தமிழர் சமயம்
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்துமுன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்,வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்,கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை,நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது,சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று.வேண்டுறோம்.
இஸ்லாம்
இறைவனை வணங்கும் முறை
நீர் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! - (அல்குர்ஆன் 15:98)
‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரீ 631
(குளிப்பு கடமை இல்லாதவர்கள்) ‘உளூ (உடலை சுத்தம் செய்தல்) நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 135, முஸ்லிம் 330)
‘எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) (நூல்: புகாரீ 160)
எப்பொழுது எத்தனைமுறை வணங்குவது?
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (குர்ஆன் 4:103)
ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: (முஸ்லிம் 394)
1) ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1075)
2) ‘லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: (முஸ்லிம் 1075)
3) ‘அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1076)
4) ‘மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1076)
5) ‘இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்: முஸ்லிம் 1074)
- நின்று
- இயேசு இவற்றைப் பேசினார்; (நின்று கொண்டு) வானத்தை நோக்கித் தன் கண்களை உயர்த்தி, "அப்பா, நேரம் வந்துவிட்டது" என்றார். - (யோவான் 17:1)
- அன்னாள் நின்றுகொண்டு தன் விண்ணப்பத்தை கர்த்தரிடம் கொடுத்தாள், கர்த்தர் அவளுக்குப் பதிலளித்தார். (1 சாமு 1:26)
- பயந்து நில்லுங்கள், பாவம் செய்யாதீர்கள்; சேலா. (சங்கீதம் 4:4)
- அமர்ந்தது
- தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான் : அப்போது தாவீது அரசன் உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான். தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்? (2 சாமுவேல் 7:18)
- கைகளை உயர்த்தி
- புனித ஸ்தலத்திற்கு உங்கள் கைகளை உயர்த்துங்கள்
மற்றும் கர்த்தரை ஆசீர்வதிப்பாராக (சங்கீதம் 134:2),- என் ஜெபம் உமக்கு முன்பாக தூபமாகவும் , என் கைகளை உயர்த்துவது மாலை பலியாகவும் எண்ணப்படும்! (சங்கீதம் 141:2)
- மண்டியிட்டு
- சாலொமோன் இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் கர்த்தருக்குச் செலுத்தி முடித்தபின், அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக எழுந்தான் , அங்கே வானத்தை நோக்கி கைகளை நீட்டி மண்டியிட்டான். (1 இராஜாக்கள் 8:54)
- தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான். (டேனியல் 6:10)
- [இயேசு] அவர்களுக்கு அப்பால் ஒரு கல்லெறி தூரம் விலகி, முழங்கால்படியிட்டு , “அப்பா, உமக்குச் சித்தமானால், இந்தக் கோப்பையை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் என் சித்தம் அல்ல, உமது சித்தம் நிறைவேறும்." ( லூக்கா 22:41-42)
- தரையில் தலை வைத்து
"மோசேயும் ஆரோனும் சபையின் முன்னிலையிலிருந்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்றார்கள், அவர்கள் முகங்குப்புற விழுந்தனர்..." (எண்கள் 20:6)
"ஆபிரகாம் முகங்குப்புற விழுந்தான்..." (ஆதியாகமம் 17:3)
"...அவர்கள் சிம்மாசனத்தின் முன் முகங்குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்." (வெளிப்படுத்துதல் 7:11)
"...பின்னர் அவர்கள் தலை குனிந்து, தங்கள் முகத்தை தரையில் ஊன்றி இறைவனை வணங்கினர்." (நெகேமியா 8:6)
"...அப்பொழுது தாவீதும் இஸ்ரவேலின் மூப்பர்களும் சாக்கு உடை உடுத்தி முகங்குப்புற விழுந்தனர்." (1 நாளாகமம் 21:16)
- சிறிது தூரம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து, "என் பிதாவே, கூடுமானால் இந்தப் பாத்திரம் என்னிடமிருந்து எடுக்கப்படும். ஆனாலும் என் சித்தத்தின்படி அல்ல, உமது சித்தத்தின்படியே" என்று ஜெபித்தார். - (மத்தேயு 26:39)
எப்பொழுது எத்தனைமுறை வணங்குவது?
ஆரம்பகால திருச்சபையின் காலத்திலிருந்தே , இறைவணக்கமானது ஒரு நாளில் ஏழு நேரங்களில் செய்யும்படி கற்பிக்கப்பட்டது.; அப்போஸ்தலிக்க மரபில், ஹிப்போலிடஸ் கிறிஸ்தவர்களுக்கு1) சூரியன் உதிக்கும் பொழுது, 2) மாலை விளக்கு எரியும் போது, 3) படுக்கை நேரத்தில்,4) நள்ளிரவில் : இயேசு கடவுளிடம் ஜெபிப்பதில் இரவைக் கழித்தார் (லூக்கா 6:12)5) பகலின் மூன்றாவது,6) ஆறாவது மற்றும்7) ஒன்பதாம் மணிநேரம், ஆகிய ஏழு முறைகள் கிறிஸ்துவின் பேரார்வத்துடன் தொடர்புடைய மணிநேரங்கள் என கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார் .