சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு - ஞானம் 1:1ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - ஞானம் - 1:4கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள்.
இடைக்காட்டுச் சித்தர்
ஆதியந்தம் இல்லாத அனாதியைத்தீது அறும்ப வந்த தீப்படு பஞ்சுபோல்மோதுறும்படி முப்பொறி ஒத்துறஆதலாகக் கருத்திற் கருதுவாம். - பாடல் 1கருத்து: தொடக்கம் முடிவு இல்லாமல் இணை துணை இல்லாமல் அனாதையாக இருப்பவனை (இறைவனை) பற்றியே நினைக்க வேண்டும்.
திருமூலர்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமேசென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்துநின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே - திருமந்திரம்பதவுரை: ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.
ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாதுநன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..நாணாமே = வெட்கப் படாமல்சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லைநும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லைஅவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லைபுவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்தவனச் சடைமுடித் தாமரை யானே. - திருமந்திரம் 5வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லதுதானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லைஊனமர்ந் தோரை உணர்வது தானே. - திருமந்திரம் 109சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்றஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்றுபேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - திருமந்திரம் 110கருத்து: சிவனை விட்டால் வேறு தெய்வம் இல்லை அவன் தனியானவன் அவனுடனோ அவனல்லமலோ வேறு தெய்வம் இல்லை. இதன் மறை பொருள் இன்று சிவன் என்ற அறியப்படுகிற உருவத்திற்கும் கதைக்கும் இங்கே சொல்லப்படும் கருத்துக்கும் முற்றிலும் ஒற்றுமை இல்லை. எனவே சிவன் என்று சொல்லப்படும் இறைவனை நாம் தவறாக உருவகபடுத்தி புரிந்து வைத்து உள்ளோம்.
சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்குஅவம்அல்லது இல்லை அறுசம யங்கள்தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)
கருத்து: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவம் உள்ள தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது(தவம் என்பது சிவத்துக்காக செய்யப் பட வேண்டும்); அவ்வாறு செய்ய தலைப்படுபவர்களுக்கு அவம் (கேடு) அல்லாமல் வேறு இல்லை. ஆறு சமயங்களை பின்பற்றுவதும் தவமல்ல(பல சமயங்களை பின்பற்ற கூடாது), எனவே நந்தி தேவர் கூறும் வேதத்தை பின்பற்றி சிவனை வணங்கி வீடு பெருவீராக.
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதேதவநிலை விட்டுத்தாண் டாதே - நல்லசன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (பாடல் 27)
காகபுசுண்டர்
சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகிமதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்றசச்சிதா னந்தமதைப் பணிகு வோமே - (பாடல் 1)கருத்து: தானாய் உருவாகி அனைத்தையும் படைத்த இறைவனை பணிவோம்.
சிவவாக்கியர்
எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோஉங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே. - (பாடல் 224)அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோவிரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரேஅறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே! - (சிவவாக்கியம் 225)எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோஇங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோஅங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோவங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே - (சிவவாக்கியம் 133)கருத்து: உங்களின் இறைவன் இவன், எண்களின் இறைவன் இவன் என்று வேறு வேறு கிடையாது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே.
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)
உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)
நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. இறைவன் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை; பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - (அல்குர்ஆன் 112:4)வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22)
அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 23:91)
அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)
இயேசு
மோசஸ்
இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! - (உபாகமம் 6:4)எசேக்கியா
கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் அரசன். நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். - (2 இராஜாக்கள் 19)
நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (நெகேமியா 9:6)
அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து , பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25]
சிவனைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்று தமிழர் அறமும்,அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று இஸ்லாமும்,கர்த்தரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கிறிஸ்தவமும்
கூறுவதை எப்படி புரிந்து கொள்வது?
- வெவ்வேறு கடவுள்கள் தங்களுக்குள் முரண்பட்டு தங்களை பின்பற்றுபவர்களை அதிகரிக்க போட்டி போடுகின்றன என்று புரிந்து கொள்வதா? அல்லது ஒரே இறைவன் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயருடன் அறியப்படுகிறான் என்று புரிந்து கொள்வதா?
- வெவ்வேறு மதத்தில் கூறப்பட்ட கடவுளின் வரையறையை ஆய்ந்து அவனுக்கு ஒருவனைத்தான் குறிக்கிறது என்று முடிவு செய்வதா? அல்லது பெயரை கொண்டு அவர்கள் வெவ்வேறுதான் என்று முடிவு செய்வதா?
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்லும் பொழுது மதவாதமாக பார்க்கும் சகோதரர்கள், அவரவர் குருமார்களால், சித்தர்களால், மெசாயாக்களால், ரிஷிகளால் படத்த இறைவனை மட்டுமே வணங்குமாரு போதிக்க பட்டுள்ளனர். அதை அவர்கள வாசித்தால் அவர்களுக்கு அது நலம் பயக்கும்.உலகின் இறுதி தூதர் (நபி, ரசூல், மெசாயா, சித்தர், நாதன், குரு, ரிஷி) மூலம் மற்றும் இறுதிவேதம் இதை பற்றி தெளிவாக கூறுகிறது."ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளித்து அழிக்கும் ஏக இறைவனைத் தவிர, வணங்கப்படும் மற்ற) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (திருக்குர்ஆன் 16:36)