தமிழர் வேதம்



வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். -  (தொல்காப்பியம் மரபியல் 640)

என்-னின் நிறுத்த முறையானே முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (96)

1. வினை என்பன இருவினை. `இன்' நீக்கத்துக்கண் வந்தது. `விளங்கிய அறிவு 'என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவின் என நின்ற 'இன்' சாரியை இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவன் எனப்படும். முன்னோனை முனைவன் என்பது ஓர் சொல் விழுக்காடாம். (தொல்.பொருள்.649.பேரா)

முனைவனால் செய்யப்படுவதோர் நூல் இல்லை என்பார் அவன் வழித்தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பால் பொருள்கேட்டு முதனூல் செய்தார் எனவும் அம்முனைவன் முன்னர் ஆகமத்துப்பிறந்தோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவர் எனவும் அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலும் சார்பு நூலும் எனப் பலவுஞ் செய்தார் எனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்தநூல் அன்மையின் அவை தேறப்படா.... அவை தமிழ்நூல் அன்மையின் ஈண்டு ஆராய்ச்சி இல என்பது.

மற்று மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமாமெனவே எல்லார்க்கும் முதல்வனாயினான் செய்தது முதனூலேயாமென்பது பெரிதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின் தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராதலின் தாமே தலைவராயினார். நூல்செய்யின் முதனூலாவதெனின் அற்றன்று தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலகாரலின் தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதனூல் என்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமான் அடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் 'வினையினீங்கி விளங்கிய அறிவினான் ' முதனூல் செய்தான் என்பது அறிவித்தற்கும் இது கூறினான் என்பது. எனவே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம்.(தொல்.பொருள்.649.பேரா.)

641 வழியெனப் படுவ ததன்வழித் தாகும்.

என்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு.
அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (97)

642. வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்

643 தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே.

என்-னின், வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு.

இது வழிநூலா னாயபயன். (99)

1. இனிப் படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இதுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (தொல்.பொருள்.652.பேரா.)

 நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - திருமந்திரம் 135.

(ப. இ.) ஆலமர் செல்வனாம் நந்தியெங் கடவுளின் திருவடியினைத் தலைமேற் கொண்டு, கொண்டவாறே இறுப்பு மெய்யாம் புத்தியின்கண் நிலைபெறச் செய்து செந்தமிழ்ப் போற்றித்தொடர் புகன்று வழிபட்டு வளரும் மதியினைப் புனைந்த திருச்சடையினை உடைய சிவபெருமானை நாடொறும் உள்ளத்தின்கண்ணே நாடி உயிர்க்கு உறுதி பயக்கும் செந்தமிழ்ச்சிவாகமம் மொழியலுற்றேன் என்பதாம். ஆகமம் - இறைவன் நூல். ஆவி நிறைவாம் முறைநூல் எனவும் படும். ஆ - ஆவி. கமம் - நிறைவு. புந்தி - அறிவு. சிந்தை செய்து - இடையறாது நாடி ஆகமம் - தமிழாகமம். ஆகமம்: ஆவியின் அறிவை நிறைவிக்கும் நூல்.

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு2
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - திருமந்திரம் 138. 

(ப. இ.) திருமூல நாயனார் தம் மெய்கண்ட மாணவருள் ஒருவராகிய மாலாங்கரைப் பார்த்து அருளுகின்றனர். மாலாங்கரே! சிவவுலகை நீங்கி ஓங்கிய தென்தமிழ் நாட்டகத்துக்கு அருள் என்னைக் கொண்டுவந்த காரணம் கூறுகின்றேன் கேள். சிவபெருமான் திருமலைக்கண் அழகிய நீலவண்ணத் திருமேனியும், நேரிய பொன்மணி அணிகளும் பூண்ட அம்மையுடன் திருவைந்தெழுத்தே திருவுருவாகக் கொண்டு ஒலிமுடிவாம் நாதாந்தத்துச் செய்தருளும் திருக்கூத்தின் அடிப்படை யுண்மைக் காரணங்களை மொழிந்தருளினன். அத்தகைய அருளொழுக்கு நிறைந்த தமிழ்முறையினை வேதமெனவும் சிவாகமம் எனவும் கூறுப. அதைச் செப்புதற் பொருட்டே யான் வந்தேன். நீலாங்கம் - கரிய அழகிய. மூலாங்கம் - அடிப்படை யுண்மைக் காரணங்கள். சீலம் - ஒழுக்கம்.

(அ. சி.) நீலாங்க . . . . . வேதம் - தமிழ் நான்மறை. (அறம் - பொருள் - இன்பம் - வீடு.)

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே. - திருமந்திரம் 145. 

(ப. இ.) சிவபெருமான் திருவருளால் திருவடியுணர்வு கைவரப்பெற்ற மெய்கண்ட மேலோர் உள்ளத்தில் அமையும் நூல்களில் தலைமையாக இறைவன் எழுப்ப முறையாக எழுந்து ஓதப்பெறும் ஒண்தமிழ் மறைமுறையாகிய முன்னை வேதாகமங்களை யொப்பச் சொல்லையும் பொருளையும் அடியேற்கு உள்நின்று அத்தன் அருளால் உணர்த்தியருளினன்.

(அ. சி.) உடல் - சொல் - உற்பத்தி - பொருள்.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். - திருமந்திரம் 149. 

(ப. இ.) அருளோனாகிய சதாசிவக் கடவுள் அருளிச் செய்த என்றும் மாறா மெய்ம்மை மறை முப்பொருள் தேற்றும் தமிழ்மறை. ஒருபுடையாக முத்தமிழினை முறையே உயிர் உள்ளம் உடல் என உலகியலிற் கொள்ளலாம். முத்தமிழ்: இயல் இசை கூத்து. அவற்றையே வீட்டியலிற் கொள்ளுங்கால் இறை உயிர் தளை எனக் கொள்ளுதல் சாலும். இத்துணை நாளும் அளவாயுண்ணும் அமைவுடையவனாக விருந்தேன். முத்தமிழ் வேதத்துக்கு உறைவிடமாக உள்ளத்தினையே அமைத்தேன். அம் மறையினைப் புறக்கணிக்காது திருவருளுடன் கூடியுணர்ந்தோம். மிதாசனி - மித + அசனி: அளவாயுண்போன். இதாசனி - உள்ளத்தை உறைவிடமாக நல்கியோன்.

(அ. சி.) சதா . . . வேதம் - படைப்புக் காலத்தில் சதாசிவனுடைய தத்துவமாகிய சாதாக்கிய தத்துவத்தினின்றும் வெளிப்பட்ட தமிழ் வேதம்.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
   
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
   
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம். 

திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம். 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)

அரு மறை – அரிய வாழ்வியல் செய்திகளைக் கூறும் நீதி நூல்களைச் (வேத)
சோரும் – கடைபிடிக்காது தவறும்
அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்
செய்யும் – செய்து கொள்வர்
பெரு மிறை – பெரிய துன்பத்தை
தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில் - (நாலடியார், பொருட்பால், 14. கல்வி 140)

(பொ-ள்.) அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் - அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல் களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது,
கலகல கூம் துணையல்லால் - கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால், 
கொண்டு தடுமாற்றம்போம் துணை அறிவார் இல்-அவ் வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை. (அறிவு நூல் உலக நூல் என இருவகை நூலை குறிப்பிடும் இப்பாடல் உலக தேவையை முன்னிறுத்தாத நூலை அறிவு நூல் என்கிறது, அது வேதத்தை குறிக்கிறது)

நூற்பா விளக்கம்: உலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி ஆகும். (மறை என்பது உலக நிகழ்வை விடுத்து தனித்து நிற்பதல்ல என்பது இதன் மூலம் தெளிவு)

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - நல்வழி 40

(பதவுரை) தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திரு நான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்தியநான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும்-(திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. 

மறுமையில் இறைவனை யார் சந்திப்பார்?

கிறிஸ்தவம் :

 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். - மத் 5:8 
__________________________________________________

இஸ்லாம் :

அந் நாளில் சில முகங்கள் மலர்ந்திருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கோண்டிருக்கும். (குர்ஆன் 75 : 22, 23)

சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
(பின்னர்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக,
(சூரியனால்) பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக,
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக, வானத்தின் மீதும்
அதை (ஒழுங்குற) அமைந்திருப்பதன் மீதும் சத்தியமாக
பூமியின் மீதும் இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக
ஆத்மாவின் மீதும் அதை ஒழுங்குபடுத்தியதன் மீதும் சத்தியமாக
அவன் (ஆத்மாவாகிய) அதற்கு அதன் தீமையையும் அதன் நன்மையையும் உணர்த்தினான் (ஆத்மாவாகிய) அதைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார் - 91:1-8
நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் (முஸ்லிம்)

உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் முழு உடலும் சீராக இருக்கும். அது சீர்கெட்டால் முழு உடலும் சீர்கெடும். அதுதான் இதயம் ஆகும். (புகாரீ - 52)
_____________________________________________________________

திருமந்திரம் :

2819. முத்தியுஞ் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலாற்
சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.

(ப. இ.) முத்தியாகிய வீடும் சித்தியாகிய பேறும் கைகூடிய ஆருயிர்க்கிழவன் ஞானத்தோனாவன். ஞானம் - திருவடியுணர்வு. ஞானத்தோன் - திருவடிசேர் அடிமை; நாயன்மார். அத் திருவடியுணர்வு கைவந்தபின் பேரன்பாம் பத்திநிலை கைகூடும். அப் பத்தியுள் நின்றபின் பரத்தினுள் நிற்பன். பின் திருவருட் பெருந்திருவுள் நிற்பன். அவ்வாறு நிற்கும் நல்லோர்க்கு இயற்கை யுண்மைச் சிவன் கைகூடுவன். அதனால் பொருள் அருள் தூய்மையும் அகன்றோராவர். அவரே பேரின்பப் பேரறிவினராவர்.

குறள் : 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற  (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:34)

உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.

சான்று :
http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2571
https://www.bible.com/ta/bible/339/MAT.5.8.TAMILOV-BSI
http://ulahawalam.blogspot.com/2013/11/blog-post_9.html

உலகில் மனிதாபிமானமற்ற செயல்கள் நடக்கக் காரணம் என்ன?

  • மக்களில் பலர் இறை நம்பிக்கை இல்லாமல் இருப்பது
  • இறை நம்பிக்கையுள்ளோரில் பலர் அறைகுறை நம்பிக்கையுடன் இருப்பது
  • முழுமையான நம்பிக்கை உள்ளோரில் பலர் அரைகுறை அறிவுடன் இருப்பது
  • இறை நம்பிக்கை இல்லாதவர் இறைவன் பெயரில் இயக்கம் துவங்கி இலக்கை நிர்ணயித்து, தான் ஏற்ற சமய அறநெறிகள் கூட ஏதுமில்லாமல் அதை அடைய முயல்வது, அதே வழியில் லட்ச கணக்கான மக்களை வழி நடத்துவது (such as RSS, Zionist, ISIS & etc)

இவைகள் தான் உலகில் மனிதாபமாற்ற செயல்களுக்கு காரணம்.

இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்ட முழு அறிவுடைய முழு நம்பிக்கையுடைய மனிதன் மனிதாபிமானத்தின் மொத்த உறுவமாக இருப்பர் என்பது வரலாறு தரும் சான்று.

சான்று: https://ta.quora.com/உலகில்மனிதாபிமானமற்ற 

இறைவன் எங்கே இருக்கிறான்?

இறைவன் எங்கே இருக்கிறான் என்பது மிக சிக்கலான கேள்வியாக சமகாலத்தில் உள்ளது. ஆனால் மறைநூல்களில் உதவியை நாடினால் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்த கருத்தாகும்.

சமகாலத்தில் இறைவனின் இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டே சில பிரிவுகள் உள்ளது. அவையாவன,
  1. இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்  
  2. நல்லோர் உள்ளத்தில் இருக்கிறான் 
  3. இறைவன் மேலே இருக்கிறான், அவன் அங்கிருந்தே அனைத்தையும் கட்டுப் படுத்தும் ஆற்றல் உடையவன்.
வாருங்கள் எந்த கருத்து சரி என்று ஆராய்வோம்.

கடவுள் வானங்களுக்கு மேலுள்ளான்!


தமிழர் சமயம் 


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
ஏழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே - (திருமந்திரம் 01)

ஒன்றவன் தானே - அவன் ஒருவன், தானே இருப்பவன் (எவரும் அவனை உருவாக்கவும் படிக்கவும் பெற்றெடுக்கவும் இல்லை)

இரண்டவன் இன்னருள் - அறக்கருணை(நன்மை), மறக்கருணை(தீமை) அனைத்தும் அவனிடமிருந்தே

நின்றனன் மூன்றினுள் - ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார்

நான்குணர்ந் தான்- அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துபவன் என்பதைக் காட்டுகிறது

ஐந்து வென்றனன்- மரணம், உறக்கம், சோர்வு, மறதி  மற்றும் பசி என்ற ஐந்தும் இல்லாதவன்.

ஆறு விரிந்தனன் - ஆறு நாட்களில் உலகம் அனைத்தையும் விரித்தான் (படைத்தான்)

ஏழும்பர்ச் சென்றனன் தான்- ஏழுலகங்கட்கும் மேற்சென்று நின்றவன் என்பதை உணர்த்தும். (உம்பர்-வானம்)

இருந்தானுணர்ந் தெட்டே - உணர்வார்ல் அனைத்தையும் எட்டக்கூடியவனாய், அடையக்கூடியவனாய் இருந்தான்.

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே. - (1551)

(ப. இ.)  ஏழு உலகங்கள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவன், அவன் நல்லார்  உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல்....

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்,
வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது,
சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று.வேண்டுறோம்.

இஸ்லாம்


நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் (ஏழு வானகளுக்கு அப்பால் உள்ள) அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் -(7:54)

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். - (2:29)

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5)

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். - (அல்குர்ஆன் 2:255) 
 
ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? என்றும் கேட்பீராக. - (23:86)

"பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) 
 
நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி) 

கிறிஸ்தவம் 


.... “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்... - (1 இராஜாக்கள் 22:19)

தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். - (சங்கீதம் 20:6)

பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது. அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார். - (சங்கீதம் 103:19)


இந்துமதம்


அவனது கண்கள் மிக உயர்ந்த வானத்தில் இருந்து இந்த உலகை கட்டுப்படுத்துகிறது. - (ரிக் 129:7)

 

கடவுள் தனது ஞானத்தினால் எங்கும் நிறைந்து இருக்கிறான்!


இஸ்லாம் 

அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 20:46)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 2:186) 

ஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (குர்ஆன் 57: 04) 

கிறிஸ்தவம் 

"கர்த்தர்தாமே உமக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பர்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்." - (உபாகமம் 31:8)

நாம் உதவி கேட்கும்பொழுது தேவனாகிய கர்த்தர் நமது அருகில் இருக்கிறார். (உபாகமம் 4:7)

தமிழர் சமயம்  

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்;
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் குடிஇருந் தானே. (திருமந்திரம் 579)

பொருள்: உந்திச்சுழிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கிறது "உள்ளம்" என்கிற மூலாதாரம். அதை நெறிப்படுத்தும் மந்திர சொல்லை அவர்கள் அறிவதில்லை. அறிந்தபின் கூவிக்கொண்டு வந்து அங்கே குடியிருப்பான் ஈசன்.   
 
நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்றறிவிரோ?
நாலு சாமமாகியே நவின்ற ஞானபோதம் 
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. (திருமந்திரம் 411)

சொற்பொருள்: சாமம் - கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்; நவின்ற - சொன்ன; போதம் - அறிவு; ஆலம் - ஆகாயம்; கண்டன் - தலைவன்; அயன் - படைப்பவன்; மால் - அருகன்; சால - மிக மிக; உன்னி - தியானத்திற்குரிய பொருள்; தரித்த - அடைந்த;
 
பொருள்நான்கு வேதங்களும் அதன் நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்று அறிவீர்களா?. நாலு வகையாக ஓதப்படும் ஞான போதனைகள், ஆகாயத்தில் இருக்கும் தலைவனுமாய், படைப்பவனுமாய், அருகனுமாய் தியானத்திற்குரிய பொருளாக நெஞ்சுக்குள்ளே அடைந்த சிவன் ஆகும்.
 
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)

பொருள்: ஆகாயத்தில் இருக்கும் தலைவனாகிய சிவன் அகத்துள் இருக்கிறான், அவன் உயிர் எடுக்கும் காலன் என்று கூறுவது பிழை.

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் - (நல்வழி வெண்பா : 38)

விளக்கம்: நல்லது இது என்றும், கெட்டது எது என்றும், இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை பேதம் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும். கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது

உள்ளத்தில் குடியிருக்கும் இறைவன்

தமிழர் சமயம்  


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' - (திருமூலர் திருமந்திரம்

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)

கிறிஸ்தவம்  

அல்லது உங்கள் உடல் உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? நீ உனக்கு சொந்தமில்லை - (1 கொரிந்தியர் 6:19

இஸ்லாம்   

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் அதிகாரத்தில் கூறினார்: அல்லாஹ் (வல்லவனும் உன்னதமானவனுமாக) கூறினான்: யார் எனக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒருவருக்கு விரோதம் காட்டுகிறாரோ, அவருடன் நான் போரில் ஈடுபடுவேன். என் அடியான் அவனுக்கு நான் விதித்துள்ள மார்க்கக் கடமைகளை விட எனக்குப் பிரியமான எதையும் என்னிடம் நெருங்குவதில்லை, மேலும் நான் அவனை நேசிப்பதற்காக என் அடியேன் மிகையான செயல்களால் என்னிடம் நெருங்கி வருகிறான். நான் அவரை நேசிக்கும்போது, ​​அவர் கேட்கும் செவிப்புலன், அவர் பார்க்கும் பார்வை, அடிக்கும் கை, அவர் நடக்கிற கால். அவன் என்னிடம் [ஏதாவது] கேட்டால், நான் அதை அவனுக்கு நிச்சயமாகக் கொடுப்பேன், அவன் என்னிடம் அடைக்கலம் கேட்டால், நான் அவனுக்கு நிச்சயமாக அதை வழங்குவேன். என் உண்மையுள்ள அடியானின் ஆன்மாவைப் பற்றி நான் தயங்குவது போல் எதற்கும் நான் தயங்குவதில்லை: அவன் மரணத்தை வெறுக்கிறான், அவனை காயப்படுத்துவதை நான் வெறுக்கிறேன். (ஹதீஸ் 25, 40 ஹதீஸ் குத்ஸி)

இதன் பொருளும் அவன் தனது ஞானத்தால் நிறைந்திருக்கிறான் எனபதாகும்.  

முடிவுரை 

இறைவனின் இருப்பிடம் ஏழாவது வானத்திற்கு மேல், அனைத்து உலகங்களுக்கும் அப்பால் உள்ளது என்பதும், அவன் ஞானத்தினால் ஒவ்வொன்றையும் பார்க்கிறான் சூழ்ந்தது இருக்கிறான் என்பதும் நான்மறைகளின் கூற்று.

  • ஏழு வானங்கள் உண்டு என்பது அனைத்து சமய வேதங்களும் ஏற்கும் உண்மை.
  • இறைவன் இருப்பிடம் அவை அனைத்திற்கும் மேலுள்ளது என்பதையும் அவைகள் ஏற்கின்றன.
  • இறைவனின் பார்வையும் ஞானமும் நுணுக்கமாக ஒவ்வொரு பொருளின் மீதும் எப்பொழுதும் பதிகிறது என்று அனைத்து மறைநூல்களும் சாட்சி கூறுகிறது.

இதற்கு முரணான கடவுள் கொள்கை அனைத்தும் பிழையானது. அவற்றில் சில,

    • கடவுள் (தனது உருவுடன்) எங்கும் நிறைந்தவன் 
    • கடவுள் மனிதனாக அவதரிப்பான் 
    • மனிதன் சில நல்ல குணங்களால் தெய்வமாக முடியும் 
    • தாயும் தந்தையும் தெய்வம் 
    • இயற்கைதான் தெய்வம் 
    • இறந்தவர்கள் தெய்வமாகி விடுவார்

ஏனென்றால் இறைவனின் இருப்பிடம் தொடர்பான செய்தியில் இவை அனைத்தும் முற்றிலும் முரணானவை.

உலகம் கொண்டாடப்பட வேண்டிய இடமல்ல!

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (குறள் :10)

பிறவி - பிறப்பு. இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது;

பெரும் கடல் - இந்த வாழ்க்கையின் அளவையும் அதில் உள்ள துன்பங்களையும், உவமை படுத்த பெரிய கடல் என்கிற பதம் பயன்படுத்த படுகிறது;

நீந்துவர் - நீந்துவார்கள்; வாழ்க்கை கடலில் நீந்தும் பொழுது கேளிக்கைகளுக்கும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பில்லை. 

நீந்தார் - நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; அதாவது கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு நோக்கத்தை மறைந்தவர்.

இறைவன் - தனக்கு உவமை இல்லாத ஒருவன்

அடி-தாள்; சேராதார்-சென்றடையாதார். இங்கு இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.

இஸ்லாம்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். (முஸ்லிம்: 5663)

கிறிஸ்தவம்:

இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். - ரோமர் 12:2

முடிவுரை:

 இவ்வுலகில் வாழக்கூடிய குறுகிய காலம் என்பது மறுமை என்னும் முடிவில்லா வாழ்க்கையில் வீடுபேறு அலல்து நரகத்தை அடைவதற்கான பரீட்சை ஆகும். எனவே இவ்வுலகத்தில் வாழும் நாட்களில் கடலில் நீந்துவதை போலவோ, சிறையில் இருப்பதை போலவோ தேவைகளையும் இன்பங்களையும் தவிர்த்து பயணியை போல வாழ வேண்டும்.