இறைவனை எப்படி, எத்தனைமுறை வணங்குவது?

தமிழர் சமயம் 


வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்,
வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது,
சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று.வேண்டுறோம்.

இஸ்லாம் 


இறைவனை வணங்கும் முறை

நீர் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! - (அல்குர்ஆன் 15:98)

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரீ 631  

(குளிப்பு கடமை இல்லாதவர்கள்) ‘உளூ (உடலை சுத்தம் செய்தல்) நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 135, முஸ்லிம் 330)

‘எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) (நூல்: புகாரீ 160)


எப்பொழுது எத்தனைமுறை வணங்குவது?  


நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (குர்ஆன் 4:103

ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: (முஸ்லிம் 394)

1) ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1075)

2) ‘லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: (முஸ்லிம் 1075)

3) ‘அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1076)

4) ‘மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1076) 

5) ‘இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1074

 
கிறிஸ்தவம் & யூத மதம் 

    • நின்று 
      • இயேசு இவற்றைப் பேசினார்; (நின்று கொண்டு) வானத்தை நோக்கித் தன் கண்களை உயர்த்தி, "அப்பா, நேரம் வந்துவிட்டது" என்றார். - (யோவான் 17:1)    
      • அன்னாள் நின்றுகொண்டு தன் விண்ணப்பத்தை கர்த்தரிடம் கொடுத்தாள், கர்த்தர் அவளுக்குப் பதிலளித்தார். (1 சாமு 1:26) 
      • பயந்து நில்லுங்கள், பாவம் செய்யாதீர்கள்; சேலா. (சங்கீதம் 4:4) 

    • அமர்ந்தது 
      • தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான் : அப்போது தாவீது அரசன் உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான். தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்? (2 சாமுவேல் 7:18)  
    • கைகளை உயர்த்தி 
      • புனித ஸ்தலத்திற்கு உங்கள் கைகளை உயர்த்துங்கள்
        மற்றும் கர்த்தரை ஆசீர்வதிப்பாராக (சங்கீதம் 134:2)
      • என் ஜெபம் உமக்கு முன்பாக தூபமாகவும் , என் கைகளை உயர்த்துவது மாலை பலியாகவும் எண்ணப்படும்! (சங்கீதம் 141:2
    • மண்டியிட்டு
      • சாலொமோன் இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் கர்த்தருக்குச் செலுத்தி முடித்தபின், அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக எழுந்தான் , அங்கே வானத்தை நோக்கி கைகளை நீட்டி மண்டியிட்டான். (1 இராஜாக்கள் 8:54) 
      • தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான். (டேனியல் 6:10)  
      • [இயேசு] அவர்களுக்கு அப்பால் ஒரு கல்லெறி தூரம் விலகி, முழங்கால்படியிட்டு , “அப்பா, உமக்குச் சித்தமானால், இந்தக் கோப்பையை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் என் சித்தம் அல்ல, உமது சித்தம் நிறைவேறும்." ( லூக்கா 22:41-42
    • தரையில் தலை வைத்து 
      • "யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினார்..." (யோசுவா 5:14)
         
      • "மோசேயும் ஆரோனும் சபையின் முன்னிலையிலிருந்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்றார்கள், அவர்கள் முகங்குப்புற விழுந்தனர்..." (எண்கள் 20:6)
         
      • "ஆபிரகாம் முகங்குப்புற விழுந்தான்..." (ஆதியாகமம் 17:3)
         
      • "...அவர்கள் சிம்மாசனத்தின் முன் முகங்குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்." (வெளிப்படுத்துதல் 7:11)
         
      • "...பின்னர் அவர்கள் தலை குனிந்து, தங்கள் முகத்தை தரையில் ஊன்றி இறைவனை வணங்கினர்." (நெகேமியா 8:6)
         
      • "...அப்பொழுது தாவீதும் இஸ்ரவேலின் மூப்பர்களும் சாக்கு உடை உடுத்தி முகங்குப்புற விழுந்தனர்." (1 நாளாகமம் 21:16)
          
      • சிறிது தூரம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து, "என் பிதாவே, கூடுமானால் இந்தப் பாத்திரம் என்னிடமிருந்து எடுக்கப்படும். ஆனாலும் என் சித்தத்தின்படி அல்ல, உமது சித்தத்தின்படியே" என்று ஜெபித்தார். - (மத்தேயு 26:39) 
 

எப்பொழுது எத்தனைமுறை வணங்குவது?  


ஆரம்பகால திருச்சபையின் காலத்திலிருந்தே , இறைவணக்கமானது ஒரு நாளில் ஏழு நேரங்களில் செய்யும்படி கற்பிக்கப்பட்டது.; அப்போஸ்தலிக்க மரபில், ஹிப்போலிடஸ் கிறிஸ்தவர்களுக்கு 
1) சூரியன் உதிக்கும் பொழுது, ​​ 
2) மாலை விளக்கு எரியும் போது, ​​ 
3) படுக்கை நேரத்தில், 
4) நள்ளிரவில் : இயேசு கடவுளிடம் ஜெபிப்பதில் இரவைக் கழித்தார் (லூக்கா 6:12) 
5) பகலின் மூன்றாவது, 
6) ஆறாவது மற்றும் 
7) ஒன்பதாம் மணிநேரம், ஆகிய ஏழு முறைகள் கிறிஸ்துவின் பேரார்வத்துடன் தொடர்புடைய மணிநேரங்கள் என கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார் .

மறுமை என்ற ஒன்று உண்டா?

தமிழர் சமயம்


மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.(முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)

மறுஉலகம் என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.
 
மனநலத்தின் ஆகும் மறுமை (459)
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)
மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

என்ற குறள்களில் மறு உலக வாழ்கையை சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்து கையாள்கிறார்:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும் (98)

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இன்மையும் இன்றி வரும் (1042)

இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அதாவது மறுமை வாழ்க்கையில் சுவர்க்கம் என்பதையும் கச்சிதமாகச் சொல்கிறார்.

அதை,
வானென்னும் வைப்பு (24)
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)
புக்கில் (340)
வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)
வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும்,
பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும்,
அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை)
அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும்,
அதற்குக் காரணம் பற்று (347) என்றும்,
பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346)
ஆசை, வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் துன்பம் என்பது தொடரும் என்றும்,

இம்மையில் செய்த வினையின் விளைவு மறுமையில் மீண்டும் எழும் பொழுது அதன் வினைப்பயன் தொடரும் என்றும், (107, 126, 398, 538),

பற்றற்ற கண்ணே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் (349) என்றும்
படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. - குறள் 23.

இருமை வகை தெரிந்து - இவ்வுலக மறுஉலக வாழ்கை என்னும் இரண்டு உள்ளதென ஆராய்ந்து அறிந்து; ஈண்டு - இம்மையில், அறம் பூண்டார் பெருமை - அறக் காரியங்களை செய்வர் பெருமை; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. குறள் 374

இருவேறு உலகத்து - இம்மை மறுமையில்
இயற்கை திருவேறு - உள்ள பொருள்களின் தன்மைகள் வெவேறு
தெள்ளிய ராதலும் வேறு. - அவர்கள் அதில் அறிவதும் வேறு வேறு

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே. திருமந்திரம்

பொழிப்புரைஅகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

பொழிப்புரை : ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

குறிப்புரை : `உயிர்களினது பக்குவ வகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.
``நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்``*
என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத் தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.
இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவாபக்குவங்கள்` என்பது கூறப்பட்டது 

அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தாற் றவஞ்செய்யா தார். - நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் (01)

கருத்துரைமேமையான தவஞ்செய்யாதார் இப்பிறப்பில் இல்வாழ்க்கையாரே வாழ்பவர்கள் என்று தலைவாயிலைப்பற்றி உள்ளே நுழையாதவர்களாய் வருத்தப்பட்டிருப்பார்கள்.

விசேடவுரைதவஞ்செய்யாதார்- எழுவாய், இருப்பர்-பயனிலை, அண்ணார்த்தல் என்னுந் தொழிற்பெயர் வினையாங்கால் அண்ணாருகிறது என்றாகும். அண்ணார்ந்து இதில் ஒற்றுக்கெட்டது.

பதவுரை
மேலை= மென்மையான ;
தவத்தால்= தவங்காரணமாக;
தவம்= நற்றவம்;
செய்யாதார்= செய்யாதவர்கள்;
அகத்தாரே= இல்வாழ்க்கையாரே;
வாழ்வார் என்று= வாழ்பவர்கள் என்று;
அண்ணாந்து= தலைநிமிர்ந்து;
நோக்கி= பார்த்து;
தாம்புக= தாம் உள்ளே நுழைய;
பெறார்= பெறாதவர்களாய்;
புறங்கடை= தலைவாயிலை;
பற்றி= பிடித்துநின்று;
மிக= மிகவும்;
தாம்= தாங்கள்;
வருந்தி= வருத்தப்பட்டு;
இருப்பர்= இருப்பார்கள்.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு
உறும் ஆறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும். பாடல்: 95 (மறுமை)

பதவுரை
மறுமையும்= மறு பிறப்பையும்,
இம்மையும்= இப்பிறப்பையும்,
நோக்கி= ஆராய்ந்து,
ஒருவர்க்கு= ஒருவருக்கு,
இயைவ= பொருந்தியவைகளை,
கொடுத்தல்= வழங்கல்,
உறும் ஆறு= பொருந்தும் வழி
வறுமையால்= தரித்திரத்தினால்,
ஈதல்= கொடுத்தல்,
இசையாது எனினும்= கூடாதாயினும்,
இரவாமை= யாசியாதிருத்தல்,
ஈதல்= கொடுத்தலினும்,
இரட்டி= இருமடங்காக,
உறும்= அடையும்.

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர். 243

எந்த மண்ணில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக முளைக்காது.
எந்த நாட்டில் பிறந்தாலும் நல்லறம் புரிந்தவர் சுவர்க்கம் புகுவர்.
நல்லறம் செய்யும் தன் முயற்சியால்தான் சுவர்க்கம் புகமுடியும்.
வடதிசை மண்ணிலும் நல்லறம் புரியாமல் வீணானவர்கள் உண்டு.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த் துண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 275

அலை வீசி எறியும் பெரிய கடலில் இருந்தாலும் நீர் சிறிதளவே இருக்கும் சிறிய கிணற்று நீரையே மக்கள் உண்பர். அதுபோல, வழங்கி, மறுமை இன்பம் பெறாமல் சேர்த்து வைத்திருக்கும் ஒருவனின் செல்வத்தை விட, சான்றோரை வாட்டி வதைக்கும் வறுமை நிலையே தலைமையானதாகும்.

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார். 329

புல்லறிவினார் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்றபோதும், மறுமைக்குரிய அறநினைவினராய் இருப்பர்; ஆனால், அறம் செய்தற்குரிய ஆற்றல் மிக்க பொருள் வளம் நிறைந்த காலத்தில், மறுமைக்குரிய அறத்தைப் பற்றி, சிறுகடுகின் அளவேனும் சிந்தியார்.

இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக எண்ண வேண்டும் 

பேறுஅழிவு சாவு பிறப்புஇன்பத் துன்பம் என்ற
 ஆறுஉள அந்நாள் அமைந்தன - தேறி
 அவைஅவை வந்தால் அழுங்காது விம்மாது
 இவைஇவை என்றுஉணரற் பாற்று. - அறநெறிச்சாரம் 149

 விளக்கவுரை செல்வம், வறுமை, இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம் என்னும் இந்த ஆறும் முன்பு செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; (ஆதலால்) இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும் மகிழாது, வருந்தாது நம்மை நாடி வந்த இவை, இன்ன வினைகளால் வந்தன என்று ஆராய்ந்து அடங்குவதே செய்யத்தக்கது.


ஒருவன் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் தானே! பாடல் - 150

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
 தானே தனக்கு மறுமையும் இம்மையும்
 தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
 தானே தனக்குக் கரி.

விளக்கவுரை ஒருவன் தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்; பிறர் அல்லர்! தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத்தானே அனுபவித்தலால் தனக்குச் சான்று தானே ஆவான்.

சிறந்த துணையாவது செய்வினையே பாடல் - 151

செய்வினை அல்லால் சிறந்தார் பிறர்இல்லை
 பொய்வினை மற்றைப் பொருள்எல்லாம் - மெய்வினவில்
 தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
 நீயார் நினைவாழி நெஞ்சு.

விளக்கவுரை நெஞ்சே! நீ செய்த வினை உனக்குத் துணையாய் அமைவதின்றிச் சிறந்த துணைவர் வேறு எவரும் இல்லை! நிலை பெற்றவை என நீ எண்ணுபவை எல்லாம் அழியும் தன்மை உடையவையே! உண்மையை அறிய வினவினால் தாய் யார்? மனைவி யார்? தந்தை யார்? மக்கள் யார்? நீ இவர்களுக்கு யார்? (இவர்கள் உன்னுடன் எத்தகைய தொடர்பை உடையவர்?) இவர்கள் நிலையான தொடபற்றவர்கள்.

எண்ணருந்துன்பம் உடலுக்கு! பாடல் - 152

உயிர்திகிரியாக உடம்புமண் ணாகச்
 செயிர்கொள் வினைகுயவ னாகச் - செயிர்தீர்
 எண்அரு நல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
 எண்அருநோய் துன்பம் அவர்க்கு.

விளக்கவுரை குற்றம் தரும் வினை, பாண்டம் செய்யும் குயவனாக நின்று, உயிர்க் காற்றையே தண்ட சக்கரமாகவும், எழுவகைப்பட்ட, தாதுவையே களிமண்ணாகவும் கொண்டு குற்றத்தினின்று நீங்காத நினைத்தற்கு அரிய பாத்திரத்தைச் செய்யும் அந்த உடலுக்குள் அதனை அனுபவிக்கும் சீவர்க்கு அளவிட இயலாத கொடிய நோய்கள் பல உள்ளன.

மறுமையைப் பற்றி எண்ண வேண்டும் பாடல் - 153

முன்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதுஓர்
 இல்பிறந்து இன்புஉறா நின்றவர் - இப்பிறப்பே
 இன்னும் கருதுமேல் ஏதம் கடிந்து அறத்தை
 முன்னி முயன்றுஒழுகற் பாற்று.

விளக்கவுரை முன்னைய பிறவியில் தாம் இயற்றிய அறச் செயல் காரணமாக, நல்ல ஒரு குடியில் தோன்றி இன்பத்தை அனுபவிப்பவர்கள், இம்மை இன்பத்தையே இன்னமும் எண்ணி, அதற்காக முயல்வாராயின், மறுமையில் அடைவது துன்பமே ஆகும். ஆதலால் இம்மை இன்பத்தில் செலுத்தும் கருத்தை ஒழித்து, மறுமை இன்பத்துக்குக் காரணமான அறத்தை நினைத்து முயன்று அதனைச் செய்வதே சிறந்தது.

மறுமைக்கு அறம் செய்யாதவர் அறியாதவர் பாடல் - 154

அம்மைத் தாம் செய்த அறத்தின் வரும்பயனை
 இம்மைத் துய்த்து இன்புஉறா நின்றவர் - உம்மைக்கு
 அறம்செய்யாது ஐம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
 கறந்து உண்டுஅஃது ஓம்பாமை யாம்.

விளக்கவுரை முன் பிறவியில் தாம் செய்த அறம் காரணமாக இப்பிறவியில் இன்பம் அனுபவிப்பவர்கள் அறத்தைச் செய்யாமல் ஐந்து பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பங்களை நுகர்ந்து கொண்டு வாளா இருத்தல், நல்ல பசுவின் பாலைக் கறந்து அருந்தி, அப்பசுவை உணவிட்டுக் காவாமல் இருத்தல் போலாம்.

நல்ல பிறவி தீய பிறவிகளுக்குக் காரணம் பாடல் - 155

இறந்த பிறப்பில்தாம் செய்த வினையைப்
 பிறந்த பிறப்பால் அறிக - பிறந்திருப்பது
 செய்யும் வினையால் அறிக - இனிப்பிறந்து
 எய்தும் வினையின் பயன்.

விளக்கவுரை மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் முன் பிறவியில் செய்த நல்வினை தீவினைகளை, எடுத்துள்ள இப் பிறவியில் அடையும் இன்பதுன்பங்களால் அறிந்து கொள்க. இனிமேல் பிறவி எடுத்து அடையும் இன்ப துன்பங்களை, இம்மையில் பிறந்து செய்யும் நல்வினை தீவினைச் செயல்களால் அறிவார்களாக!

வீடுபேற்றை அடையாத பிறவி பயன் அற்றது பாடல் - 156

தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தார்
 ஆய்வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன்கண்
 மேலைப் பிறப்பும் இதுவானால் மற்று என்னை?
 கூலிக்கு அழுத குறை.

விளக்கவுரை மக்கள் வேறொரு தொடர்பும் இல்லாமல் தம்தம் வினை காரணமாகத் தாயும் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும் என உறவினராய் வந்து பிறந்து வீடு பேற்றை அடைய முயலாமல் தம்முள் சிலர் வருந்த இறந்துபோதல், வரும் பிறவியிலும் அவர் மீண்டும் தோன்றி அவர்களுள் சிலர் வருந்த இறந்து விட்டால், அவர்கள் வாழ்க்கை ஒருவருக்கொருவர் கூலியின் பொருட்டு அழுத செயலாகும்.
 

இஸ்லாம்


(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். 2:4

குர்ஆன் இரு உலக பொருள்களின் தன்மைகளை  இப்படி கூறுகிறது "(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - திருக்குர்ஆன் 2|25

இவ்வுலக மனிதன் அறிய முடியாதது பற்றி திருக்குர்ஆன் "32:17. அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது." என்று கூறு கிறது மேலும் மறுமையில் அவன் நிலை பற்றி "99:7,8. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார்." இவ்வாறு கூறுகிறது.

திருக்குறள் என்பது ஓரிறை கொள்கையை மட்டுமன்றி மேலே குறிப்பிட்ட அனைத்து இஸ்லாமிய கொள்கைகளையும் வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கிறது.. ஆனால் அதற்க்கு பொழிப்புரை எழுதிய காலகட்டத்தில் வாட மொழியிலிருந்து வந்த சித்தாந்தங்களின் ஆதிக்கத்தால் எழு பிறவி என்று குறிப்பிடபட்ட இடங்களை ஏழு பிறவி என்று கருத்து திணிப்பு பொழிபபுறையில் இருப்பது  உண்மை. அனால் அது மீண்டும் எழும் பிறவியை அதாவது மறுமையை அவ்வாறு விளக்குகிறது. 

முடிவில் திருக்குறள் இம்மை வாழ்க்கை மறுமை வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வரையறைகள் வரம்புகள் இஸ்லாத்துடன் நிரப்பமாக ஒத்துபோகிறது.. 

இது இறைவன் திருக்குரானில் சொன்ன விஷயங்களையும் அதாவது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறை தூதர்கள் அனுப்ப பட்டார்கள் அவர்களை அந்த சமுதாயத்தில் இருந்தேஅவன் தேர்வு செய்து அனுப்பினான் அவர்கள் விளங்கும் பொருட்டு என்றதும் அவர்கள் உலகம் மற்றும் உலக மக்கள் அனநிவரையும் படைத்த இறைவனாகிய அவனையே வணங்க வலியுறுத்தினார்கள் என்று  கூறியதும் நிரூபணம் ஆகிறது. 

மேலும் வேதத்தை உடையவர்களை உங்களுக்கும் எமக்கும் இடையிலான ஒருபொதுவான விஷயத்தின் பக்கம்வாருங்கள் என்ற இறை வசனத்தை கொண்டு் அழைப்பு விடுப்பதன் மூலம்  ஏறக்குறைய 95% போதனைகள் ஒன்றாகவே இருக்கும் வேத வசனங்களை பின்பற்றுவதன் மூலம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த முடியும்.  
 
 
 

ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. - (முஸ்லிம் 5436.)

மது

தமிழர் சமயம்


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். - (குறள் 926)

மணக்குடவர் உரை: உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.

மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. - (திருமந்திரம் 317)

(ப. இ.) மெய்ம்மையினையும் மெய்ப்பொருள் உண்மையினையும் அழித்தொழிக்கும் பழிபடு கள்ளினை யுண்பார் வழி குழி தெரியாது வீழ்ந்து மயங்குவர். தீராப் பெருந்துன்பம் எய்தித் தியங்குதலாகிய கலக்கமுற்றுக் கவலைகூர்வர். மேலும் அவர் பிறப்பு இறப்பு ஆகிய பெருந் துன்பத்துள் வீழ்த்தி இயக்கும் இழிகாமமும் கழிகாமமும் மாறாப் பெண்ணியலாரை நண்ணுவர். அம் மடவார் தரும் சிற்றின்பமே முற்றின்பமாகக் கொண்டு முயங்குவர். இறைவன் திருவடியுணர்வாகிய சிறந்த நயமிக்க சிவஞானஞ்சேர்ந்து முதன்மையடையார். இந் நிலையினால் பிறழா நிகழ்ச்சியாய் என்றும் நிகழும் இடையறா இன்புமாம். திருவடிப்பேற்றினைக் கள்ளுண்பான் எய்தான். எய்துமே : ஏகாரம் எதிர்மறை. முந்தார் முதன்மையடையார். இயங்கும் மடவார்: இயங்கும் பிறவினைப் பொருளில் வந்த தன்வினை; பிறப்பு இறப்புக்களில் உழலச் செய்து இயக்கும் பெண்ணியலார்.

இஸ்லாம்


புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் – அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் – ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர்.அவ்விரண்டிலும் பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக! (குர்ஆன் 2:219)

மதுபானத்தையும், அதை பருகுபவரையும், பிறருக்குப் பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும் அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்ப வரையும், அதை சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) (நூல்: இப்னு மாஜா 3371)

அதிகம் போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். - அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (நூல்: திர்மிதீ 1788 நஸயீ 5513. 3725.)

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள். (முஸ்லிம் 3995)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள். - (முஸ்லிம் 4071)


கிறிஸ்தவம் & யூதமதம் 


கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - (லேவியராகமம் : 10: 8 - 11)

திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - (நீதிமொழிகள் 20:1)

ஆனாலும் இவர்களும் (Wine) திராட்சரசத்தால்மயங்கி, (Stong Drink) மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள். ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். - (ஏசாயா 28:7)

அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (Wine) திராட்சரசமும் (Stron Drink) மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். - (லூக்கா 1:15)

மருத்துவ ஆய்வு வெளியீடு 

புற்றுநோய் ஆபத்து முதல் துளி ஆல்கஹால் தொடங்குகிறது: WHO 

புற்றுநோய்க்கான ஆபத்து முதல் துளி மதுவில் இருந்து தொடங்குகிறது, எந்த அளவு ஆல்கஹால் மனித ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது என்று கூற முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் “ஆல்கஹால் நுகர்வு என்று வரும்போது, ​​ஆரோக்கியத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவு எதுவும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளது.

யூத பயங்கரவாதிகளின் இரகசிய திட்டம் நூலிலிருந்து - page 7 

புறநானூறு இஸ்லாமிய போதனைகள் ஒப்பீடு


1) யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

பொருள் : எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்

இஸ்லாம்: உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், (குர்ஆன் 4:1)

2&3) தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

பொருள் : தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை; துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

இஸ்லாம்: எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டுகொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டுகொள்வான் (அல்குர்ஆன் 99:6-8).
“எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்” (அல்-குர்ஆன் 17:15)

4) சாதலும் புதுவது அன்றே!

பொருள் : செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

இஸ்லாம்: “நிச்சயமாக ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.” (அன்பியா: 35)

5) வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!

பொருள் : வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இஸ்லாம் : “உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்;  (அல்-குர்ஆன் 10:70)

6) முனிவின் இன்னாது என்றலும் இலமே!

பொருள் : வெறுத்து துறப்பதும் தவறு;

இஸ்லாம் : ''அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.'' - (அல்குர்ஆன் 57:27)                                                                                                   

7) மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது,

பொருள் : வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

இஸ்லாம்: “இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது;  (அல்-குர்ஆன் 10:24)

8) கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

பொருள் : கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

இஸ்லாம் : திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக இறைவன் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; - (குர்ஆன் 2:74)

9 & 10) நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

பொருள் : அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (விதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

இஸ்லாம் : பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள் - விதி எழுதப்பட்ட) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது இறைவனுக்கு மிக எளிதானதேயாகும். உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); - (குர்ஆன் 57 : 22-23)

11) காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,

பொருள் : அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

இஸ்லாம்:  எவர்கள் (உண்மையை அறிந்து) நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. - - (குர்ஆன் 95:6.)                               

12 & 13) மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

பொருள் : பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]. சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

இஸ்லாம் : சஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்’ என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மவுனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவரைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்’ எனக் கூறினார்கள். - (நூல்: புகாரி 5091)

-கணியன் பூங்குன்றன்
 (பாடல்192, புறநானூறு)

கூலி

கிறிஸ்தவம் 

 “உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவனிடம் திருடாதீர்கள். வேலைக்காரனின் கூலியை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள்." - (லேவியராகமம் 19:13)

இஸ்லாம் 

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: இப்னுமாஜா 2443)