தண்ணீர் தானம்

தமிழர் சமயம் 


மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார். (திரிகடுகம் 16)

பொருள்: மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும்.

இஸ்லாம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : " ஒரு முஃமினான மனிதன் கற்பித்த கல்வியும் , ( எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் , அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும் , ( பள்ளிவாசல்கள் , மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும் , அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும் , வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும் , அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும், அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும் கண்டிப்பாக அவனின் மரணத்துக்குப்  பிறகும் அவனைப் போய்ச்சேரும். அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு - (இப்னுமாஜா : 242)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா) 2. பயன்பெறப்படும் கல்வி 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - (ஸஹீஹ் முஸ்லிம் : 3358) 

கிறிஸ்தவம் 


நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான். - (மாற்கு 9 :41

உரிமையில்லா பெண்ணை

தமிழர் சமயம்


பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்
முழு மக்கள் காதலவை. - (திரிகடுகம் 9)

பொருள்: பெருந்தன்மை உடையாரிடம் நட்பு கொள்ளாதிருத்தலும், தமக்கு உரிமை இல்லாத பெண்களை விரும்புதலும், சிறந்தவை அல்லாதவற்றைச் செய்வதும் அறிவற்ற மூடர்கள் விரும்பிச் செய்வதாம்.

இஸ்லாம் - விரும்ப உரிமையில்லா பெண்கள்


உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன்:4:23)


கிறிஸ்தவம் & யூதமதம் - லேவியராகமம் 20 பாலியல் பாவங்களுக்கான தண்டனைகள்


10 “எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும். 
 
11 எவனாவது தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்களின் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அது அவன் தன் தந்தையை நிர்வாணப்படுத்தியது போன்றதாகும்.

12 “ஒருவன் தன் மருமகளோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மிக மோசமான பாலியல் பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

13 “ஒருவன் இன்னொரு ஆணோடு, பெண்ணோடு பாலின உறவு கொள்வது போன்று பாலின உறவு கொண்டால் (ஓரினப் புணர்ச்சி) அந்த இருவரும் பெரும் பாவம் செய்தபடியால் அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்களே தம் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

14 “ஒருவன் ஒரு தாயோடும் மகளோடும் பாலின உறவு கொண்டால் இதுவும் பெரிய பாலியல் பாவமாகும். ஜனங்கள் அவர்கள் மூவரையும் நெருப்பிலே போட்டுக் கொல்ல வேண்டும். இது போன்ற பாலியல் பாவங்கள் உங்கள் ஜனங்களிடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

15 “எவனாவது மிருகத்தோடு பாலின உறவு கொண்டிருந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். அந்த மிருகத்தையும் நீ கொன்றுபோட வேண்டும். 
 
16 ஒரு பெண் மிருகத்தோடு பாலின உறவு கொண்டால் நீ அவளையும் அந்த மிருகத்தையும் கொன்றுவிட வேண்டும். அவர்களே தங்கள் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

17 “ஒருவன் தன் சகோதரியையோ, சகோதரி முறையுள்ளவளையோ மணந்துகொண்டு அவளோடு பாலின உறவு கொள்வது வெட்ககரமான பாவமாகும். அவர்கள் பொது ஜனங்கள் மத்தியில் தண்டிக்கப்படுவதுடன், மற்ற ஜனங்களிடமிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். ஒருவன் தன் சகோதரியோடு பாலின உறவு கொண்ட பாவத்துக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.

18 “ஒருவன் ஒரு பெண் மாதவிலக்காக இருக்கும்போது அவளுடன் பாலின உறவு கொண்டால் அவர்கள் இருவருமே தங்கள் ஜனங்களிடமிருந்து தனியே ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அவளது இரத்தப் போக்கை அவன் திறந்து விட்டிருக்கிறபடியால் அவர்கள் பாவம் செய்தவர்களாக ஆகிறார்கள்.

19 “நீங்கள் உங்கள் தந்தை அல்லது தாயின் சகோதரியோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. இது நெருங்கிய உறவோடு பாலின உறவு கொண்ட பாவத்திற்குரியது. உங்கள் பாவத்திற்கு நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

20 “ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் அது தகப்பனின் சகோதரனோடு பாலின உறவு கொண்டது போலாகும். அவனும் அவனுடைய தகப்பனின் சகோதரனின் மனைவியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குழந்தைகள் இல்லாமல் செத்துப்போவார்கள்.

21 “ஒருவன் தனது சகோதரனின் மனைவியை எடுத்துக்கொள்வது தவறானதாகும். இது அவன் தன் சகோதரனோடு பாலின உறவு கொள்வது போன்றதாகும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமற்போகும்.

22 “நீங்கள் எனது சட்டங்களையும் விதிகளையும் நினைவில் கொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் உங்கள் நாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அங்கு வாழும்போது எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிந்தால் அந்த நாடு உங்களை கக்கிவிடாது.

தமிழர்கள் இயற்கையை வழிபட்டார்களா?

இந்தக்கேள்விக்கு விடைகாணும் முன், இந்த கருத்தை கொண்டவர்கள் யார் யார் என்று பார்ப்போம். 

சார்லஸ் டார்வினின் பரிணாம கொள்கையை அங்கீகரித்தவர்களின் கூற்றே ஆதியில் தமிழர்கள் இயற்கையை வழிபட்டார்கள் என்கிற கருத்தை வலுவாக பற்றிப் பிடித்து இருப்பவர்கள். உதாரணமாக, சமீபத்தில் தமிழக முதலமைச்சரரின் இந்த கருத்துக்கு அடிப்படை என்ன என்று ஆராய்ந்தால், தமிழ் தொன்மையானது என்பது நிதர்சனமாக இருந்தும் டார்வினின் கொள்கை உண்மையானது என நம்புவதே ஆகும். இது தொடர்பாக ஆய்வாளர் மன்னர் மன்னனும் சில காணொளிகளை வெளியிட்டார். கா1 கா2 கா3 கா4


 மனிதன் படைக்கப்பட்டனா அல்லது பரிணமித்தானா என வேறொரு பதிவில் காணலாம். அதற்கு முன் தமிழ் தொன்மையானது என்று அவர் நம்ப காரணமாக இருந்தது தமிழ் நூல்கள் மற்றும் அகழாய்வு முடிவுகள் ஆகும். நமது முயற்சியால் நாம் அடையும் அறிவை நூலோடு ஒருங்கே கொள்ளவேண்டும் என குறள் 636 சொல்வதால், அகழாய்வு முடிவுகளின் விளக்கம் நமது நூல்களுக்கு முரணாக இருக்க முடியாது. எனவே தமிழர் மறை நூல்கள் இயற்கை வணக்கத்தை பற்றி சொல்கிறதா அல்லது இயற்கையின் வரையறையோடு பொருந்தாத "தெய்வம்" என்ற ஒன்று இருப்பதாக சொல்கிறதா என்று பார்ப்போம்.

தொல்காப்பியம்

தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். - (தொல்காப்பியம்)

 குறிப்பு: தெய்வம் பாலினமற்றது ஆனால் உயர்திணை எனும் தெளிவான வரையறை, இயற்கையின் கூறுகளான காற்று, நீர், சூரியன் போன்ற அஃறிணைகளை தமிழர்கள் தெய்வமாககொள்ளவில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறது.  

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தும் - (தொல்.பொருள்.செய்யுள்422) 

பொருள்: வழிபடுகின்ற தெய்வம் உன்னையும் உன் குடும்பத்தையும், சுற்றத்தையும் பாதுகாக்கட்டும்! குற்றமற்ற செல்வத்துடன் மக்களையும் குடிவழியினரையும், நீ பெற்று, வழிவழி சிறந்து நீடுவாழ்வாயாக!

குறிப்பு - 1) இயற்கை வழிபாடு என்றால் அதில் பன்மைக்கு இடமுண்டு ஆனால் தெய்வங்கள் என்று பன்மையில் இங்கே குறிப்பிடவில்லை. 2) "வழிபடு தெய்வம்" என்றால், தெய்வத்தால் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலை பின்பற்றுதல் என்று பொருள். எனவே அஃறிணைகள் உயர்திணையான மனிதனுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது என்று பொருள் கொள்ள முடியாது.

தொல்காப்பியத்தில், மாயோன் உட்பட நான்கு பெயர்களை நான்கு திணைகளுக்கான தெய்வங்களாக பொழிப்புரை வழங்கப் பட்டுவருகிறது. ஆனால் அவர்கள் தெய்வங்கள் இல்லை, அவர்கள் வழிநடத்துபவர்கள் என்பதை "மேய" என்ற வாரத்தை கூறுகிறது. இது தனி தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. எனவே தொல்காப்பியம் இயற்கை வழிபாட்டை கூறவில்லை.

பரிபாடல்
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?... (பரிபாடல் 60)

...அவுணர்க்கும் (அசுரர்க்கும்) நீதான் முதலானவன் என்கிற இந்த கருத்து இயற்கை வழிபாட்டை குறிக்காது, ஏனென்றால் அவுணர் உலகின் இயற்க்கை வேறு அன்னவர் (மனிதர்) உலக இயற்க்கை வேறு. இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு உனக்கு இல்லை.  

அறநெறிச்சாரம்

ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
பெருகிய உள்ளத்த ராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது. (பாடல் - 1)

விளக்கவுரை : அனைத்ததின் தொடக்கமுமான தெய்வத்தின் மிக பழமையான சீர்மிகுந்த அறநெறிச்சாரம் என்னும் இந்நூலைக் கற்றும் கேட்டும் புரிந்தவர், ஞான ஒளி மிக்க மனம் உடையவராய், தீய வினைகள் நீங்கப்பெற்று, அவர்கள்

குறிப்பு: ஆதி என்பதன் பொருள் அனைத்தும் தோன்றுவதற்கு முன் என்று பொருளாம், அனைத்தும் என்பதில் இயற்கையும் அடங்கும் எனவே இதும் இயற்கை வழிபாட்டை குறிக்க வில்லை. 

நாலடியார்

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (கடவுள் வாழ்த்து)

பொருள்: வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்காறிது; அதுபோலவே, பிறப்பு இறப்பு ஆகியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இஃது உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக!  

குறிப்பு: நிலத்தில் கால் படாத இறைவன் என்பதில், சூரியன், காற்று, நீர், மரம், நடுகல், பசு, பாம்பு என எதுவும் அடங்காது. எனவே இதுவும் இயற்க்கை வழிபாடல்ல.

ஏலாதி

அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
இறை புரிந்து வாழ்தல் இயல்பு. - (ஏலாதி கடவுள் வாழ்த்து)
 
(இ-ள்.) அறுநால்வர் - ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள்  (நந்திகள் 4 * சமயத்துக்கு ஒரு நாதர் 1 * நந்தி ஒருவருக்கு ஆறு சமயம் 6 = 24),
ஆய் புகழ் - ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின்,
சேவடி - பாதம் சேவகம் செய்யும்  
ஆற்றப்பெறு நால்வர் - நான்கு நந்திகளும், 
பேணிவழங்கி - முறையாக வழங்கி, 
பெறும் நால் மறை - பெறப்படும் நான்மறைகளை, 
புரிந்து - விரும்பி,
வாழுமேல் - வழிபடுவானேயானால், 
மண் ஒழிந்து - மண்ணுலகினின்றும் நீங்கி, 
விண்ணோர்க்கு -தேவர்களுக்கு, 
இறை புரிந்து - தலைமைபூண்டு, 
வாழ்தல் இயல்பு - இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்.

பொருள்: ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள் ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின்,  பாதம் சேவகம் செய்யும்  நான்கு நந்திகளும், முறையாக வழங்கி பெறப்படும் நான்மறைகளை விரும்பி வழிபடுவானேயானால் மண்ணுலகினின்றும் நீங்கி தேவர்களுக்கு தலைமைபூண்டு இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும் 

குறிப்பு: நால்நந்திகள் தரும் நான்மறைகளை வழிபடும் (பின்பற்றும்) ஒருவன் வானுலகத்துக்கு தலைவனான இயல்பு. எனவே ஏலாதியும் இயற்க்கை வழிபாட்டை கூறவில்லை. 

பொறாமை

தமிழர் சமயம்


திருக்குறள் அறத்துப்பால். - இல்லறவியல். - அழுக்காறாமை.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. குறள் 161

மணக்குடவர் உரை: ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். குறள் 162

மணக்குடவர் உரை: விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். குறள் 163

மணக்குடவர் உரை: தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான். இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. குறள் 164

மணக்குடவர் உரை: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. குறள் 165

மணக்குடவர் உரை: அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். குறள் 166

மணக்குடவர் உரை: பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். குறள் 167

மணக்குடவர் உரை: அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். குறள் 168

மணக்குடவர் உரை: அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (குறள் 169)

மணக்குடவர் உரை: அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (குறள் 170)

மணக்குடவர் உரை: அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.
 
ஔவியம் என்றால் என்ன? ஔவியம் என்றால் அழுக்காறு , பொறாமை என்பது பொருள்.

ஔவியம் பேசேல் - (ஆத்திச்சூடி 12)

ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு - (கொன்றை வேந்தன் 12)

(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல்- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும்.

(பொழிப்புரை) ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது அவன்செல்வத்திற்கு அழிவைத் தரும்.

இஸ்லாம்


அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் மீது ,அவர்கள் மக்களைப் பொறாமைப்படுகிரார்களா ? - (அல்குர் ஆன் 4:54)

பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ - (திருக்குர்ஆன் 113:5)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும். (அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத் 4257)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானின் உள்ளத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேர்ந்து இருக்க மாட்டாது. - (நூல்: இப்னு ஹிப்பான் 4606)

கிறிஸ்தவம் & யூதமதம் 

'பொறாமையோ எலும்புருக்கி’ - (நீதி 14 : 30) 

உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? - (நீதிமொழிகள் 27:4)

பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம் - (ரோமர் 13 : 13)

 


ஜியோன்களின் இரகசிய திட்டம் 



வழிப்போக்கனுக்கு உதவுதல்

  வழிப்போக்கற்கு உதவும் மனப் பான்மையைக் கண்டோரிடம்  பெறமுடிகிறது (தொல்காப்பியம் 43 )

அதற்க்கு சான்றாக தமிழகத்தில் வீட்டின் முன் திண்ணை விருப்பத்தை காணலாம்.


ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவருக்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள் தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல்குர்ஆன் 30: 38)


அன்னியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன் - யோபு 31:32