அனுபவ அறிவா? வேதமா?

ஒருவர் தான் வாழும் முறையினை நெறிப்படுத்த மறைநூலின் அவசியம் உண்டா? அல்லது அவரவர் அனுபவப்படி நம்மை தீமையை வரையறுத்து வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் சிறந்ததா?

இறைமறுப்பாளர்கள் மட்டும் அல்ல, இறை நம்பிக்கை உடைய பலரும், மறைநூல்களை பொருட்படுத்தாமல் தனது அனுபவத்தை மட்டுமே சார்ந்து உள்ளனர். அதிலும் சிலர் முன்னோர்களின் கருத்துக்களையும் ஏற்கின்றனர் ஆனால் மறைநூல்களை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. 

ஏனென்றால் மனிதனின் அனுபவத்தில் விளைந்த அறிவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மறை நூல்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் மறைநூல்கள் மனிதனின் அறிவின் மூலம் விளைந்த நூல்கள் என்று இவர்களால் கருதப்படுகிறது.

  1. (மறை)நூல் என்றால் என்ன? இறைவனால் வெளிப்படது நூல் ஆகும்.
  2. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நூல் உண்டா? உண்டு.
  3. உலகின் அனைத்து மறைநூல்களுக்கிடையில் தொடர்பு உண்டா? உண்டு.

இவையெல்லாம் ஏற்கனவே பல கட்டுரைகளில் பேசப்பட்டுவிட்டது. எனவே இக்கட்டுரையில் மறைநூலை சார்ந்தது இராமல் சுயஅறிவை மட்டும் அல்து அனுபவ அறிவை மட்டும் சார்ந்து இருத்தல் தகுமா? எனபதை கற்று அறிவோம் வாருங்கள்.

தமிழர் சமயம்


நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே. - (திருமந்திரம்)

விளக்கம்அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள் உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களை கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். குச்சி ஒன்றை எடுத்து காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல் உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. (குறள் 636)

விளக்கம்: மதி நுட்பமும் உள்ளவர்கள் நூலின் வழிகாட்டுதலோடு நின்றால் அவர் முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்?

வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
மெல்என்றல் சால அஃதுஆகும் - அதே போல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்மகட்குக்
கல்லினும் வல்என்னும் நெஞ்சு. (அறநெறிச்சாரம் 31)

விளக்கம்: நாள்தோறும் நீரினுள்ளே கிடந்தாலும் கல்லுக்கு மென்மை அடைதல் சிறிதும் இல்லை! அதைப் போல் நாள்தோறும் நல்ல அறநூல்களை கல்லார் கூறக் கேட்டாலும், கீழ் மக்களுக்கு மனமானது கல்லைவிடத் திண்மையுடையதாகவே இருக்கும்.


தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்

நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்

மால்கள் என உணரற் பாற்று. (அறநெறிச்சாரம் 47)


இட்டம்: விருப்பம், இஷ்டம் 
திருட்டம்: தெளிவு, விளக்கம் 
திறம்: கூறு, வகை 
மாறா: நிலையான 
பித்தர்: பைத்தியக்காரன்

நோற்றல்: தவஞ்செய்தல்

மால்: மயக்கம், ஆசை 


விளக்கம்: வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு தங்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு விளக்கம் கூறி, அவர்கள் கூற்றுடன் எதுவும் பொருந்தாதபடி சொல்பவரை பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய்ந்நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்று தவம் செய்பவரும் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உடையது.


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்

கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்

விண்ணுறுவார்க் கில்லை விதி. (நல்வழி வெண்பா 37)


விளக்கம்வினைப் பயன்களை போக்குவதற்கான முதல் வழி வேதம் ஆகும், மற்ற எல்லா நூல்களிலும் அந்த பயன் இல்லை. அவ்வாறு உலக நூல்களை வாசிப்போர் பொறாமை படுவதை தவிர வேறென்னே சிந்திக்க முடியும். உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.


சொற்ப்பொருள்: ஆயம்: இரகசியம்; கண்ணூறு: பொறாமை; விண்ணூறு: சொர்கத்தை அடைவோர்.


கிறிஸ்தவம்

அதற்கு இயேசு, "மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல, மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது" என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார். (மத்தேயு 4:4)

 இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. (மாற்கு 12:24)

யூதம் 

 நீ தேவனின் சட்டங்களையும் போதனைகளையும் ஜனங்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிடு. தக்க நெறியில் நடக்குமாறு அவர்களுக்குக் கூறு. என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் கூறு. (யாத்திராகமம் 18:20)

இஸ்லாம் 

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (குர்ஆன் 7:40)

முடிவுரை 

இறைவனின் வழிகாட்டுதல் என்பது அறம், நூல், வேதம், சட்டம், வார்த்தை, வசனம் அல்லது வேதவாக்கியம் என்று வெவேறு பன்பாடுகளில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகிறது.  
 
மனிதனின் தினசரி செயல்பாடுகளில் இறைவனின் வழிகாட்டுகள் பேணப்பட வேண்டும். ஏனென்றால் உலகம் அவனை விதித்த விதிகளின்படிதான் இயங்குகிறது. மனிதர்களின் அறிவையும் அனுபவத்தையும் மட்டுமே கொண்டு வெற்றியும் நிம்மதியும் பெறமுடியாது என்பது உலக நெறிகள் கூறும் வாய்மை ஆகும்.

வேதம் படித்து அதை அறிவு கொண்டு செயல்படுத்த வில்லை என்றாலும் நட்டம், உலக அறிவு இருந்து அதை மறைநூலோடு சேர்த்து புரிந்து கொள்ள முயலவில்லை என்றாலும் நட்டம். இந்த தத்துவத்தை தான் மேற்சொன்ன பலசமய நூல் வரிகள் தெளிவு படுத்துகிறது.  


ஆதம் ஏவாள் கதை பொய்யா? *

நான்மறை தத்துவத்தின் படி, ஆதாம் ஏவாள் கதை உண்மையாக இருந்தால் உலக வேதங்கள் அனைத்திலும் சொல்லப்பட்டு இருக்கும். ஆதாம் ஏவாள் கதை எவை எவையோடு தொடர்புடையது? ஒரே கடவுள், உலகத்தின் படைப்பு, மனித படைப்பு, மனிதன் சொர்கத்திலிருந்து விரட்டப்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. தேடுவோம் வாருங்கள்! 

1) எத்தனை கடவுள் உண்டு? ஒரே ஒருவன்

தமிழர் சமயம்

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் - 1:4) 


இந்து மதம்

எல்லா மக்களாலும் வணங்கப்பட வேண்டிய ஒரே கடவுள். (அதர்வா வேதம் 2.2.9) 


இஸ்லாம்

நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு இறைவன் இல்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார். - (குர்ஆன் 7:59) 
 
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22) 


யூதம்

நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (பைபிள் நெகேமியா 9:6) 


கிறிஸ்தவம்

அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து , பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25] 


2) கடவுள் உலகை படைதார் என்பது ஆபிரகாமிய மாதங்களில் மட்டும் உள்ள செய்தியா? 
எல்லா மதங்களும் அவ்வாறுதான் சொல்கிறது.

உலகம் முழுமையும் படைத்தவன் தான் கடவுள் ஆவான் என்று எல்லா சமயங்களும் சொல்கிறது.

மந்திரம்

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)
 

குர்ஆன்

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40)  

 

தோரா

துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். (ஆதியாகமம் 1:1) 
 
தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். (சங்கீதம் 136:25) 
 

அழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் நெருங்கிவிட்டது. அது சர்வவல்லவரிடமிருந்து அழிவாக வரும். (ஏசாயா 13:6)  

 

பைபிள்

சகலமும் அவர் மூலமாக உண்டானது, அவர் இல்லாமல் உண்டானது எதுவும் உண்டாகவில்லை. (ஜான் 1:3) 


3) கடவுள் மனிதனை படைத்தானா? அல்லது மனிதன் பரிணமித்தனா? 

மனிதனை கடவுள்தான் படைத்தான், அவன் அமீபாவிலிருந்தோ, குரங்கிலிருந்தோ அல்லது வேறு ஒன்றிலிருந்தோ பரிணமிக்கவில்லை.

இந்து மதம்

sa ikshateme nu loka lokapalannu srija iti .. so.adbhya eva purusha.n
samuddhrityamurchayat.h .. (ஐத்ரேய உபநிடதம் 3) 
 
He bethought Himself: "Here now are the worlds. Let Me now create world guardians." Right from the waters He drew forth the Person in the form of a lump and gave Him a shape. 
 

அவர் தன்னைத்தானே நினைத்துக்கொண்டார்: "இதோ இப்போது உலகங்கள் உள்ளன. நான் இப்போது உலகக் காவலர்களை உருவாக்குவேன்". தண்ணீரிலிருந்து அவர் ஒரு நபரை ஒரு கட்டியின் வடிவத்தில் வெளியே இழுத்து அவருக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தார். (ஐத்ரேய உபநிடதம் 3)  

 

யூதம்/ கிறிஸ்தவம்

கர்த்தராகிய தேவன் தரையிலே புழுதியிலே மனுஷனை உண்டாக்கி, ஜீவபூமியின் மூக்கினால் மூச்சுத்தி, மனுஷன் ஜீவாத்துமாவானான்." (ஆதியாகமம் 2:7)  

 

இஸ்லாம்

மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (திருக்குர்ஆன் 30:20)  

 

4) மனிதன் சொர்க்கத்தில் இருந்து செய்த பாவத்தால் பூமிக்கு விரட்டப்பட்டனா?

சைவம்

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. (திருமந்திரம் 113)  

 

இஸ்லாம்

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம். - (குர்ஆன் 2:36) 


கிறிஸ்தவம் / யூதம்

ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். - (ஆதியாகமம் 3:23)  

 

5) ஒரே ஆண் பெண்ணிலிருந்து மனிதகுலம் பெருகியதா?

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. (இரண்டாம் தந்திரம் - 9.6)

பொருள்: ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்துதான் மனித இனம் தழைத்து ஓங்கியது.

இஸ்லாம்

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். (குர்ஆன்)  

 

கிறிஸ்தவம்

"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்."(அப்போஸ்தலர் 17:26)  

 

முடிவுரை:

  • மொழிக்கு ஏற்றார் போல பெயர் மாறுபடுவது இயற்கை தான். எனவே கடவுளின் பெயர் அல்லது ஒரு நபரின் பெயர் வேறுபடுகிறதே என்று கருதாமல் அவற்றின் இலக்கணத்தை நோக்குவது தான் சரியான வழிமுறை. அந்த வகையில் மனிதனை கடவுள் படைத்ததும், அவன் செய்த பிழையால் அவனை பூமிக்கு அனுப்பியதும், ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து இவ்வுலகம் தழைத்து ஓங்கியதையும் அனைத்து சமயங்களும் வழிமொழிகிறது.
  • ஒரு மதத்தில் உள்ளது போல அனைத்து நிகழ்வுகளின் செய்திகளும் இன்னொரு மதத்தில் அப்படியே இருக்கவேண்டும் என்று கருதுதல் அவசியமற்றது. காரணம் பல ஆயிரம் ஆண்டு நிகழ்வுகளை ஒரு சிறிய நூலில் சுருக்கும் பொழுது அந்த நூல் இறங்கும் காலத்தில் உள்ள அந்த மக்களுக்கு என்ன செய்தி தேவை என்று இறைவன் கருதுகிறானோ அதை மட்டுமே கொடுக்கிறான்.
குறிப்பு*: ஆய்வு முழுமை பெறவில்லை, ஆதாரங்கள் கிடைக்க கிடைக்க மேலும் மேலும் சேர்க்கப்படும்

கடவுளுக்கு முன் எதுவும் இருந்திருக்கவில்லை

ஹிந்து மதம்

om atma va idameka evagra asinnanyatki.nchana mishat.h. sa ikshata lokannu srija iti. (Aitareya Upanishad Mantra 1)

In the beginning all this verily was Atman (Absolute Self) only, one and without a second. There was nothing else that winked. He (Atman) willed Himself: "Let Me now create the worlds".

ஆரம்பத்தில் இவை அனைத்தும் ஆத்மனாக (முழு சுயம்) இருந்தது, இரண்டாவது ஏதுமில்லாமல் ஒன்றாகவே இருந்தது. கண் சிமிட்டியது வேறு எதுவும் இல்லை. அவர் (ஆத்மான்) உலகங்களை உருவாக்க விரும்பினார். 
 
இஸ்லாம் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வுக்கு முன் வேறு எதுவும் இல்லை, அவனுடைய சிம்மாசனம் தண்ணீருக்கு மேல் இருந்தது, பின்னர் அவர் வானங்களையும் பூமியையும் படைத்து எல்லாவற்றையும் புத்தகத்தில் எழுதினார்."  (புஹாரி)

கருத்து:  ஹதீஸ் நேரடியானது. அல்லாஹ் இருந்தான், அவனுக்கு முன் எதுவும் இல்லை. அதனால் அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்தும் ஒரு படைப்பு. அல்லாஹ் ஒருவன் மட்டுமே ஆரம்பம் இல்லாதவன்.

கிறிஸ்தவம் / யூதம் 

ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. (ஜான் 1:1)

தனிமை வேண்டாம் *

கிறிஸ்தவம் / யூதம் 

தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் எவனும் தன் இச்சையைத் தேடுகிறான்; அவர் அனைத்து நியாயமான தீர்ப்புக்கு எதிராக உடைக்கிறார். ( நீதிமொழிகள் 18:1)

இஸ்லாம் 

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்களுடன் கலந்து அவர்களின் எரிச்சலை பொறுமையுடன் தாங்கும் நம்பிக்கையாளர் கலக்காதவனை விட பெரிய வெகுமதியைப் பெறுவார். மக்களுடன் மற்றும் அவர்களின் எரிச்சலை பொறுத்துக்கொள்ளவில்லை." (அல்-திர்மிதி 5207) 

 


நம்பிக்கை *

 யூதம் 

முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கை வையுங்கள்; உன் வழிகளிலெல்லாம் அவனை ஏற்றுக்கொள், அவன் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவான். ( நீதிமொழிகள் 3:5-6)

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். – நீதிமொழிகள் 22:19

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருப்பார், கண்ணியிலிருந்து உன் பாதத்தைக் காப்பார். - நீதிமொழிகள் 3:26 

சங்கீதம் 9:10  உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடவில்லை.

சங்கீதம் 125:1  கர்த்தரை நம்புகிறவர்கள் சீயோன் மலை போன்றவர்கள். அதை நகர்த்த முடியாது; அது என்றென்றும் நிலைத்திருக்கும்.

 சங்கீதம் 37:3  கர்த்தரை நம்பி நன்மை செய்; நிலத்தில் தங்கி, விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சங்கீதம் 20:7 சிலர் இரதங்களிலும், மற்றவர்கள் குதிரைகளிலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், ஆனால் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை நம்புகிறோம்.

சங்கீதம் 28:7 கர்த்தர் என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; என் இதயம் அவரை நம்புகிறது, நான் உதவி பெற்றேன். ஆகையால் என் இதயம் மகிழ்கிறது, என் பாடலால் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

 எரேமியா 17:7 ஆனால், கர்த்தரை நம்பி, அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

எரேமியா 29:11 உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தருவதற்காக, உங்களைச் செழிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளேன், உங்களுக்கு தீங்கு விளைவிக்க திட்டமிட்டுள்ளேன் என்று கர்த்தர் கூறுகிறார்.

 ஏசாயா 26:4 “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.”

2 சாமுவேல் 22:31 “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.”

நாஹூம் 1:7  கர்த்தர் நல்லவர், ஆபத்துநாளில் அரணானவர்; தம்மை நம்புகிறவர்களைக் கவனித்துக்கொள்கிறார். 

கிறிஸ்தவம் 

இதற்காக நாங்கள் உழைக்கிறோம் , பாடுபடுகிறோம், ஏனென்றால் எல்லாருக்கும், குறிப்பாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். - 1 தீமோத்தேயு 4:10 

இஸ்லாம்

ஈமான் என்றால் என்ன?

இந்த கேள்வியை ஜிப்ரீல்(அலை) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) பதில் கூறினார்கள்:

1.அல்லாஹ் (தான் அனைத்தையும் படைத்தவன், அவன் தான் வணங்குவதற்கு தகுதியானவன், அவனுக்கு அழகிய பெயர்களும் பண்புகளும் உள்ளன) என்று நீ நம்ப வேண்டும்.

2.மலக்குமார்கள் (ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இறைவனின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்ய மாட்டார்கள் என்று) நம்ப வேண்டும்.

3.வேதங்கள் (அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவை அதில் உள்ளவை தான் தவ்றாத், ஸபூர், இன்ஜீல், இறுதி வேதம் குர்ஆன் என்று )நீ நம்ப வேண்டும்.

4.தூதர்கள் (அனைவரும் நல்லவர்கள் அவர்களில் முதன்மையானவர் நபி நூஹ்(அலை) அவர்கள்.அவர்களில் இறுதியானவர் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் என்று) நீ நம்ப வேண்டும்.

5.இறுதி நாளில் (மக்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்படுவார்கள் என்று) நீ நம்ப வேண்டும்.

6.விதி (யால் ஏற்படும்) நன்மையானாலும் தீங்கானாலும் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று நம்ப வேண்டும். (முஸ்லிம்)

நூல்:அகீததுல் இஸ்லாமிய | ஆசிரியர்: முஹம்மது பின் ஜமீல் ‌ ஜைனூ

புற அழகை மதிப்பிட கண்ணாடியை பயன்படுத்துவது போல், நம் அகத்தில் உள்ள ஈமானை நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியால் அளவிடலாம். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் வந்து கேட்கின்றார். “ஈமான் என்றால் என்ன?” என்று அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நற்செயல் உனக்கு மகிழ்ச்சி அளித்தால், தீய செயல் உன்னை துக்கத்தில் ஆழ்த்தினால் அப்பொழுது நீ ஈமான் உடையவன் ஆவாய்”. அறிவிப்பவர்: அபூ உமாமா(ரழி), நூல்கள்: அஹ்மத்.

 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

 நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அல்குர்ஆன் 29 : 2) 

ஈமானின் கிளைகள்

1) அல்லாஹ்வை நம்புவது.

2) இறைத்தூதர்களை நம்புவது.

3) மலக்குமார்களை நம்புவது.

4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.

5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.

6) உலக அழிவு நாளை நம்புவது.

7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.

8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.

9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.

10) அல்லாஹ்வை நேசிப்பது.

11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.

12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.

13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது.

14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது.

15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.

16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது.

17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.

18) கல்வியைப் பரப்புவது.

19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.

20) தூய்மையாக இருப்பது.

21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.

22) ஜகாத் கொடுப்பது.

23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.

24) இஃதிகாஃப் இருப்பது.

25) ஹஜ் செய்வது.

26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.

27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.

28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.

29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.

30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.

31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)

32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.

33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.

34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.

35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.

36) கொலை செய்யாதிருப்பது.

37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.

38) திருடாதிருப்பது.

39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.

40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.

41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது.

42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.

43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.

44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.

45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.

46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.

47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது.

48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.

49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.

50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.

51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.

52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.

53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.

54) வெட்கப்படுவது.

55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.

56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.

57) நற்குணத்துடன் நடப்பது.

58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.

59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.

60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.

61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.

62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.

63) நோயாளியை விசாரிப்பது.

64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.

65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.

66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.

67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.

68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.

69) பிறரின் குறைகளை மறைப்பது.

70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.

71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.

72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.

73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.

74) அதிகமாக தர்மம் செய்வது.

75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.

76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.

77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது.

78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.

(குறிப்பு: மேற்கூறப்பட்ட 77 கிளைகளும் ஹதீஸ் க வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள் ஷுஃபுல் ஈமான் -ஈமானின் கிளைகள்- எனும் நூலில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் தொகுத்துக் தந்தவைகளில் தலைப்புகளாகும். இவைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் விரிவாகக் கற்று அதன்படி செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)