தூதர்கள்

திருக்குறள் - அதிகாரம் : தூது

குறள்:681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
அன்பான குணமும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், மன்னன் விரும்பும் சிறந்த பண்பும் கொண்டிருப்பவரே தூது சொல்பவனின் தகுதிகளாகும்.

குறள்:682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

குறள் விளக்கம்:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

குறள்:683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக இருத்தல் வேண்டும்.

குறள்:684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

குறள் விளக்கம்:
இயற்கையறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வியும் ஆகிய மூன்று தன்மைகளும் உடையவனே தூது செல்லுதல் வேண்டும்.

குறள்:685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.

குறள் விளக்கம்:
செய்திகளைச் சொல்லும்போது தொகுத்துச் சொல்லியும், பயனில்லாதவற்றை நீக்கியும், இனிய சொற்களால் மகிழும்படியும் சொல்லி நன்மையைச் செய்பவனே தூதனாவான்.

குறள்:686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

குறள் விளக்கம்:
நீதி நூல்களைக் கற்று, பகைவரின் பார்வைக்கு அஞ்சாது தான் சென்ற காரியத்தைப் பகை அரசர் ஏற்கும்படி சொல்லி, காலத்தோடு பொருந்த அதை முடிக்கத்தக்கவனே தூதனாவான்.

குறள்:687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

குறள் விளக்கம்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து, சமயம் பார்த்து, இடமறிந்து, சொல்லும் வழியை எண்ணி, அவ்வாறு சொல்லுபவன் சிறந்த தூதனாவான்.

குறள்:688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
பொருள் காமங்களால் தூய்மை இழக்காமையும், அவர் அமைச்சர் துணையாகும் தன்மையும், அச்சமற்ற துணிவு இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

குறள்:689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.

குறள் விளக்கம்:
தன் அரசன் சொல்லிவிட்ட செய்தியை வேற்று அரசரிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

குறள்:690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

குறள் விளக்கம்:
தான் சொல்லுவது தனக்கு முடிவைத் தருமாயினும், அதற்கு அஞ்சாது, தன் அரசனுக்கு நன்மை தரக்கூடியதைச் சொல்பவனே தூதன்.
_______________________________________

திருமூலர் திருமந்திரம்

வேதத்தைச் செப்ப வந்தேனே' - 77
'ஆகமம் செப்ப லுற்றேனே' - 73


https://www.ytamizh.com/thirukural/kural-690/
source : https://shaivam.org/scripture/Tamil/1927/thirumandira-araichiyum-oppumai-pakuthiyum

விபச்சாரம் : மனைவி அல்லாத பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது இந்த வகைதான்

கிறிஸ்தவம்


"விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." மத்தேயு 5:27-28

இஸ்லாம்


ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

”அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.” (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்: ”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)

தமிழர் மதம்


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் (பிறனில் விழையாமை குறள் 141)

பொருள்[தன்னுடைய மனைவியல்லாமல்] பிறனுடைய [மகளாக & மனைவியாக] பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. - நாலடியார் 86

பொருள்: பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்).

பாவமன்னிப்பு

தமிழர் மதம்


அஞ்சினாய் ஏனும் அடைவது அடையுங்காண்
துஞ்சினாய் என்று வினைவிடா - நெஞ்சே
அழுதாய் எனக்கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறையுடையை ஆகு. - (அறநெறிச்சாரம் பாடல் - 78)

விளக்கவுரை தீவினைப் பயனைப் பொறுக்காது இறந்தாய் என்று எண்ணிச் செய்த வினைகளால் அடையவேண்டியதை அடையாமல் போகாய். அந்த வினைப்பயனை அஞ்சி அழுதாய் என வந்த காலனும் போகான். (ஆதலால்) வினைப்பயனை ஆற்ற உன்னை வணங்கினேன்! நிறைந்த தன்மையைக் கொண்டவனாதலால்


இந்துமதம்


ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள்

“நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்குவாயாக. விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ அவற்றையும் நீக்குக இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு- (RV V, 85, 7&8)

 “எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி. நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – (7-86)

எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும்  எங்களை மன்னித்து விடுக (2-27-14)

எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் (1-157-4)

இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி (4-12-4)

..நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக - (7-58-5)

செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள்! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக (10-63-8)

கிறிஸ்தவம்


1 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன், எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். 2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும். 3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும் நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான். 4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள். (சங்கீதம் 130)

இஸ்லாம்


அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்பு கோறுதலை ஏற்றுக்கொள்கின்றான், அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25)

தௌபா: “தௌபா” என்றால் “பாவமன்னிப்பு” என்றாலும். அதற்கு நான்கு நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வினவப் படுகின்றபோதே அது ‘தௌபா’வாக கருதப்படும். அவைகளில் மூன்று நிபந்தனைகள் பொதுவானவையாகவும் , ஒரு நிபந்தனை ”ஹுகூகுல் இபாத்” அதாவது மனிதர்களுக்கு மத்தியிலுள்ள உரிமைகளுடன் தொடர்புபட்டதாகும். அவைகளாவன,

முதலாவது: தான் செய்த பாவத்தை நினைத்து பரிதாபப்படுவது.

இரண்டாவது: அப்பாவத்தை விட்டு முழுமையாக நீங்குவது.

மூன்றாவது: அப்பாவத்தை நோக்கி மீண்டும் ஒருபோதும் செல்லமாட்டேன் என்ற உறுதிப்பாடு.

நான்காவது: ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு தீங்கிழைத்துவிட்டால். பாதிக்கப்பட்ட மனிதனிடம்போய் மன்னிப்புக்கோர வேண்டும். இல்லை என்றால் அதுவரை அல்லாஹுத்தஆலா மன்னிக்க மாட்டான்.

நிபந்தனை

இஸ்திஃபார்: “இஸ்திஃபார்” என்ற சொல்லுக்கும் தமிழில் “பாவமன்னிப்பு” என்றே கூறப்படும். சிலவேலை இஸ்திஃபார் என்பது மேலே கூறப்பட்ட தௌபாவாகவும் இருக்கலாம். சிலவேலை நமது நாவினால் கூறக்கூடிய வார்த்தைகளாகிய “அஸ்தஃபிருல்லாஹ்” (أسْتَغْفِرُ اللهَ) அல்லது ”அல்லாஹும்ம இஃபிர்லீ” (اللَّهُمَّ اغْفِرْ لِي) என்பதாகவும் இருக்கலாம். எனவே, தௌபாவுடைய நிபந்தனைகள் இஸ்திஃபாரிலே ஒன்று சேர்ந்தால் அந்த இஸ்திஃபாரை “தௌபா” என்றும் அழைக்கலாம். அப்படி தௌபாவின் நிபந்தனைகள் இன்றி கேட்கப்படும் பாவமன்னிப்பு “இஸ்திஃபார்” என்று கூறப்படும்.

எனவே, தௌபா என்பது பாவத்திலிருந்து முழுமையாக நீங்கி தனது இறைவனிடத்தில் முழுமையாக மீள்வதையும், இஸ்திஃபார் என்பது அல்லாஹ்விடத்தில் தனது பாவத்திற்கான மன்னிப்பு வேண்டுவதை நாடுவதையும் குறிக்கும்.


வெட்கம் (அ) நாணம்

தமிழர் சமையம்


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. - குறள் 1012

உரை: உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; மாந்தருக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று. - முதுமொழிக் காஞ்சி 1:6

நலன் உடமையின் - அழகுடைமையை விட
நாணு - நாணமுடைமை

பொருள்: அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது. - முதுமொழிக் காஞ்சி 4:3

நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை
பசித்தலின் - பசித்தலினின்றும்

பொருள்: வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்

இஸ்லாம் 


அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book : 2 புகாரி பாடம் : 16 24.

“மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், ‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்’ என்பது” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். (நூல்; புஹாரி, 6120)


தூக்கமும் இறப்பும்

தமிழர் சமயம் 


உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்: நிலையாமை குறள் எண்:339)

பரிமேலழகர் உரை: சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்(உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)

இஸ்லாம் 


அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை {தன்னிடத்தில் } நிறுத்திக்  கொள்கிறான். மீதிள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை {வாழ}அனுப்பி விடுகிறான். - (திருக்குர்ஆன் 39:42)

 

கிறிஸ்தவம்  


இவைகளைச் சொன்னபின், அவர் அவர்களிடம், "நம்முடைய நண்பன் லாசரு தூங்கிவிட்டான், ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்" என்றார். சீடர்கள் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கிவிட்டால், அவர் குணமடைவார்" என்றார்கள். இப்போது இயேசு அவருடைய மரணத்தைப் பற்றிப் பேசினார், ஆனால் அவர் தூக்கத்தில் ஓய்வெடுக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம் தெளிவாக, “லாசரு இறந்துவிட்டார். (ஜான் 11:11-14 )