்றுக்கொன்று முரணாக அறியப்படும் சமயங்கள் சமய நூல்கள் அவ்வப்போது ஒப்பிடப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்பிட முடிந்த காரணம் இவை அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வந்தது என்பதாலேயே, இதற்க்கு வேறு ஒரு தர்க்க ரீதியான பதில் இருக்க முடியாது. எனவே வேதங்களுக்கான வரையறை அறிவதன் மூலமும் மற்றும் அவைகளில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை  கொண்டு ஒப்பு நோக்குவதன் மூலமும்  உலக வேதங்களில் உள்ள மெய்யையும் பொய்யையும் தனித்தனியாக தரம் பிரிக்கலாம். அதைத்தான் இந்த நூல் முழு முதற் பொருளாக கொண்டுள்ளது. அதோடு கடவுள் என்கிற கருப்பொருள்  நிலம் சார்ந்த, மொழி சார்ந்த அல்லது காலம் சார்ந்த ஒன்று அல்ல என்பதையம் நாம் உணரவேண்டும்.

1 கருத்து:

  1. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (குர்ஆன் 4:82)

    பதிலளிநீக்கு