விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு - சொர்க்கத்திலிருந்து வெளியேறு

தமிழர் சமயம் 


விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கயொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. - (முதல் தந்திரம் 1. உபதேசம்ம்- 157)

பதவுரை 
விண்ணின்று - விண்ணிலிருந்து, சுவர்கத்திலிருந்து 
இழிந்து - இழிவடைந்து
வினைக்கீடாய் - செய்த தீய வினைக்கு ஈடாக
மெய்க்கொண்டு - உடலைப் பெற்று
தண்ணின்ற - குளிர்ந்த, ஈரமுடைய,   
தாளை - திருவடியை 
தலைக்காவல் - உயர்ந்த பாதுகாப்பு கொடுப்பவனை  
முன் வைத்து - முன் வைத்து 
உண்ணின்று - உண்இன்று - உணவின்மையால் (உள்நின்று-நிலைபெற்று);
உருக்கி - உருக்கி  
ஓர் - ஒரு   
ஒப்பிலா - இணையில்லா, உவமையில்லா  
ஆனந்தக் -மகிழ்ச்சியான  
கண் + நின்று - கண்ணோட்டம் - அன்பும் இரக்கமும்  
காட்டிக் - காட்டி 
களிம்பு - மாசு 
அறுத்தானே - நீங்கினான் 

விளக்கவுரை: சுவர்க்கத்தில் செய்த வினைக்கு ஈடாக இழிவடைந்து பூவுலகிற்கு ஏற்ற உடலைப் பெற்று குளிர்ந்த திருவடியை உயர்ந்த பாதுகாப்பாக முன்வைத்து உணவை விடுத்து உடலை உருக்கி ஒரு இணையில்லா மகிழ்ச்சி அடையும்படியான அன்பையும் இரக்கத்தையும் காட்டி பாவத்தால் ஏற்பட்ட மாசை நீங்கினான். 

கருத்து: சுவர்க்கத்தில் செய்தபாவத்தால் உடல்கொண்டு பூவுலகு வந்தவனுக்கு இறக்கமுடைய உயர்ந்த பாதுகாப்பு தரும் இறைவனிடம் உணவை விடுத்து உடலை வருத்தி பாவ மன்னிப்பு கேட்டதால் இணையில்லா மகிழ்ச்சி தரும் அன்பையும் இரக்கத்தையும் காட்டி, செய்த பாவத்தின் மூலம் ஏற்ப்பட்ட மாசை அவன் நீங்கினான்.  

இஸ்லாம் 

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம். - (குர்ஆன் 2:36

கிறிஸ்தவம் 

ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். - (ஆதியாகமம் 3:23)

இணை என்றால் என்ன? இறைவனுக்கு இணை இல்லை என்பதை எப்படி புரிவது?

இறைவனுக்கு இணையாக எதையும் கருதுதல் கூடாது. ஏன்?

சான்று 1

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - (குறள் 1:7)

உரை: தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.எந்த உருவமும், படமும், எதனுடனும் ஒப்பேடுசெய்வதும் செய்ய கூடாது. வேத நூலை தீவிர எந்த வர்ணனையும் இறைவனுக்கு பொருந்தாது. ஏனென்றால் இறைவனை கண்டவர்கள் எவரும் இலர் மேலும் இணையாக ஏதும் இல்லை. 


தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமேல் ஏற்றிய இனியநற் றாயே - (திருமந்திரம் 1100)

உரை : தனக்கு ஒப்பாவார் இல்லாத தலைவனாகிய சிவபெருமானைக் காட்டி என்னை மேனிலையில் உயர்த்தியது இன்பமே நல்கும் தாயாகிய சிவம். எ.று.

“தனக்கு உவமை யில்லாதவன்” எனச் சான்றோர் புகழ்தலால் சிவபிரானைத் “தன்னிக ரில்லாத் தலைவன்” என்றும், காட்டக் காணினல்லது காணலாகாதவனாதலால், “காட்டி” என்றும் இயம்புகின்றார். காண்பதால் அடைந்த பயன் இது வென்பார், “மேல் ஏற்றிய” என்று கூறுகின்றார். மேல் - ஞானத் துறையில் உளதாகிய மேனிலை. தலைவனைக் காட்டி மேனிலையில் உயர்த்தியது சிவம் நற்றாயாய் எய்வித்த இன்பம் என்பது கருத்து. 
 

இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். - (ஏசாயா 40:25) 



நபியே சொல்லுங்கள்! அந்த அல்லாஹ் ஒருவன். احد ஒருவன். அந்த இறைவன், அந்த ஒப்பற்றவன், அந்த பேரரசன் احد ஒருவன் தான். - (குர்ஆன் 112)



இணை என்றால் என்ன? இறைவனுக்கு இணை இல்லை என்பதை எப்படி புரிவது? 

இணையற்ற, இணையில்லாத , ஈடு இணையற்ற, ஈடு இல்லாத, ஒப்பற்ற, ஒப்பில்லாத, சமமில்லாத, ஒப்பீடற்ற , நிகரற்ற, தன்னிகரற்ற,உவமையில்லாத போன்ற வார்த்தைகளின் உண்மை பொருளை மக்கள் அறிந்ததாகவும் அல்லது சரியான இடங்களில் பயன்பத்துவதாகவும் கருத முடியவில்லை. 

இந்த வார்த்தைகளை பொதுவாக பயன்படுத்தும் பொழுது, எந்த ஒன்றிலும் இணையில்லாத என்று பொருள் படும். ஏதேனும் ஒரு பண்போடு சேர்த்து பயன் படுத்தப்படும் பொழுது அந்த பண்பில் மட்டும் ஒப்பில்லாதவன் என்று பொருள். 

எ.கா1: கிரிக்கெட்டில் டோனி தன்னிகரற்ற தலைவன் 

டோனி என்ற சொல்லுக்கு ஒரு இலக்கணம் உண்டு, அவன் அடிப்படையின் இந்திய நாட்டை சார்ந்தவன், மனிதன் மற்றும் ஆண் பாலினத்தை சேர்ந்தவன். 

எனவே மேற்சொன்ன வாக்கியத்தில் உள்ள மறைமுக தகவல்கள் என்ன வென்றால்

      • டோனி ஒரு இந்தியன், மனிதன் & ஆண்
      • டோனி ஒரு கிரிக்கெட் வீரன்
      • டோனி ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைவன்
எனவே இந்த மூன்று மறைமுக தகவல்களோடு அவரது தன்னிகரற்ற தன்மை ஒப்பிடப் படுகிறது. டோனி கிரிக்கெட் விளையாட்டில் மட்டும், இந்தியாவில் அந்த பதவியை வகுத்த மற்ற தலைவர்களை விட, உலகின் இருந்த மற்றும் இருக்கும் மற்ற கிரிக்கெட் தலைவர்களை விட டோனி சிறந்தவர் என்று பொருள்.

எ.கா2: டோனி தன்னிகரற்ற தலைவன்

இந்த வாக்கியம் கூறும் மறைமுகசெய்திகள் என்ன வென்றால்

      • டோனி ஒரு இந்தியன் & மனிதன், ஆண்
      • டோனி ஒரு தலைவன் 

டோனி இந்தியாவில், உலகில் இருந்த மற்றும் இருக்கும் எந்த தலைவனும் டோனிக்கு இணை அல்ல என்று பொருள்.

எ.கா3: டோனி தன்னிகரற்றவன்

இந்த வாக்கியம் கூறும் மறைமுக தகவல்களாவன 

      • டோனி ஒரு இந்தியன், மனிதன், ஆண்  

உலகில் இருந்த மற்றும் இருக்கும் எந்த மனிதனும் டோனிக்கு இணை அல்ல என்று பொருள். டோனி என்பவர் ஒரு மனிதர், ஒரு ஆண். எனவே மனிதனிடத்தில், ஆணிடத்தில் இயல்பாக நிறைந்து இருக்கும் பண்புகளைவிட, குணங்களைவிட, திறமையைவிட மாற்றாக அல்லது அதிகமாக டோனியிடம் இருக்கும் பொழுது இந்த வார்த்தைகள் பயன்படுத்த படலாம்.

எ.கா4: இறைவன் தன்னிகரற்றவன்

இறைவன் என்ற சொல்லுக்கு ஒரு இலக்கணம் உள்ளது. இறைவன் ஆதியும் அந்தமும் அற்றவன், பிறப்பும் அற்றவன், அவனது உருவை கண்ட மனிதனோ, தேவரோ அல்லது அசுரரோ இல்லை. அவன் ஒருவனே படைத்து, காத்து அழிப்பவன்.

      • எனவே உருவ அமைப்பில், பண்பில், ஆற்றல் அளவில் இறைவனுக்கு நிகராக, ஒப்பாக, உவமையாக, எடுத்துக்காட்டாக, இணையாக வேறெந்த ஒன்றையும் நாம் கருதக்கூடாது.

முடிவுரை 

இறைவன் தன்னை பற்றி தானே சொன்ன வர்ணனைகளை கொண்டுதான் நாம் அவனை அறிந்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனோடோ, குரங்குகளோடோ, யானையோடோ,  சூரியனோடோ, பசுவுடனோ, பாம்புடனோ அல்லது நாம் அறியும், காணும் எந்த  படைப்புகளோடும் ஒப்பு நோக்க முடியாது, ஒப்பு நோக்க கூடாது.  

ஹிஜாப் - பல்வேறு பண்பாடுகளில்

ஹிஜாப் என்ற சொல் ஒரு அரபிக் மொழியின் சொல் இதற்கு தடை, பிரித்தல் அல்லது மறைக்கும் துணி என பொருள், ஜன்னலில் போடும் கர்ட்டன், அறையை இரண்டாக பிரிக்க போடப்படும் துணி, என ஒரு விஷயத்தை மறைப்பதற்காக போடப்படும் துணிக்கு ஹிஜாப் என பெயர் இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் பொது இடங்களுக்கு வரும் போது அவர்களது தலை முதல் காதல் வரை மறைக்க வேண்டும் என்பதால் அதற்கான துணியை ஹிஜாப் என்கிறார்கள்.

Hijab = Veil, முக்காடு, தலைமறைவுச்சீலை, முகத்திரை, மறைப்பு ஆடை, மறைத்து மூடுகிற

இஸ்லாம்

நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவ னாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:59)

முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக,அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்,தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,தங்கள் அலங்காரத்தை அதனின்றும் (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர,(வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல் குர்ஆன் 24:30)

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜிக்கு வரும்போது இஹ்ராமுக்காக நாங்கள் முகத்தை திறந்து வைத்திருந்தோம். வியாபார கூட்டத்தினர் எங்களை கடந்து செல்லும்போது நாங்கள் முகத்தை மூடிக் கொள்வோம். (ஆதாரம்: புகாரி)

முஃமினான பெண்கள் தங்கள் அலங்காரங்களை வெளிக்காட்ட அனுமதிக்கப்பட்டவர்கள்:

1. தம் கணவர்கள், 2. தந்தையர்கள். 3. கணவனின் தந்தை. 4. தம் மகன்கள். 5. கணவரின் மகன்கள். 6. தம் சகோதரர்கள். 7. தம் சகோதரர்களின் புதல்வர்கள். 8. சகோதரிகளின் புதல்வர்கள். 9. முஸ்லிம் பெண்கள். 10. தங்களது அடிமைகள். 11. பெண்களை விரும்ப முடியாத அளவு வயதான ஆண்கள். 12. பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறியாத சிறுவர்கள். 
 
 
கிறிஸ்தவம்

இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளாத ஒவ்வொரு பெண்ணும் தம் தலைவரை இகழ்ச்சிகுள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும். தம் தலையை மூடிக்கொள்ளாக எந்தப் பெண்ணும் தம் கூந்தலை வெட்டிக் கொள்ளட்டும். கூந்தலை வெட்டிக்கொள்வதையும் தலையை மழித்து விடுவதையும் இகழ்ச்சியாகக் கருதினால் அவர் தம் தலையை மூடிக்கொள்ளட்டும். (1 கொரிந்தியர் 11:5-6)

ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம் பண்ண வெளியே போயிருந்தபோது தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது,ஒட்டகங்கள் வரக்கண்டான்.ஒட்டகத்தில் வந்த ரெபெக்காள் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கை கண்ட போது...அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள் (ஆதியாகமம் 24:62-65)

இந்து

“When Brahma has made you a woman, you should lower your gaze and should not look up. You should put your feet together and you should not reveal what the garment and the veil conceals.”

கடவுள் பெண்களை படைத்து, அவர்களை கூச்சமுடையவராக ஆக்கியுள்ளார். பெண்கள் எந்த ஆணையும் தலைதூக்கி பார்க்க கூடாது. பார்வையை தாழ்த்திக்கொண்டவராக, உச்சி முதல் பாதம் வரை ஆடை கொண்டு மூடப்பட்டவராக பெண்கள் இருத்தல் வேண்டும்.  (ஆதாரம் : ரிக் வேதம் - எட்டாம் நூல்  33வது மந்திரம் 19-20 வரை)

பெண்களுடைய உடைகளை ஆண்கள் ஒருபோதும் உடுத்த கூடாது (ஆதாரம் : ரிக் வேதம் - 10வது நூல் 85வது பாடல் மந்திரம் 30)

பரசுராமர், ராமரை சந்திக்க வந்த போது... சீதையை பார்த்து ராமர் கூறுகிறார்... "சீதையே! நீ திரைகளுக்குள் இருந்து கொள், உன் பார்வையை தாழ்த்திக்கொள்" என்று (ஆதாரம் : மஹாவீர சரித்திரம் - அதிகாரம் 2, 71வது பக்கம்)

பிரம்மா, பெண்ணை படைக்கும் போதே அவளுக்கு கட்டளையிடுகிறார் , "பெண்ணே நீ பார்வையை தாழ்த்திக்கொள், ஆடவர்களை தலைதூக்கி பார்க்காதே, ஆடைகள் கொண்டு மூடப்பட்ட உனது அங்கங்களை யாருக்கும் வெளிப்படுத்தாதே, பெண்மையை பேணிக்கொள்வது உன் மீது கடமையாகிறது". (ஆதாரம் : ரிக் வேதம் ,பாகம் 19, மந்திரம் 8 - 33வது வரி)

இன்னும் பல சான்றுகள் உள்ளன 

தமிழ் மறைகள்


உடை, தழையுடை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, காழகம், போர்வை, கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரியம், கம்பலம், கம்பல், கவசம், சிதர்வை, தோக்கை, வார், மெய்ப்பை, மெய்யாப்பு, புட்டகம், தூசு, ஒலியல், அரணம், சிதவல், நூல், வாலிது, வெளிது, கச்சம், கூறை, அரத்தம், ஈர்ங்கட்டு, புடைவை, பட்டம், உடுப்பு, கோடி, கஞ்சுகம், சிதர், சிதவற்றுணி, வட்டுடை, வடகம், மீக்கோள், வங்கச்சாதர், வட்டம், நீலம், குப்பாயம், கோசிகம், பஞ்சி, தோகை, கருவி, சாலிகை, பூண், ஆசு, வட்டு, காம்பு, நேத்திரம், வற்கலை, கலை, கோதை, நீலி, புட்டில், சேலை, சீரம், கொய்சகம், காழம், பாவாடை, கோவணம்.

உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
...........................................................................
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்தகாலை ..... - (அகம்.86)

முதலிரவின்போது மனைவியானவள் தனது உடல்முழுவதும் ஆடையினால் சுற்றி அணிந்து முகத்தையும் மறைத்து ஒடுங்கி இருக்கிறாள். அவளது முகத்தைக் காணும் ஆவல் கொண்ட கணவன் மெல்ல அவளது முகத்திரையினை விலக்கவும் அவள் அஞ்சி நடுங்குகிறாள். இப்பாடலில் வரும் ' கொடும்புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் ' என்ற சொற்றொடரானது மிகத் தெளிவாக அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மறைத்திருப்பதைக் காட்டுகிறது. சங்ககாலப் பெண்கள் எப்போதுமே மேலாடை அணியாமல் இருந்திருந்தால், முதலிரவின்போது மட்டும் மேலாடை அணிவார்களா?. அவ்வாறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதால், சங்ககாலத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மேலாடை அணியும் வழக்கம் உண்டு என்பது உறுதியாகிறது.

இதேபோன்ற ஒரு காட்சி கீழ்க்காணும் பாடலிலும் வருகிறது.

மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
...............................................................
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே .......... - (அகம். 136)

இப்பாடலிலும் முதலிரவின்போது தனது உடலையும் முகத்தையும் ஆடையினால் மறைத்திருந்த மனைவியைப் பார்த்து ' உனது முகமெல்லாம் வியர்த்திருக்கும்; கொஞ்சமாகத் திறந்தால் காற்று வரும் ' என்று கூறி அவளது முகத்திரையினை மெல்லத் திறக்கிறான் அவளது கணவன். உறையில் இருந்து எடுக்கப்பட்ட வாளினைப் போல ஒளிவீசும் அவளது கண்களைக் காண்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழி அறியாதவளாய், நாணம் மேலிடத் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ ' என்ற சொற்றொடரானது அவள் தனது உடல் முழுவதையும் ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமின்றி, அவள் தனது முகத்தையும் மூடி மறைத்திருந்தாள் என்பதனை ' பெரும்புழுக்கு உற்ற நின் பிறைநுதல் பொறிவியர் உறுவளி ஆற்ற சிறுவரை திற ' என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது.

பழந்தமிழ்ப் பெண்டிர் திருமணத்தின்போது புத்தாடை அணிவது வழக்கமே. அதிலும் குறிப்பாக தாமரை மலரின் வண்ணத்தில் அணிவது மரபு போலும். இதைப்பற்றிய சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக .... - (கலி. 69)

திருமண நாளன்று மணமகளானவள் செந்தாமரை மலரின் நிறத்தில் ஆடை அணிந்திருந்ததை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. அவள் தனது உடல் முழுவதையுமே ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை ' கலிங்கத்துள் ஒடுங்கிய ' என்ற சொற்றொடர் விளக்கி நிற்கிறது. செந்தாமரை நிறத்துப் புத்தாடையினை மகளிர் விரும்பி அணிகின்ற செய்தியினைக் கூறும் இன்னொரு பாடல் கீழே:

...கதிர் நிழற்கு அவாஅம் பதும நிறம் கடுக்கும்
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ ... - (பெருங். உஞ்சை. 42)

இதுகாறும் கண்டவற்றில் இருந்து, சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்டது. இவர்கள் மேலாடை கொண்டு தமது மார்பகங்களை மூடி மறைத்திருந்தனர் என்ற செய்தியும் இதிலிருந்து பெறப்படுகிறது. வள்ளுவரும் கூட கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுகிறார்.

கடாஅ களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் - (குறள் 1087)

இக்குறளில் வரும் முலை என்பதற்குக் கண் என்ற பொருளோ மார்பகம் என்ற பொருளோ எதைக் கொண்டாலும் அதன்மேல் ஆடை அணிந்து மறைத்திருந்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது கவனிக்கப்படத் தக்கதாகும். சங்ககாலப் பெண்கள் தமது மார்பகங்களையும் முகத்தையும் மேலாடை கொண்டு மூடி மறைத்திருந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் படுகிறது.

சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை - (குறள் 57)
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]

பொழிப்பு: மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது. பரிமேலழகர்

 மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.
பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப
கற்பு நெறி காப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் வீரியம் வாய்க்கின்றது.
உபதேசங்களுக்கு பஞ்சம் இல்லை. பின்பற்ற வேண்டும் என்றால் பஞ்சம்தான். மு வரதராசன்

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. (தொல்காப்பியம்: களவியல் 8) 
 
“உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் / செயிர்தீர்க் காட்சிக் கற்புசிறந் தன்றெனத்” 
(தொல். களவு. 111)

பன்றி இறைச்சி உண்ண தகுமா?

கிறிஸ்தவம்

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். - லோவியராகமம் 11-7 

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. - உபாகமம் அதிகாரம் 14:8


இஸ்லாம் 

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (2:173)

இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.



நமது விருப்பமும் இறைவனின் நாட்டமும்

தமிழர் சமயம் 

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் - (நல்வழி 27)

விளக்கம்: ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும். 
 
இஸ்லாம் 

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்;
நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்;
நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன் - (அல்-குர்ஆன் 2:216)

கிறிஸ்தவம் 

"ஏனெனில், உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தருவதற்காக நலனுக்காகத் திட்டமிடுகிறேன், தீமைக்காக அல்ல என்று கர்த்தர் கூறுகிறார். அப்போது நீங்கள் என்னைக் கூப்பிட்டு, என்னிடம் வந்து ஜெபிப்பீர்கள், நான் உங்களுக்குச் செவிசாய்ப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்போது நீங்கள் என்னைத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள். - (எரேமியா 29: 11-13) 

உன் சுயபுத்தியில் சாயாதே, உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு; உன் வழிகளிலெல்லாம் அவரை ஏற்றுக்கொள், அவன் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவான். - (நீதிமொழிகள் 3:5-6)