நமது விருப்பமும் இறைவனின் நாட்டமும்

தமிழர் சமயம் 

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் - (நல்வழி 27)

விளக்கம்: ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும். 
 
இஸ்லாம் 

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்;
நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்;
நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன் - (அல்-குர்ஆன் 2:216)

கிறிஸ்தவம் 

"ஏனெனில், உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தருவதற்காக நலனுக்காகத் திட்டமிடுகிறேன், தீமைக்காக அல்ல என்று கர்த்தர் கூறுகிறார். அப்போது நீங்கள் என்னைக் கூப்பிட்டு, என்னிடம் வந்து ஜெபிப்பீர்கள், நான் உங்களுக்குச் செவிசாய்ப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்போது நீங்கள் என்னைத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள். - (எரேமியா 29: 11-13) 

உன் சுயபுத்தியில் சாயாதே, உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு; உன் வழிகளிலெல்லாம் அவரை ஏற்றுக்கொள், அவன் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவான். - (நீதிமொழிகள் 3:5-6)

அசைவ தமிழர்





புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே!

147


உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?

148

https://shaivam.org/scripture/Tamil/1184/civavakkiyam-of-civavakkiyar 

பொய் தெய்வங்கள் எவைகள்?

கிறிஸ்தவம் 


“அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள், ‘ந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். - (எரேமியா 10:11)

ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்! உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர். அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள். அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை. அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை. நியாயத்தீர்ப்புக் காலத்தில், அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும். - (எரேமியா 10:14-15)

 நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன். - (மீகா 5:14)

இஸ்லாம் 


பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும். (குர்ஆன் 55:26-27)

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! - (திருக்குர்ஆன் 28:88)

தமிழர் சமயம் 


அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றா தவர். - (அறநெறிச்சாரம் அவ்விநயம் ஆறு பாடல் -60)

விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்.

இறைவன் பொய் சொல்ல மாட்டான் *

கிறிஸ்தவம்


தேவன் பொய் சொல்லமாட்டார்.எபிரேயர் 6:16 

 தேவன் சத்தியமுள்ளவர், அவர் பொய் சொல்கிறவர் அல்ல, அவர் கறைபடாதவர் (சங் 117:2, 1சாமு 15:29)


இஸ்லாம் 


அல்லாஹ்வை விட உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:87)