மொழி க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி
மொழி க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி

இராமலிங்க அடிகள் கொள்கைகள்


- கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
- புலால் உணவு உண்ணக்கூடாது.
- எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
- சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
- மத வெறி கூடாது .

இவரது கொள்கை வேத மற்றும் நெறி நூல்களை கற்று அதன் வாயிலாக பிறந்தது.. நெறி நூல்களில் இருந்து வேறுபட்ட நடைமுறை குழப்பங்களை பிரித்து கட்டி உருவாக்க பட்ட இவரது போதனைகளில் மாமிசம் உண்ணகூடாது என்பதை தவிர அனைத்தும் இஸ்லாதின் கொள்கைகளை அப்படியே பிரதிபலிப்பவைகள். மாமிசம் உண்ணுவதும் இஸ்லாத்தில் காட்டாயம் இல்லை.

இறைவன் இஸ்லாத்தை புணர் நிமானம் செய்தது பாலைவன பகுதியில் இருந்து என்பதால் மாமிச உணவுக்கு அனுமதி அளிக்க பட்டுள்ளது மேலும் இன்றைய மக்கள் வளத்திலும் உலகமயமாதளிலும் பஞ்சத்திலும் சமூகத்தில் அனைவரும்  மாமிசம் தவிர்த்தல் என்பது உணவு பற்றகுறையை எற்படுத்தும். மேலும் மனித பற்கள் மற்றும் செரிமான அமைப்பு இரண்டு வகையான உணவையும் சமன் செய்யும் வகையில் இறைவன் அமைதிருப்பது மாமிச உணவுக்கான அவனது அனுமதியின் சான்று..

வள்ளலாரையே இறைவனாக வணங்கும் நடைமுறை அவரது சித்தாந்தத்தை இந்த மக்கள் தொலைத்து விட்டனர் என்பதற்க்கான சான்று.. எனவே இஸ்லாம் ஒன்றே தீர்வு.. சான்று 

ஏன் இசுலாமியர்கள் மற்ற மதத்தின் சாராம்சத்தினை பொருந்தி கொள்வதில்லை?

இறைவனின் திருப் பெயரால்

இந்த கேள்விக்கு மிக முக்கியமான ஆழமான காரணம் உண்டு. அடிப்படையிலிருந்து வருவோம்.!
  • நமக்கு தெரிந்த வைத்திய முறைகள், 
  • பழங்கால அறிவியல் சார்ந்த அறிவு, 
  • மொழி
  •  ஏனைய அடிப்படையான அறிவு மற்றும் 
  • சட்டங்கள் 
அனைத்தும் நன்றாக ஆராய்ந்தோமானால் அவை அனைத்தும் மதம் சார்ந்த புத்தங்கள் வாயிலாகவே கிடைத்து இருக்கும்.

இத்தனை இரண்டு வகையில் பார்க்கலாம், 
  1. சாமி பெயரை சொல்லி மிரட்டினால்தான் மக்களுக்கு புரியும், மேலும் அவர்கள் அதனை முறையாக பின்பற்றுவார்கள் 
  2. இது நம்மை படைத்த இறைவன் நமக்கு வாழ வகுத்து இருக்கும் வழிமுறை.
முதலாவது வாசகம் வேதங்களை முற்றிலுமாக பொய் என்று மறுக்கும் அளவுக்கு வன்மையான வாசகம், ஆனால் இதற்கான வாய்ப்பு மிக குறைவு ஏனெனில் ஒவ்வொரு வேதமும் அதற்கே உரிய சிறப்புகளுடன் அது இறைவேதம்தான் என்று உறுதி படுத்தும் ஆச்சரியங்களை கொண்டு இருக்கும். அறிவியல் தத்துவம், வாழ்கை தத்துவம், பொருளாதாரம், காதல் மற்றும் அந்த அந்த கால, சமுதாய மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற சட்ட திட்டங்காளை கொண்டு இருக்கும். அவற்றில் சில இன்றளவும் அறிவியலாலோ மற்ற சில கோணத்தில் நோக்கும் போது விடை புரியா வினோதங்களாக இருக்கும். இந்த இறை வேதங்கள் மக்களுக்கு தூதர் / ரிஷி / அவதாரம் மூலமாக அளிக்கப் பட்டு வந்து இருக்கிறது.

வேத புத்தகங்களை வெறுமனே பிதற்றலாக எண்ணிவிடாமல், அதை அறியும் ஆவல் கொண்டு அதை படிப்பவர்களுக்கு தெரியும் அது கொண்டுள்ள அறிய மற்றும் ஆச்சரிய தகவல்கள்.

இதில் விஷயம் என்னவென்றால், மனிதனுக்கே உள்ள பெருமை குணம், (அனைத்து வேதங்களும் தத்துவங்களும் கண்டிக்கின்ற குணம்) என் வேதம் தான் பெரிது அதில் இல்லாதாவைகளே இல்லை என்று அது உண்மையில் போதிப்பது என்ன என்று அறியாத நிலையில் பெருமை கொண்டு மற்றவைகளை கீழ்தரமாகவோ அல்லது மருத்து பேச வைக்கிறது.

உண்மையை அறிந்தவர்களாக இருப்போமானால் வேதம் அதற்கு உரிய அனைத்து அத்தாட்சிகளையும் கொண்டுஇருக்குமானால் அது கண்டிப்பாக இறைவனிடத்தில் இருந்து வந்ததுதான் என்று விளங்கும்.

இறைவன் கொடுத்த ஓரு வேதத்தை கொண்டாடுவதும் மற்றொன்றை இழிவு படுத்துவதும் / மறுப்பதும் எந்தவகையில் அறிவுபூர்வமான செயல் என்று எனக்கு தெரிய வில்லை.

சரி ஒன்றுக்கொன்று முரண்பாடுகளை கொண்ட வேதங்களில் எதனை பின்பற்றுவது? அதற்கான பதிலும் இறைவன் வேதங்களில் கொடுத்துள்ளான்.

எப்படி மௌரியர் கால சட்டம் முகலாயர் காலத்திற்கு பொருந்தாதோ, எப்படி முகலாயர்கள் கால சட்டம் ஆங்கிலேய இந்தியாவுக்கு பொருந்தாதோ, எப்படி ஆங்கிலேய இந்திய சட்டம் சுதந்திர இந்தியாவுக்கு பொருந்தாதோ அதேபோல் வேத சட்டங்கள் அந்தந்த கால கட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் வழங்கப்பட்டது ஆகும்.

இன்னும் சுதந்திர இந்தியாவில் திருத்தப்பட்ட சட்டங்கள் பல உள்ளன, திருத்தப்பட்ட சட்டத்தை விட முந்தய சட்டம் தான் எனக்கு பிடித்து இருக்கிறது அதனயே நான் பின்பற்றுவேன் என்று நாம் சொல்லலாம், ஆனால் சட்டத்தை வகுத்து பாதுகாப்பவர்கள் பார்வையில் பழய சட்டம், செல்லாக் காசு மேலும் நீதி, திருத்தப் பட்ட சட்டத்தினைக் கொண்டே வழங்கப்படும். அதே போல் காலத்திற்கு ஏற்ப வேத சட்டங்களை கொடுக்கும் இறைவன் பார்வையில் எது திருத்தப் பட்ட அல்லது தற்போதய நடைமுறயில் உள்ள வேதம் என்று சிந்தித்து படித்து இல்லயேல் கேட்டாவது தெரிந்து கொள்வது நாம் கடமை ஆகும்.

எடுத்து காட்டாக முன்பெல்லாம் தங்கம் 5 கிலோ வரை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர சட்டம் அணுமதித்தது, இப்பொழுதோ நிலைமை அப்படி இல்லை. ஒருவேளை 5 கிலோ தங்கத்தை எடுத்து வருவீர்கள் ஆனால் பிடிபடுவீர்கள், அப்பொழுது நான் போன முறை எடுத்து வந்தேன் சட்டத்தில் வழி இருக்கிறது என்று சொல்வோமானால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்? சட்டம் மாட்ட்றப்பட்டுவிட்டது அது செய்தி தாள்களிலும் வெளியிடப் பட்டுவிட்டது, தெரிந்து கொள்வது உமது கடமை என்று சொல்வார்களா இல்லை, ஹோ உங்களுக்கு தெரியாதா, சரி நீங்கள் எடுத்து செல்லுங்கள் உங்கள் தங்கத்தை என்று சொல்வார்களா?

அதே போல் வேதத்தில் இறைவன் தெளிவான சட்டங்களையும் இது அவனது வேதம் தான் என்பதற்கான அறிகுறிகளயும் வைத்து இருக்கின்றான். தெரிந்து கொள்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. அனைத்து வேதங்களையும் படித்து எது உண்மை என்று அறிந்து கொள்ள முற்படுவது கொஞ்சம் கடினம்தான், எனவே இறைவன் அதர்கான அறிவையும் வாய்ப்பையும் சிலருக்கு கொடுத்து அவர்கள் வாழ்க்கையை முழுவதுமாக அதற்கென அற்பனித்து தங்கள் ஆராய்ச்சியினை உலகுக்கு தெரிய படுத்துகிறார்கள். அவர்கள் குறைந்தது 2 வேதமாவது முழுவதும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த அறிஞர்களின் ஆராச்சி படி புனித குர்ஆன் கடைசி வேதம் மேலும் அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட இறை வழிகாட்டி. மரியாதைக்கு உரிய திரு முகம்மது ஸல் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட தூதர் / ரிஷி / அவதாரம்.

இறைவன் என்பவன் யார் என்பதை நாம் சரியாக விளங்கி இருப்போமானால், அவன் இந்த உலகத்தின் ஆதி மூலம், பர பிரம்மம், கர்த்தர், அல்லாஹ் அனைத்தயும் படைத்தவன் அவனே என்பது புரியும். என்றால் இதில் எங்கிருந்து பிராமினுக்கு ஒரு கடவுளும் தாழ்த்த பட்டவனுக்கு ஒரு கடவுளும் இஸ்ரேலுக்கு ஒரு கடவுளும் சீனர்களுக்கு ஒரு கடவுளும் இருக்க முடியும். இறைவன் ஒருவனே அவன் எங்கிருந்து வேண்டுமானாலும் அவனது கட்டளைகளை அனுப்புவான் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்வோம்.

ஒரு இஸ்லாமியனாக இருக்க சில அடிப்பதை தகுதிகள் இருக்கிறது.
  • அவன் இறைவன் ஒருவனே என்ற உண்மையை நம்ப வேண்டும், முகம்மது ஸல் அவர்கள் இறைவனின் தூதர் என்பதை நம்ப வேண்டும். மட்டுமல்ல,
  • அனைத்து தூதர் / ரிஷி / அவதாரங்களையும் நம்புவானாக இருக்க வேண்டும்
  • அனைத்து வேதங்களையும் நம்ப வேண்டும்
நாம் அறிந்த மொழி, அறிவியல், தத்துவம், சட்டம் மற்றும் அனைத்தும் உள்பட இறைவன் நமக்கு கற்று கொடுத்ததே அன்றி வேறில்லை என்பவைகள்.

சரி அனைத்து வேதங்களையும் ரிஷிகளையும் நம்புகிறோம் என்று சொல்கிற நீங்கள் ஏன் மற்ற மதத்தவரின் பண்பாடுகளை, நம்பிக்கைகளை, கடவுள்களை, ரிஷிகள் சொல்பவைகளை, வேதங்கள் சொல்பவைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவது இல்லை? என்று கேட்கலாம்.

இவை எல்லாம் ஒரே வார்த்தையில் அடிபட்டு போகின்றன. "நம்பகத்தன்மை"

முகம்மது நபிகள் இதனை சொல்லி விட்டார்கள் என்று யாரேனும் சொன்னால் அதனை அப்படியே பின்பற்றுதல் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு அழகல்ல. ஏனெனில் அவர் போய் கூறவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான நம்பகத்தன்மையை அறிந்த பின்னரே அதனை ஏற்று நடப்பவர்கள் முஸ்லிம்கள். சொல்பவரின் நம்பகத்தன்மை, முகமது நபிகளிலிருந்து அது புத்தகமாக்க பட்ட வருடம் வரை உள்ள சங்கிலி தொடரில் உள்ள அனைவரின் நம்பகத்தன்மையும் ஆராயப்பட்டே நபிமொழிகள் பின்பற்ற படுகின்றன. புனித குரான் முகமது நபி காலத்தில் இருந்து இன்றுவரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை எனில் அது இறைவனால் அருளப்பட்ட விதம் அப்படியே இன்று வரை உள்ளது.

இது இப்படி இருக்க பழய வேதங்களில் உபநிஷான்களில் உள்ள நம்பகத்தன்மை யாராலாவது நிரூபிக்க முடியுமா? அதில் பலமாற்றங்கள் கண்டிப்பாக நிகழ்ந்து இருக்கும் என்றால் அந்த இறைவனின் வார்த்தை அதன் தூய வடிவில் இல்லை. அது போதிக்க பட்ட சங்கிலி தொடரில் இடையில் ஒருவரின் நம்பகத்தன்மை கேள்விக்கு உரியதாக இருந்தாலும் அதன் நம்பக தன்மை போய்விடுகிறது. குறைந்தது இந்த வேதங்கள் உபனிசங்கள் இதுவரை கொண்டு வரப்பட்ட சங்கிலி தொடர் யாருக்கேனும் தெரியுமா? இதுவரை வேண்டாம், அது புத்தகமாக்கப்பட்ட வரை?

கிருஸ்தவர்களின் பைபிளும் யூதர்களின் தொரவும் பலமுறை அல்லது சிலமுறை மாறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்து மதத்தின் வேதங்கள் தோன்றிய கலகட்டமே யூகத்தின் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது. பண்பாடு கலாச்சாரங்கள் பற்றி சொல்லவே வேண்டியதிலை, வேத காலத்தின் உடுப்புக்கும் நடைமுறைக்கும் இப்பொழுதுக்கும் சம்பந்தமே இல்லை.

இன்னும் நாம் விளங்கியவர்களாக இருந்தால், இந்துமதம் என்பது சைவம், வைணவம் மற்றும் வட்டார சிறு மதங்கள் மற்றும் கலாச்சாரத்தின் கலவை. அதாவது வெவ்வேறு ரிஷிகளால் அருளப்பட்ட வெவ்வேறு மக்களுக்கான வெவ்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்ட போதனைகளின் சங்கமம். எனவேதான் அதில் இத்தனை முரண்பாடுகள்.

ஒரே வரியில் விளக்க வேண்டுமானால் இறைவனின் வேதம் மற்றும் சட்டங்கள் மனிதனால் கரை படுத்தப்பட்டு இருக்கும் பொழுது நாம் அதனை பின்பற்றுவது எந்த பலனையும் தராது. மேலும் திருத்தப்பட்ட சட்டம் இருக்க பழய சட்டத்தை பின் தொடர்வது நம்மை மீளா பிரச்சனையில் தள்ளிவிடும்.

நம்மையும் இந்த உலகையும் மிக நுணுக்கமாக முரண்பாடுகள் இன்றி படைத்த இறைவனை அவனை வணங்கும் முறைப் படி வாங்குவதும் அவனது கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடப்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை ஆகும் இல்லயேல் அனைத்து மதங்கள்/வேதங்கள் சொல்லுவது போல் இறைவனின் கட்டளைக்கு அடிபணிபவர் சொர்ககத்திற்கும், இல்லயேல் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்...

அல்லாஹு ஆஹ்பர்.

ஆங்கிலமும் இந்தியும்


மொழியை வெறுப்பவர்கள் அல்ல தமிழர்கள்.

இந்தியும் ஆங்கிலமும் ஏறக்குறைய சில நூற்றாண்டு வயதுடைய மொழிகளே

ஆங்கிலத்தை ஏற்பதன் காரணம்,

  1. தமிழர் வரலாற்றில், கடல் கடந்து சென்று வாணிபம் செய்ததை காணமுடிந்த நம், எப்படி நாம் அந்நியர்களோடு உரையாடி இருப்போம் என்று சிந்திக்க கடமைப் பட்டு உள்ளோம். நாம் அவர்களிடம் பொருளீட்ட முயற்சித்ததால் அவர்களது மொழியை நாம் தான் கற்று இருக்க முடியும். இந்தவகையில் ஆங்கிலத்தையும் நாம் ஏற்றுள்ளோம். 
  2. இரண்டாவது தமிழர்களின் சங்க நூல்களை மற்றும் வரலாற்றை மீட்ருவாக்கம் செய்ததில் ஆங்கிலேயர்களின் பங்கு முக்கியமானது.
  3. மூன்றாவது ஆங்கிலம் என்பது உலக அளவிலும், இந்திய அளவிலும் ஒரு பொது மொழி ஆகும். இந்தியாவில் உள்ள ஒரு மொழியை பொது மொழியாக ஏற்பதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், ஏற்கப்பட்ட பொதுமொழி மற்ற மொழிகளை காலப்போக்கில் அழித்தொழித்து ஓங்கி நிற்கும். ஹிந்தியே அதற்கொரு உதாரணம், வடக்கில் உள்ள பெங்காலி, காஷ்மீரி, பீஹாரி, அஸ்ஸாமி, மராட்டி போன்றவைகள் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மொழி அழிந்தால் வரலாறும் அழியும், வரலாறு அழிந்தால் அதன் தரும் நடுக்கம் கோரமானது.

ஆனால் இந்தியை வெறுப்பதற்கான காரணம்: திணிப்பு

  1. இந்தி தமிழை அழிக்க முயல்கிறது
  2. கீழடியை மூட முயன்றது
  3. தமிழரின் தொன்மைக்கு அங்கீகாரம் அளிக்க மறுக்கிறது
  4. தமிழர் நாட்டை பறிக்க 2 கோடி வடக்கர்களை இங்கே களமிறக்கி வாக்களிக்கும் உரிமையை வழங்க உள்ளது
  5. இங்கே வந்து பிழைக்கும் கொத்தனார் சித்தாள் கூட, முடி திருத்துபவன் கூட, பாணிபூரி விற்பவன் கூட தமிழை கற்று பேச மாட்டான், நாம் இந்தி கற்றுக்கொண்டு பேசணும்! இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.!

ஒரு தமிழனாய் ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? சித்தாந்த ஒற்றுமை என்ன?

நன்மை தீமையை ஆய்ந்து அறிய வேண்டும்...!

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். - குறள் 511

- எப்படி தெரியுமா நன்மையையும் தீமையையும் பிரித்து வரையறை செய்ய முடியும்? 

சுயஅறிவும் நூலறிவும் சேர்தல் வேண்டும்!

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. - குறள் 636

- தமிழில் வேதம் (முதல் நூல் எனப்படும் கடவுள் மனிதனுக்கு பணித்தது- நன்னூல்& தொல்காப்பியம் பொருள் அதிகாரம் மரபியல்.94) உண்டு அவை என்னவென்று உனக்கு தெரியுமா?

அந்த நூலைத்தான் ஆய்ந்து அறியவேண்டும்! அவைகளின் சிந்தாந்த தொகுப்பு பின்வருமாறு

தமிழர் மதம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறது (திருமந்திரம் 2104) : அதாவது சாதி, மதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு இல்லை, பல கடவுள்களும் இல்லை.

- ஒவ்வொரு மதத்திற்க்கும் ஓர் தெய்வம் இல்லை :

எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே? - சிவவாக்கியர் 222

- சிலைகளை இறைவனாக வணங்க கூடாது - சித்தர் சிவாவாக்கியர் பாடல்கள்

செங்கலும் கருங்கலும் "சிவந்தசாதி லிங்கமும்"
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ! 35

பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! 36

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

- மறு ஜென்மம் பூர்வ ஜென்மம் என ஏதும் கிடையாது !!

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47

- ஆனால் மறுமை உண்டு !!

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)

மறுமை என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

- சோதிடம் பைத்தியகாரத்தனம் !!

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில். - நாலடியார் 52

புனிதமாக கருதப்படும் தாலி தமிழர் மதம் இல்லை 

அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை'''

19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் இந்துமத ஆதிக்கம் அதிகமானபிறகு தொடங்கியதே!

- வரதட்சணை கூடாது !!

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே! - அகநானூறு பாடல் 90 - மருதன் இளநாகனார்

திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ’விலை’(சீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர்.

- வட்டி பெரும்பாவம் !!

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
(திருமந்திரம் - முதல் தந்திரம் - 20, அறஞ்செயான் திறம் - பாடல் எண் 1.)

மனிதனின் பிறப்பே இறைவனை வணங்கத்தான் 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - குறள் - 01:09.

- அவனை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா? 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - நாலடியார் 001

- இத்தனையும் அறிந்தபிறகு ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? இவை அனைத்தும் இஸ்லாத்தின் சித்தாந்தம். இந்து மதத்திற்கு எதிரான கொள்கைகள்.

இந்து மதத்தில் இருந்துகொண்டு
சிலையை வணங்காமல் இருக்க முடியுமா?
சாதி இல்லை என்று சொல்ல முடியுமா?
தாலி வேண்டாம் என்றோ?
வரதட்சணை வேண்டாம் என்றோ?
ஆண் தான் பெண்ணுக்கு விலை கொடுக்க வேண்டும் என்றோ?
வட்டி கூடாது என்றோ?
சோதிடம் பொய் என்றோ?
மறு ஜென்மம் இல்லை என்றோ கூறிவிட முடியுமா?

"முடியாது" ஏனென்றால் இவைகள் தான் இந்து மதத்தின் அடிப்படைகள். ஒரு தமிழன் இஸ்லாமியனாய் இருந்தால்தான் தமிழனாக இருக்க முடியும். இந்துவாக அல்ல.

- ஏற்றுக்கொள்ளும் சித்தாந்ததில் பிழைகள் இருக்க கூடாது, பின்பற்றுபவர்களில் இருக்கத்தான் செய்யும். இது அனைவர்க்கும் பொருந்தும், தமிழனாய் இஸ்லாமிய கொள்கைகளே ஏற்றுகொள்ள சிறந்தது இணக்கமானது. முஸ்லிம்களிடத்தில் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் இஸ்லாமிய கட்டமைப்பு ஒரு தானியங்கி சமூக சுத்திகரிப்பு இயந்திரம் போல, தன்னை தானே அவ்வப்போது சீர்திருத்திகொள்ளும்.

- அரபி மொழி பிரச்னை என்றால் இந்துமதம் சம்ஸ்கிருத மொழியை புனிதமாக சொல்கிறது தமிழை சூத்திர மொழி என்கிறது. ஆனால் முகமது நபி அவர்கள் எந்த ஒரு அரபியும் எந்த ஒரு அரபி அல்லாதவரை விட சிறந்தவர் கிடையாது, மொழியால் சிறப்பில்லை, குலத்தால் சிறப்பில்லை, நிறத்தால் சிறப்பில்லை என்பதொடு நற்குணமும் இறை அச்சமுமும் அதிகம் கொண்டவரே சிறந்தவர் என்ற அவரின் முற்போக்கு போதனைகளை வாசித்தால் உனக்கு ஒருவேளை அறிவு வளரலாம்.

- இத்தனை கற்ற பிறகும் இதை அப்படியே விட்டுவிடலாமா என்றால்? 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - 391

இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதத்தவர்களின் மதப்பற்று போல இந்துக்களிடம் 10 சதவீதம் கூட இல்லையே, ஏன்?

மதப்பற்று என்று கூறுவதை விட சமைய பற்று என்று இதை கூற விரும்புகிறேன். இந்த வேற்றுமைக்கான சில காரணங்களை இங்கே பட்டியலிட்டு சில கேள்விகளையும் கேட்கிறேன்.
  • இஸ்லாமும் கிறித்தவமும் புனிதர்களால் ஏற்படுத்தப் பட்டதென்றும் அவர்களின் பாரம்பரியமும் வரலாறும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கு தெரியும், ஆனால் இந்துமதம் ஆங்கிலேயர்களால் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்டது.
  • கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியும். இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரிந்தவர் எத்தனை பேர்?
  • இந்துக்களுக்கு சம்ஸ்கிருத வேதம் பற்றி அந்த மொழி பற்றி எந்த அறிவும் இல்லை. எனவே அரைகுறை சமஸ்கிருத்தைல் யாரேனும் பேசினால் ஆ-வென்று பார்த்து அவர் சொல்வதையே வேதவாக்காக எண்ணுகிறார்கள். மொழி அறிவின், தத்துவ அறிவின் ஆழம் அறியாததால் இந்த நிலை. "வேதம் ஓதி வீடு பெற்றார்" என்று தமிழர்களுக்கு சொல்கிறது திருமந்திர வேதம்.தமிழர் வேதத்தை ஓதும் சைவர் அல்லது தமிழர்கள் யார்?
  • இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் அவர்களுக்கு ஓர் பிரச்சனை என்றதும் அவர்கள் அவர்களது வேதத்தில் தீர்வை தேடுகிறார்கள், கிடைப்பதாக நம்புகிறார்கள். தம் வேதத்தை வாசிக்க கூட தெரியாத இந்துக்களோ, வேதம் என்ன என்ற அக்கறை கூட இல்லாத தமிழர்களோ அவர்களின் பிரச்னைக்கு வேதத்திலே தீர்வு தேடுவது சாத்தியமில்லை.
  • வேதம் கடவுளால் வழங்கப்பட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள், கடவுள் மீதுள்ள பற்றே அவர்களின் வேதத்தின் மீதும், அவர்களின் சமயத்தின் மீதும், அந்தந்த மக்களின் மீதும் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியாமல், தெரிந்தால் வாசிக்க முடியாமல், வாசிக்க முடிந்தால் பின்பற்றாமலும் பிறருக்கு சொல்லாமலும் வாழும் பொழுது சமய பற்றை எதிர்பார்ப்பது பொருத்தமில்லை.
  • இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ வேதத்தில் இந்துக்கள் கூட படித்து குறை சொல்லும் அளவுக்கு வேதங்கள் எல்லோரையும் அடையும் வண்ணம் பொதுமை படுத்தி உள்ளனர். ஆனால் இந்துக்கள் அல்லது தமிழர் வேதத்தில் ஒரு குறை சொன்னால், அது பொய்யான நூல் அல்லது பொய்யான விளக்க உரை என்று சொல்லி தப்பித்து கொள்ளும் அளவுக்கு எந்த நூல் சரி அல்லது பிழை, எந்த விளக்கம் சரி அல்லது பிழை என்று எல்லோரும் அறியும் படி அல்லது எல்லோரும் ஏற்கும் படி ஓன்று இல்லை!
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று நம்பும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் உலக வேதங்களில் உள்ள ஒற்றுமையை பட்டியலிடும் பொழுது பல்வேறு மதங்களை இனங்களை உள்வாங்கிய இந்துமதம் அவற்றுக்கு இடையேயான வேத ஒற்றுமைகளை பண்பாட்டு ஒற்றுமைகளை வெளிப்படுத்தவும் மற்ற வேதங்களையும் பண்பாடுகளையும் அங்கீகரிக்கவும் தயாராக இல்லாத நிலையே இந்து மதப்பற்று இல்லாமைக்கான காரணம்.
முதலில் இப்படி போட்டிக்கு சமைய பற்றை வளர்ப்பது பற்றல்ல. அதற்கு பொறாமை அல்லது ஈகோ என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

"கல்வி, கல்வி" என்று அனைத்து சமைய அறநூல்கள் கதறுவது வேத கல்வியையே..! ஒரு சிலருக்கு மருத்துவ கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு பொறியியல் கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு கணக்கியல் கல்வி கிடைக்கலாம் ஆனால் அனைவருக்கும் வீடுபேரு அடையும் வழிக்கான கல்வி அவசியம். அவரவர் வேத அறிவை பெறுவதில் முனைப்பு காட்டுவோம். நிச்சயமாக உண்மை வேத அறிவு மதங்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தவிடு பொடியாகும்.

கர்த்தர் இயேசுவின் தந்தையா?

மத்தேயு 23:8 ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். 9 உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். 10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து.

மேற்கண்ட வசனத்தின் படி தந்தை என்பவர் பூமியில் இல்லை பரலோகத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது ஏசுவுக்கு மட்டுமல்ல மாறாக அனைவர்க்கும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இயேசுவுக்கு மட்டும் என்று கூறி இருந்தால் தந்தை இல்லாமல் பிறந்த இயேசு இறைமகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது உலகில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் பொதுவான செய்தியாக சொல்லப்படுகிறது. இயேசுவை தவிர அனைவருக்கும் இவ்வுலகில் தந்தை உண்டு என்பது நிதர்சனம். 

எனவே இயேசு தந்தை என்று குறிப்பிடுவது படைத்த இறைவனை தானே தவிர தனது பயோலொஜிக்கல் தந்தையை அல்ல. எனவே இயேசு இறைமகன் அல்ல. 



[ஏனென்றால், இஸ்ரவேல் என் குமாரன், என் தலைமகன்' என்று கர்த்தர் சொல்லுகிறார்.  - [யாத்திராகமம் 4:22, தோரா]

[மேலும்,] 'நான் இஸ்ரவேலுக்குத் தகப்பன், எப்பிராயீம் என் தலைமகன்.' - 
[எரேமியா 31:9, தோரா]

[மேலும்,] நான் [சாலமோனை] என் மகனாகத் தேர்ந்தெடுத்தேன், நான் அவனுடைய தகப்பனாக இருப்பேன். - [1 நாளாகமம் 28:6, தோரா]

[மேலும்,] 'நான் [தாவீதை] முதற்பிள்ளையாக்குவேன்,'" - [சங்கீதம் 89:27, தோரா]

[மேலும் அவர்கள், "தேவதூதன்] பதிலளித்து, [எஸ்ராவிடம்], 'இது கடவுளின் மகன், அவர்கள் உலகில் ஒப்புக்கொண்டார்' என்று கூறினார் - 
[2 எஸ்ரா 2:47, தோரா]

எனவே தீர்க்க தரிசிகளை மகன் என்று அழைக்கும் வழக்கம் அம்மொழியில் இருந்து இருக்க வேண்டும் அல்லது இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக இருக்க வேண்டும். நாம் அறிந்தபடிக்கு பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியிலும் புதியஏற்பாடு அராமிக் மொழியிலும் வழங்கப்பட்டது. பிறகு அது கிரேக்கத்துக்கு, லத்தீனுக்கும் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதில் கருத்துப் பிழை ஏற்படுவது இயற்கையே. மேலும் மொழிபெயர்ப்புக்கு முன் உள்ள பதிப்பில் அரசியல் மற்றும் வேறு சில காரணங்களால் புகுத்தப்பட்ட செய்திகளை அடையாளம் காண்பது கடினமாகி விடுகிறது. எனவே எந்த வேதமும் அதன் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டு அம்மொழி வளக்கொளியாமல் இருந்தால் அதை நாம் பயன்படுத்தலாம். இல்லை என்றால் அந்த பழைய வேதம் வழிகாட்டும் புதிய வேதத்தை பின்பற்றுவதில் என்ன பிழை உள்ளது? எளிமையாக நாம்  விடயம் என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியாது. அப்படி முரண்பட்டால் அது விதிவிலக்கு என்று குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும். அல்லது அது இயேசுவுக்கு பிறகு மக்களால் புகுத்தப் பட்டு இருக்க வேண்டும்.

இப்படிபட்ட நிலைகளிலிருந்து உண்மையை பிரித்தறிய விரும்பினால் அதற்கும் இறைவன் விதியையும் வழியையும் வகுத்துள்ளான். தொல்காப்பிய முதல் நூல், வழி நூல் விதிகளும், திருமந்திரம் விளக்கும் நான்மறையும் அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். மட்டுமல்லாமல், பழைய ஏற்ப்பாட்டை முறையாக ஆராய்ந்தால் கடவுளுக்கு பிறந்த மகன் என்பது இல்லை என்பதற்கு ஆதாரமாக பல செய்திகளை பெறலாம். 

மொழி

மொழிகள் மனிதர்களால் வளர்ந்தவை எனில் மத நூல்கள் குறிப்பிடும் கடவுள்கள் எப்படி உண்மையாக இருக்க முடியும்? மனிதர்களின் கற்பனையாகத் தானே அவை இருக்க முடியும்?

மொழிகள் மனிதனால் வளந்தவைகள் என்பதற்கு என்ன சான்று? உலக சமயங்கள் இதற்கு மாற்றமாக கூறுகிறது.

கடவுள் தான் மொழியை கற்றுக் கொடுத்தார். மனிதர்கள் ஆரம்பத்தில் ஒரே மொழியை பேசினார்கள். வெள்ளப்பெருக்கு வரை ஒரே மொழியை பேசினர்.

கிறிஸ்தவம்

ஆதியகமம் 11:11 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.

ஆதியகமாம் 11:7 எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார். 8 அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. 9 உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.

விளக்கம்: கடவுள் பல மொழிகளை உருவாகியதை இங்கே குறிப்பிடுகிறார்.

இஸ்லாம்

2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.

2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)

(குர்ஆன் 30:22). மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

விளக்கம்: மொழிகள் வேறுபட்டு இருப்பது இறைவனால்.

தமிழர் சமயம்

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

ஆரம்ப காலத்தில் நூல் என்றாலே இறைவன் வழங்கியதுதான் என்று அருங்கலச்செப்பு கூறுகிறது.

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,

உரை படு நூல் தாம் இரு வகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

அதை முதல் மற்றும் வழி நூல் என்று பிரித்த தொல்காப்பிய நூல் இறைவன் வழங்கிய தமிழ் இலக்கண நூல் ஆகும்.

அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம் (தொல்.பொருள்.649.பேரா.)

மேலும் தமிழ் வளர்க்க தன்னை அனுப்பியதாக திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்.

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே (திருமந்திரம் 81)

முடிவுரை

மொழிகள் இறைவன் வழங்கியது மட்டுமே. பிற்கால மொழிகளான ஆங்கிலம், ஹிந்தி போன்றவைகள் இறைவன் வழங்கிய மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. அவற்றின் மூல கருப்பொருள்களான எழுத்துரு, இலக்கணம், சொற்கள் ஆகியவை வெவ்வேறு மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது கண்கூடு. இவ்வாறு பிரித்தும் சேர்த்தும் செய்யப்படும் மாற்றங்கள் மொழியில் மட்டுமல்ல, மாறாக அரசியல் தத்துவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதாரம் போன்ற பல தலைப்புகளில் நீண்டு செல்கிறது. எனவே உலக வேதங்கள் உள்ளடக்கிய நான்மறைகளை வாசிக்கமல் எல்லாவற்றையும் கற்பனையாக யூகமாக பேசுவதை நாம் குறைத்து கொண்டு இந்த நூல்களை கற்க வேண்டும். எனவே கடவுள் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்

முன்னுரை

இது சுய சரிதை அல்ல, 800 கோடிக்கும் மேல் சுய சரிதைகள் உள்ளது இன்று இப்பூவுலகில். மேலும் ஆதி மனிதன் முதல் என்று கணக்கிட தொடங்கினால் சுயசரிதைகளின் எண்ணிக்கையை எவராலும் எண்ணிமுடிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் சுயசரிதையில் எனக்கு உடன்பாடு இல்லை.
அதற்கான காரணங்களாவன 
  1. சுயசரிதை எழுதுவோரின் நேர்மையும், நியாபக திறனும், மொழி ஆற்றலும் அதில் எழுதப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும். ஆனால் அதற்கான தகவல்களை நாம் அவரின் சுயவரலாற்றிலிருந்து பெறமுடியாது.
  2. சான்றோரின் வரலாறுதான் மக்களையும், சமூகத்தையும் பண்படுத்தும். ஆனால் யார் சான்றோர்? அதற்க்கான வரைவிலக்கணத்தை எங்கே பெறுவது? தொல்காப்பியரும், வள்ளுவரும், திருமூலரும், ஆப்ரஹாமும், இயேசுவும், முகமதுவும், மேலும் நாம் அறிந்த எந்த சான்றோரும் சுய சரிதையை எழுதி இருக்கவில்லை. ஏன் என்று நாம் சிந்தித்ததுண்டா? அதற்கு அவசியமில்லை என்பதுதான் கரணமாகும்.
  3. வரலாறு என்பது சமகாலத்தில் வாழ்ந்த பல்வேறு மக்களால் கூறப்பட்டு, நேர்மையான அறிஞர்களால் எழுதப்பட்டு, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் படுவதாகும். எனவே எழுதுபவரின் நேர்மையையும் நியாபக சக்தியையும் உறுதி செய்ய முடியாத நிலையில், சுயசரிதையை கொண்டு ஒருவரை எடை போட முடியாது.
வாழ்க்கைக்கு சான்றாக எடுத்துக்கொள்ள பட வேண்டியவனின் தகுதி தரம் அறியாமல் பெண்பித்தன், தற்பெருமைக்காரன், பொய்யன், ஏமாற்றுக்காரன், நடிகன் என்று யார் யாரையோ நாம் குருவாக, தலைவனாக, சான்றோனாக எடுத்துக் கொள்கிறோம். பரிதாபமான நிலையல்லவா இது?


திறமையாக செய்தால் எதையும் வியக்கும் பண்பு நமது ஆன்மாவுக்கும் நமது சந்ததிக்கும் உகந்ததல்ல. எனவே சான்றோனை கண்டறிய, சான்றோரின் பண்பு எது? அந்த பண்பை வரையறுக்கும் அதிகாரம் படைத்தவன் யார்? போன்ற என்னைக் கவர்ந்த கருப்பொருளையும், எல்லோரும் அறிய வேண்டிய மெய்ப்பொருளை எங்கேனும் பதிந்து வைத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் எவருக்கேனும் பயன்படுமே என்கிற தீராத ஆவலைத் தவிர வேறேதும் இந்த ஆய்வை தொடங்கியதற்கான நோக்கமல்ல. இதன் மூலம் ஒருவரேனும் நான் விரும்பும் விதத்தில் பயன்பெற்றால் நான் என் பிறவிப் பயனை அடைந்ததாக கருதுவேன். 

மிகைப்படுத்தி எழுதுவதோ பேசுவதோ என் இயல்பு அல்ல. மனதுக்கு பிடித்தவர்களை கவர அவ்வாறு பேச முயன்ற பொழுதெல்லாம் அசௌகரிய மன நிலைக்குத்தான் தள்ளப்பட்டேனே தவிர வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது கிடையாது. இதை இங்கே ஒப்புக்கொள்ளும் காரணம் இந்தநூல் முழுவதும் வாசகர்களை வசீகரிக்கும் அமைப்பில் எழுதப்படாது, மாறாக இயல்பாக உள்ளது உள்ளபடியே எழுதப்படும். ஆனால் இதில் உள்ள பல உண்மைகள் நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிராத, ஆச்சரியமூட்டும், நீங்கள் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய, பயனுள்ள, ஒருவேளை உங்கள் வாழ்க்கையை மாற்றும் தகவல்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

இன்று நாம் நம்பும் அறிவியல், வணங்கும் கடவுள், வழிபடு அறம், பிசாசு, சொர்க நரகம், செய்து வரும் வணக்க முறைகள், அடக்கம் செய்யும் முறை, பாவ பரிகாரம், பார்க்கும் சோதிடம் மற்றும் குறி போன்றவைகளின் உண்மை நிலை குறித்தது நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? 

இந்த விடயங்களெல்லாம் பேரின்பம் தொடர்புடையது. இந்த பூலோகம் சிற்றின்பம் என்பதும், மேலுலகம் பேரின்பம் என்பதும் நாம் அனைவரும் அறிந்த தகவல். இதுவும் ஆதார நூல்களிலிருந்து வசித்து ஆய்ந்து தெளிவதற்கு மிக தகுதியான கருப்பொருள்.

ஆனால் இந்நூல் முழுக்க முழுக்க ஆன்மிகம் தொடர்பானது என்று எண்ணிவிட வேண்டாம், நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வி, இன்ப துன்பம், சரி பிழை போன்ற நமது அன்றாட தேடலுடன் தொடர்புடைய நூலக இது அமையும். என்னுடைய விளக்கங்களைவிட, சரியான நூலிலிருந்து  ஆதாரங்களையும் அதற்கான அறிஞர்களின் விளக்கங்களையும் குவிப்பதே இந்நூலின் நோக்கம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமந்திரத்தின் வாக்கை அது எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டுமோ அவ்வாறு ஆதாரங்களுடன் உலகுக்கு வெளிப்படுத்தும் இந்த முயற்சிக்கு இறைவன் உதவி புரிவானாக. 

- சக்திவேல்
(1-செப்-22)

மனிதர்கள் ஏன் மதங்களை உருவாக்கினார்கள்?

 கேள்வியில் உள்ள பிழை என்னவென்றால், மதங்களாவன மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்ற கருதுகோளை கொண்டதாக உள்ளது. இந்த முடிவுக்கு வரும் முன்னர் சில விடயங்களை நாம் உற்று நோக்க வேண்டி உள்ளது.

நாம் காண்பனவற்றில் பெரும்பாலான மதங்கள் ஒரே மதத்தின் இடம் பொருள் காலத்திற்க்கான வெவ்வேறு பதிப்புகள் ஆகும், அவை அனைத்தையும் படைத்த ஒரே கடவுளிடமிருந்து வந்தவை. ஆனால் அவற்றில் சமீபத்தியது பின்பற்றப்பட வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ள ஒரு அரசாங்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் சட்டம் என்பது சூழ்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். ஆனால் அவற்றில் சட்டத்தின் சமீபத்திய திருத்தம் பின்பற்றப்படும்.

உங்கள் வேதங்களைப் பாருங்கள், ஒரே புத்தகத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் பட்டியலைக் காணலாம்.

உதாரணமாக,

  • நீங்கள் இந்துவாக இருந்தால், RIG வேதத்தில் 356 ஆசிரியர்களைக் கொண்ட 10 புத்தகங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க கூடும். அவர்களில் சிலர் அகினி, வாயு, இந்திரன், வருணன். இன்னும் உங்களிடம் மற்ற மூன்று வேதங்களும் உள்ளன
  • நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், குர்ஆன் என்பது உலகெங்கிலும் உள்ள மற்ற அனைத்து வேதங்களின் தொடர்ச்சியாகும், குறிப்பாக யூத மதம் மற்றும் கிறிஸ்தவம்.
  • நீங்கள் தமிழராக இருந்தால், குறள், புற நானூறு, அகநானூறு, தொல்காப்பியம், திருமந்திரம், நல்வழி என்று பல்வேறு நூல்கள் உள்ளன. புறநானூற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதை 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள். நமக்கு பரிச்சயமானது திருக்குறள் மட்டும் தான், ஆனால் அவ்வையாரின் ஞானக்குறளும் காகபுசுண்டரின் குறளும் நாம் அறியவேண்டிய சில பதிப்புகள். 

எனவே ஒவ்வொரு வேதத்திற்கும் பலவேறு ஆசிரியர்கள் பல்வேறு காலத்திலிருந்து இடம்பெற்று உள்ளனர் அவர்கள் கொள்கையில்ஒருவருக்கு ஒருவர் முரண் பட்டவராகவும் இருந்திருக்க வில்லை என்பது அந்த நூல்களை வாசிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

இப்போது சொல்லுங்கள், ஒரே புத்தகம் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து ஏராளமான ஆசிரியர்களால் தொடர்ந்து எழுதப்படுவது என்பது எப்படி சாத்தியம்? அவர்களின் அடிப்படைக் தத்துவத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. எனவே அவர்களின் கூற்றுப்படி - சக்திவாய்ந்த, மரணமில்லா,மேலும் ஆழமான அகலமான அறிவுடன் வேறு ஒன்று உள்ளது அது அவர்களை இணைக்கிறது என்று நாம் முடிவு செய்யலாம். அது கடவுள் என்று கொள்ளலாம்.

சரி இருக்கட்டும், இந்த ஆதாரங்கள் ஒரு பாரம்பரிய தொடர்ச்சி அல்லது ஒரே ஒரு நூலை உறுதி படுத்தலாம் ஆனால் அனைத்தும் ஒரே இறைவனிடம் இருந்து வந்தவை என்பதை நிறுவவில்லையே என்று கருதுவதாக இருந்தால், இதற்கான பதிலை திருமந்திரம் தருகிறது.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
 
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
 
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம். 

திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம். 

இதை வலுப்படுத்த திருக்குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 14:4)

எனவே வெவ்வேறு வேத நூல்களில் உள்ள தொடர்ச்சி மட்டுமல்ல, அனைத்து வேத நூலும் ஒரே இறைவனிடம் இருந்துதான் என்று அறிய இன்னும் பல்வேறு சான்றுகள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் திறந்த மானதுடன் உண்மையை தேட நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. 

குறிப்பு: "வேதம் நான்கு" என்றுநான்கு வேத பாரம்பரியங்களை குறிப்பிடும் இது போன்ற வசனங்களை தன்வயப்படுத்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி "அதர்வண வேதம்" ஆகும். நான்கு வேதங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்று குறிப்பிடுவதற்காக ரிக், யஜுர் மற்றும் சாமத்துடன் அதர்வணம் என்கிற வேதமல்லாத நூலை வேதமாக குறிப்பிட துவங்கினர். எனவே நால்வேதம் இந்து மதத்துக்கு சொந்தமானதல்ல மாறாக உலகில் உள்ள இறைவனால் வழங்கப் பட்ட அனைத்து வேதங்களும் நான்கு பாரம்பரியங்களை கொண்டது என்று பொருள்.

முடிவுரை

இந்த சிக்கல்களெல்லாம் ஒரு சிறிய அடிப்படையை அறியாததால் தோன்றியது.

    1. ஒரு சமயத்தை யாரோ ஓர் மனிதன் நினைத்ததால் உருவாக்கிவிட முடியாது.
    2. ஒரு சமயம் ஒரு வேதத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும்.
    3. ஒரு வேதம் ஒரு முனைவனால் மக்களுக்கு தரப்படும். அந்த முனைவனை பற்றிய தீர்க்க தரிசனம் முன்னுள்ள மறை நூலில் சொல்லப்பட்டு இருக்கும்.
    4. அந்த முனைவனுக்கு அவ்வேதம் தேவரால் தரப்படும்.
    5. அந்த தேவருக்கு அவ்வேதம் அனைத்தையும் படைத்த தெய்வத்தால் தரப்படும்
    6. இதுதான் உண்மை சமயம், இதுவல்லாமல் உள்ள சமயங்கள் அனைத்தும் பொய் மதங்கள்.
    7. சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் தெய்வத்தால் தரப்பட்டது. ஆனால் இவைகளை இணைத்து புது மதம் உருவாக்க யாருக்கும் அனுமதி இல்லை.
    8. அப்படி செய்தால் அதை நியாயப் படுத்த சிவனையும் விஷ்ணுவும் மாமன் மச்சான் போல கதை எழுத வேண்டி வரும். எனவே அறியும் சிவனும் ஒன்னு என்ற சத்தியத்தை கூறும் பொழுது அதை புரியாத நிலையில் தான் மக்கள் இருப்பர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. அது சில தசாப்தங்களுக்கு மேல் நீடிக்காது. அவைகளை எளிதாக அடையாளம் காணலாம் ஏனென்றால் தங்களுக்குள்ளும் கடவுளின் புத்தகங்களுடனும் அடிப்படையிலேயே முரண்பாடுகளைக் கொண்டு இருக்கும்.

கடவுள் படைத்த இந்த பிரம்மாண்டமான வடிவமைப்பை (அறிவியலில் மட்டுமல்ல, சமயங்களிலும்) நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் அவரை மறுக்க ஒருக்காலமும் முடியாது.

பேசினால் நல்லதையே பேசு

கிறிஸ்தவம் 


நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும். - நீதிமொழிகள் 18:20

இஸ்லாம் 


யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், இல்லையானால் மெளனமாக இருக்கட்டும். ( புகாரி-6018 , முஸ்லிம்-74)

தமிழர் சமயம் 


ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் 
ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான். - முதுமொழிக் காஞ்சி தாண்டாப் பத்து 1.

ஓங்கல் - தான் உயர்வடைதலை
வேண்டுவோன் - விரும்புவோன்

பொருள்: உயர விரும்புபவன் உயர் சொற்களையே கொண்டே பேச வேண்டும்.

கடவுளுக்கு ஓய்வு தேவையா? *

 ஓய்வு என்றல் பொதுவாக கலைப்புக்குப்பின் ஏதும் செய்ய இயலாமல் கலைத்தது இருபப்தாக எடுத்து கொண்டால் கடவுளுக்கு ஓய்வு தேவை இலலை. இதை அவனே அவனது நான்மறைகளில் கூறுகிறான்.

இஸ்லாம்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (ஆயத்துல் குர்ஸி)

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

கிறிஸ்தவம்

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. - (ஏசாயா 40:28)

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

குறிப்பு: சில பைபிள் வசனங்களில் கர்த்தர் ஓய்வு எடுத்ததாக குறிப்பிட்டு உள்ளது. இங்கே "ஒய்ந்திருத்தல்" (REST) என்பதன் பொருள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் குறிக்கிறது. "களைத்திருத்தல்" (TIRED) என்ற பொருளில் குறிப்பிடவில்லை என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இது தவறான மொழி பெயர்ப்பின் விளைவு அல்லது திட்டமிட்ட யூதர்களின் சாதியாக இருக்கலாம்.

தமிழர் சமயம் *

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே. (முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் பாடல் எண் : 22)
 
பொழிப்புரை: யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்பு: விடாது தொடர்ந்து நிற்பதால் அவனுக்கு களைப்போ உறக்கமோ ஓய்வோ தேவை இல்லை. 

 

சோதிடமும் குறிசொல்லுதலும் ஆன்மிகம் அல்ல


நாதீகர்கள் நிச்சயம் ஜோதிடத்தை நம்புவதில்லை.. எனவே இது அவர்களுக்கான பதில்அல்ல, கடவுள் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை உள்ளவர்கள் இதில் குழப்பம் அடைகின்றனர்.

எந்த சமயத்தை பின்பற்றுபவர்கள் ஆனாலும் எதிர்காலத்தை ஒரு மனிதனால் அறிய அல்லது கணிக்க முடியுமா என்று அவரது சமய நூல்கள் என்ன சொல்கிறது என்று வாசிக்க வெண்டும்.

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது மிக எளிது, ஏனென்றால் எந்த நூலை ஆதாரமாக எடுப்பது என்பதில் குழப்பம் இல்லை. ஆனால் சைவர்களுக்கும் சமர்களுக்கும் வைணவர்களுக்கும் அல்லது இந்துக்கள் என்று கருதுபவர்களுக்கும் இதில் சிரமம் உண்டு. காரணம் ஆதார நூல்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமம், அதற்கான வரையறையை அறியாத நிலை..

இத்தனை குழப்பத்தை தவிர்க்க, தமிழர்கள் நூல்களை தேர்ந்தெடுத்துக் கொள்வோம்

தமிழர் மதம்

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில்.  - (நாலடியார் 52)

(பதவுரை)
தலை ஆயார்= பெரியோர்கள்,
நிலையாமை= (செல்வம், இளமை, சரீரம் இவை) நில்லாமை,
என்று= என்றும்,
நோய்= வியாதியும்,
மூப்பு= முதுமையும்,
சாக்காடு= மரணமும் இருக்கின்றன,
என்று= என்றும்,
எண்ணி= நினைத்து,
தம்= தமக்கு ஏவப்பட்ட,
கருமம்= நற்செயலை,
செய்வார்= செய்வார்கள்;
தொலைவு இல்லா= அதிக அளவில்லாத,
சத்தமும்= குறி கேட்டல்,
சோதிடமும்= சோதிடமும்,
என்று= என்று சொல்லிய,
இவை= இவைகளை,
பிதற்றும்= உளரும்,
பித்தரின்= பைத்தியம் பிடித்தவர்களைப் போல,
பேதையார்= அறிவீனர்,
இல்= இல்லை.

(கருத்துரைபெரியோர்கள், செல்வம்-இளமை- சரீரம் இவை நில்லா என்றும், பிணி-முதுமை-மரணம் இவை உண்டென்றும் கருதித் தவத்தைச் செய்வார்கள். குறி சொல்லுதலும், சோதிடமும் கற்று உளறும் பைத்தியகாரர்களை போல அறிவீனர்கள் இல்லை.

தன்ஒக்கும் தெய்வம் பிறிதுஇல்லை தான்தன்னைப்
பின்னை மனம்அறப் பெற்றானேல் - என்னை
எழுத்துஎண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருள்கண்ணே நிற்பது அறிவு. - (அறநெறிச்சாரம் பாடல் - 144)

(பதவுரை)
தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை - தனக்கு இணையான தெய்வம் வேறொன்றும் இல்லை;
தான் தன்னைப் பின்னை மனம் அறம் பெற்றானேல் - ஒருவன் தெய்வத்தையும் அறத்தையும் மனதில் பெற்றால்,
எழுத்து எண்ணே நோக்கி என்னை - எண்கள் மற்றும் எழுத்து முதலியவற்றை அடிப்படையாக கொண்ட சோதிடத்தை கற்பதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது,
இருமையும் கண்டு - இம்மையிலும் மறுமையிகும் இன்பம் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து,
அருட்கண்ணே நிற்பது அறிவு - அந்நூல்கள் வாயிலாக தெய்வத்தின் உதவியுடன் இருப்பதுதான் அறிவாகும்

நாளையும் கோளையும் நம்பாதே நமச்சிவாயனை நம்பு. - (திருஞானசம்பந்தர்)

இஸ்லாம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. (முஸ்லிம்: 4488)

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட இறைவனின்  சட்டத்தை அவன் நிராகரித்து விட்டான். (அஹ்மத் 9171)

“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)

கிறிஸ்தவம்


மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன். (லேவியராகமம் 20:6)
 
உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க கூடாது குறிசொல்லவோ மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ சூனியம் வைக்கவோ,வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம  அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார். - (உபாகமம் 18:10-13)

மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார். (லேவியராகமம் 20:27)

முடிவுரை 

ஜோதிடம் உண்மை, நல்ல தொழில், அது ஒரு கடல், அதை கற்க பொறுமை வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் கூறி இருப்பதை காண முடிகிறது. ஆனால் சோதிடம் தமிழர் பண்பாடு அல்ல, இது எனது கருத்து அல்ல, மாறாக தமிழர் அறம் கூறும் கருத்து. சோதிடத்துக்கு ஆதரவாக தமிழர் அற நூல்களில் எதேனும் ஆதரவு கருத்து உண்டா என்று தேடி பார்த்தால் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

எனவே சோதிடம் உண்மையல்ல, ஏனென்றால் அதை உளறல் என்கிறது நாலடியார்.

சோதிடம் நல்லதொழில் அல்ல, ஏனென்றால் உணமையல்லாத ஒன்றை மக்களிடம் கூறி பணம் பெறுவது அறமல்ல.

சோதிடம் ஒரு கடல் அல்ல - "தொலைவில்லா சத்தமும் சோதிடமும்" என்கிறது நாலடியார் அதாவது "ஒரு எல்லைக்கு மேல் எதுவுமே இல்லாத" என்று பொருள்.

சரிப்பா, அகத்தியர் சோதிட நூல் எழுதி இருக்காரே? வரலாற்றில் அகத்தியர் என்ற பெயரில் பல பேர் வெவ்வேறு இனத்தில் இருந்துள்ளனர், ஆரியர்கள் உட்பட என்று ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. 
 
இதுபோல போகர் உட்பட பல சித்தர்கள் பெயரில் சோதிட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தண்மை ஆராயப்பட வேண்டும்.  உண்மையான சித்தர்கள் இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ வழி சொல்லுவதில்லை. உலகம் நிலையில்லாதது என்று தான் போதனை செய்வர்.

சரிப்பா, நாடி சோதிடம் உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளதே, எப்படி? இதை தமிழுக்கு மொழி பெயர்த்தவர் சரபோஜி மன்னர் ஆவார். இது உண்மையில் ஆன்மீகமாக அல்லது அறிவியலாக இருந்தால் இன்றும் அது வளரவேண்டும், எழுதப்பட வேண்டும். இல்லையே, ஏன்?

அதுமட்டுமல்ல உலகின் பெரும்பாலான சமயங்கள் சமயங்களும் சோதிடத்துக்கு எதிராக உள்ளது. ஆனால் இஸ்லாம் அது எவ்வாறு இயங்குகிறது என்று ஜின் அத்தியாயம் விளக்குகிறது.

ஜின்கள் ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவர்களுக்குள் நிகழும் உரையாடல்களை ஒட்டு கேட்டு குறி சொல்பவர் காதில் கூறுபவையாக இருந்து வந்துள்ளது. நபிகள் இதற்கு எதிராக பிராத்தனை செய்த காரணத்தினால் இப்பொழுது ஒட்டு கேட்கும் ஜின்கள் கொல்லப் படுகிறது. எனவேதான் நாடிசோதிடத்தில் பல செய்திகள் உண்மையாக நடைபெறுகிறது. அதுவும் முழுமையாக நடைபெறாது, காரணம் மனித வாழ்கையின் நிகழ்வுகள் மூன்று கூறுகளை அடிப்படையாக கொண்டது. அவைகளாவன விதி, பிராத்தனை மற்றும் வினைப்பயன்.

எனவே இப்பொழுது பெரும்பாலான ஜின்கள் ஒட்டுகேட்கும் நிலையில் தேவர்கள் உலகம் இல்லை. நீங்கள் சில ஆயிரம் ஆண்டுகள் வாழும் தன்மை படைத்ததால் அவர்களுக்கு உள்ள ஒரே தகவல் மூலம் இறந்த காலம் மட்டும். வரலாறு திரும்பும் என்கிற நியதி அடிப்படையிலும் மனிதன் செய்த வினையின் பயன் அடிப்படையிலும் சில எதிர்கால நிகழ்வுகள் யூகித்து கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதால் சில நேரங்களில் உண்மையாகவும் பல நேரங்களில் பொய்யகவும் உள்ளது.

உணமையோ பொய்யோ இதை மனிதன் செய்வதை இறைவன் விரும்புவதில்லை. மேலே உள்ள பாடல்களையும் வசனங்களையும் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். நன்றி. 

வேத ஆய்வு நடைமுறை

பொய் வேதங்கள் மூன்று முறைகளில் தோன்றி இருக்க வாய்ப்பு உண்டு 
  • இறைவாக்கில்லாமல் மனிதர்கள் எழுதிய நூல்கள் 
  • இறைவாக்கில் சிலவற்றை சேர்த்தும் சிலவற்றை நீக்கியும் மனிதர்கள் திரிபு செய்த நூல்கள்
  • எழுதப்படாமல் மனனமாக தலைமுறை தலைமுறையாக சொல்வழி கடத்தப் பட்டு மறதியினால் மாற்றப்பட்ட நூல்கள்

யூதர்களின் பொய் வேதம் பற்றி குர்ஆன்


அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை (தாலமுத்) எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (குர்ஆன் 2:79)

 மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (குர்ஆன் 2:78)

தமிழ் மரபு


வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். - 640

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - 641

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் - 642
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. (தொல்காப்பியம 3:643)

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் பார்க்கிறது

இதன் சுருக்கமான கருத்தானது, ஒரு செயலை செய்து பெரும் அனுபவ அறிவு அல்லாமல், கிடைக்கப் பெரும் அறிவு கொண்டு அறிவில் முந்தியவனால் எழுதப்படும் நூல் முதல் நூலாகும். வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். அதாவது வழிநூலை எழுதும் முனைவன் பிற்காலத்தை சார்ந்தவனாகவும், அக்காலத்தில்புழக்கத்தில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்துவர். 

இந்த அடிப்படையை கருத்தில் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது மெய்யிலிருந்து பொய்யை பிரித்து எடுக்க இயலும். ஆனால் இதற்கு மொழிப் புலமையும், வரலாற்று புலமையும், தத்துவ புலமையும் மிக மிக  அவசியம். மேலும் திருமந்திரம் உட்பட பலநூல்கள் மேலும் நுணுக்கமாக இந்தவரையரையும் அது அவ்வாறு பிரயோகப்படுத்துள்ளது என்பதை விளக்கமாகவும் நமக்கு தகவல்களாக தருகிறது. அதை மறைநூலின் வரையறையில் தெளிவாக விளக்கியுள்ளோம். 
 

தமிழர் சமயம் கூறும் எழுதா கற்பு


பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்
சொல் உள்ளும்
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.  - (குறுந்தொகை 156 - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.)

குறுந்தொகை பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது  

பொய்யிலிருந்து மெய்யை பிரிப்பதற்கு ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு நடைமுறை உள்ளது. ஆனால் வேதத்திற்க்கான வரையறையை அறிந்து கொள்வதன் மூலம் பொய்யை வடிகட்டுவது மிக எளிது. வெவ்வேறு மரபுகள் என்னென்ன வழிமுறைகளை கையாளுகிறது என்று பார்ப்போம். பிறகு சரியான முறை எதுவென்று பார்ப்போம். 

கிறிஸ்தவ வேத ஆய்வு நடைமுறைகள்

அடிப்படை விதிகள்

    1. வசனம் வசனத்தை விளக்கும்.(அப்போஸ்தலர் 17:11, ஏசாயா 28:9-10, 2பேதுரு 1:20)
    2. ஒரு கோட்பாட்டை நிறுவிட குறைந்தது இரு சாட்சிகள் தேவை.(2கொரிந்தியர் 13:1, வெளி 11:3)
    3. பூரண வேத ஒத்திசைவு தேடு. கண்டடைவாய். (மத்தேயு 4:4, 2தீமோத்தேயு 3:16-17)
    4. எழுதப்பட்டதைத் தாண்டி செல்லாதே. (1கொரிந்தியர் 4:6, வெளி 22:18)

விரிவான விதிகள்

    • மூல வேதம் எபிரேயு (பழைய ஏற்பாடு) / கிரேக்க (புதிய ஏற்பாடு) மொழிகளில் உள்ளது. தமிழில் படிக்கும்பொழுது பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புப்பதிப்புகளை படித்துப் பார்க்கவும்: எந்த ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்புப் பதிப்பும் முற்றிலும் சரியானது என சொல்ல முடியாது. அதனால் எந்தவொரு வசனத்தையும் பலவகைப்பட்ட மொழிபெயர்ப்புப் பதிப்புகளில் படித்து ஒப்பிட்டுப் பார்த்து, எந்த மொழிபெயர்ப்பில் அவ்வசனம் வேதாகமத்தின் பிற வசனங்களுடன் ஒத்திசைவாக உள்ளதோ, அதன் மூலம் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
குறிப்பு: தமிழில் பல பொழிபெயர்ப்புப் பதிப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் அளவு நிறைய வகைகள் இல்லை. அதனால் ஆங்கிலம் தெரியுமெனில், இந்த மூன்று வகையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு வகைகளை கலந்து பார்ப்பது நல்லது:
        • செயல்பாட்டு சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NIV New International Version.
        • முறை சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NASB New American Standard Bible.
        • கட்டற்ற மொழிபெயர்ப்பு - உதாரணம்: The Message Bible.
    • முக்கியமான எபிரேய/கிரேக்க வேதாகம வார்த்தைகளை புரிந்து கொள்ளவும்: இடைவரி மொழிபெயர்ப்பு (interlinear) மற்றும் சொற்பிறப்பியல் (etymology) தெரிந்துகொள்ள வைன்'ஸ் (Vine's) மற்றும் ஸ்டராங்'ஸ் (Strong's) குறிப்புகள் பார்த்து, விளக்கவுரை செய்யவும்.
    • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஓர் வார்த்தையின் சரியான விளக்கத்தை வசனங்களே அருளும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    • முரண்பாடாகத் தென்படும் வசனங்களை சரிதீர்க்க வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) சரிபார்க்கவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
    • எந்த ஒரு கோட்பாட்டையும் ஒன்றிற்கு மேலான வசனங்களின் ஆதரவுடன் நிறுவவும். (அடிப்படை விதி #2 பார்க்கவும்).
    • வசனங்களை சூழல் பொருத்தம் (context) பார்த்து படிக்கவும். வசனத்தின் நுண்சூழலும் (micro context), பெருஞ்சூழலும் (macro context) கருத்தில் கொள்ளவும். 
    • எந்தவொரு விசயத்திலும், நேரடியாக விசயத்தை சொல்லும் (direct statements) வசனங்கள் பொருள் விளக்கவேண்டிய (interpretative) வசனங்களை விட முன்னுரிமை பெறும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).
    • வசனங்களில் உள்ள அடையாளங்களையோ, உவமைகளையோ, உருவகங்களையோ நிஜம் எனத் தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. மேலும், வேதத்தில் ஒரு பகுதியினை அடையாள பொருள் எனக் கருதினால், சீராக அப்பகுதியில் உள்ள அனைத்தையும் அடையாளமாக கருத வேண்டும். மாறாக, அப்பகுதியில் பாதி விசயங்களை அடையாளங்களாகவும், பாதி விசயங்களை நிஜங்களாகவும் கருதக்கூடாது.
    • வேத அடையாளங்கள், உவமைகள், மற்றும் உருவகங்களுக்கு சொந்தமாய் யோசித்து விளக்கம் சொல்லாமல், மற்ற வசனங்களைப் பயன்படுத்தி விளக்கவும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    • புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்க வேண்டும்.
    • எபிரேயர் 6:1-2 வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் கொள்ளவும்: "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசங்கள்... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரம்."
குறிப்பு: இந்த கிறிஸ்தவஆய்வு நடைமுறை பைபிளுக்குள்ளேயே ஆய்வுகளை மேற்கொள்ள பயன்படுகிறதே தவிர உலக வேதங்களோடு ஒப்பீட்டாய்வு செய்ய பயன்படாது.அதிலும் கூட இந்த வழிமுறை முற்றிலும் பிழையானது ஏனென்றால் அடிப்படையிலேயே சில பிழை உள்ளது.
    • இயேசு பேசிய மொழி அராமிக், கிரேக்கம் அல்ல. 
        1. வீட்டஸ் சைரா (பழைய சிரியாக்) , கிரேக்க மொழியிலிருந்து ஆரம்பகால கிளாசிக்கல் சிரியாக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதில் 4 சுவிசேஷங்களின் பெரும்பாலான-ஆனால் அனைத்துமே இல்லை— குரேடோனியன் சுவிசேஷங்கள் மற்றும் சைனாய்டிக் பாலிம்ப்செஸ்ட் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
        2. கோடெக்ஸ் கிளைமாசி ரெஸ்கிரிப்டஸ் , கோடெக்ஸ் சினைட்டிகஸ் ரெஸ்கிரிப்டஸ் மற்றும் பிற்கால சொற்பொழிவுக் குறியீடுகள் (வாடிகன் சர். 19 [A]; செயின்ட் கேத்தரின் மடாலயம் பி, சி, டி) போன்ற கையெழுத்துப் பிரதிகளில் கிறிஸ்தவ பாலஸ்தீனிய அராமிக் லெக்ஷனரி துண்டுகள் குறிப்பிடப்படுகின்றன.
        3. கிளாசிக்கல் சிரியாக் பெஷிட்டா , ஹீப்ருவின் (மற்றும் சில அராமிக், எ.கா. டேனியல் மற்றும் எஸ்ராவில்) பழைய ஏற்பாட்டின் அராமைக் [ மேற்கோள் தேவை ] ஒரு ரெண்டரிங், மேலும் புதிய ஏற்பாடு அதன் அசல் அராமிக் மொழியில், இன்னும் பெரும்பாலான சிரியாக் தேவாலயங்களில் தரமாக உள்ளது.
        4. தி ஹர்க்லீன் , கிரேக்க மொழியில் இருந்து கிளாசிக்கல் சிரியாக் மொழியில் ஹர்கெலின் தாமஸ் எழுதிய கடுமையான நேரடி மொழிபெயர்ப்பு
        5. அசிரியன் மாடர்ன் பதிப்பு , 1997 இல் வெளியிடப்பட்ட கிரேக்கத்திலிருந்து அசிரியன் நியோ-அராமிக் மொழிக்கு புதிய மொழிபெயர்ப்பு மற்றும் முக்கியமாக புராட்டஸ்டன்ட்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளது
        6. மற்றும் பல்வேறு பேச்சுவழக்குகளில் பல சிதறிய பதிப்புகள்
      • எனவே ஒரு மொழியில் உள்ள நூலை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் பொழுது மொழிபெயர்ப்பு விதிகள் பின்பற்றப் பட்டுள்ளதா என்பதை எந்த பதிப்போடு நாம் சரி காண்பது?. விதிகள் பின்பற்றப்படாத மொழிபெயர்ப்பில் கருத்துக் பிழைகள் நிச்சயம் நிகழும். ஆனால் மூலமே ஆறு வகை என்றால் எப்படி இதை நாம் கையாள்வது?
      • மூலமொழியில் உள்ள அத்தியாயங்களும் வசனங்களும் மொழிபெயர்ப்பு நூலில் உள்ளதா அல்லது சிலவைகள் நீக்கப் பட்டுள்ளதா என்றும் சரிக்கான முடியாது. 
      • மூலமொழியில் உள்ள செய்திகளோடு கூடுதலான வசனங்கள் அல்லது அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டுள்ளதா என்றும் சரிகாண முடியாது. ஏனென்றால் மூலமே இது போன்ற பிரச்சனைகளோடு உள்ளது.
      • உள்ளவைகளை ஆய்வு செய்தால் பெஷிட்டாவின் புதிய ஏற்பாட்டில் 22 புத்தகங்கள் உள்ளன, அவற்றில் யோவானின் இரண்டாவது நிருபம், யோவானின் மூன்றாவது நிருபம், பீட்டரின் இரண்டாவது நிருபம், யூதாவின் கடிதம் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகம் ஆகியவை இல்லை, அவை ஆன்டிலிகோமெனாவின் புத்தகங்கள். 'மேற்கத்திய ஐந்து' புத்தகங்கள் இணைக்கப்படுவதற்கு முன், கிழக்கு தேவாலயத்தின் புதிய ஏற்பாட்டின் நியதி மூடல் ஏற்பட்டது. அதன் நற்செய்தி உரையில் இயேசு மற்றும் விபச்சாரத்தில் எடுக்கப்பட்ட பெண் (யோவான் 7:53-8:11) மற்றும் லூக்கா 22:17-18 என அறியப்படும் வசனங்களும் இல்லை, ஆனால் 'மார்க்கின் நீண்ட முடிவு' உள்ளது. 
      • இயேசு காலத்தில் பைபிள் நிறைவு செய்யப் படாமல், வெவ்வேறு காலங்களில் அது மாற்றப் பட்டு கொண்டே வந்துள்ளது. ஆனால் அவ்வாறு மாற்றுவதற்க்கு அனுமதி இல்லை என்பதை பைபிளே கூறுகிறது. "எது உண்மையான பைபிள்?" எகின்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாம்

 அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (குர்ஆன் 4:82)

 மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (குர்ஆன் 16:44)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன். அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி) நூல்: அஹ்மத் 15478

 (நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கடுபட்டவன்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக்கூடாது? என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

    1. ஸஹீஹ் (ஆதாரபூர்வமானவை)
    2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
    3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
    4. ளயீப் (பலவீனமானது)
இவற்றில் ஸஹீஹ் மட்டுமே ஆதாரப்பூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,
நடைமுறைப்படுத்த வேண்டிய ஹதீஸ்களாகும்.

ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ (ஆதாரபூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில தகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, அறிவிப்பளரின் வரிசை. ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஹதீஸ்களை நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, நபிகள் நாயகம் தொடர்பான ஒரு செய்தியை ஒருவர் அறிவித்தால், தனக்கு அந்தச் செய்தியை கூறியது யார்? அவர் யாரிடம் கேட்டார்? அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார்? என்று சங்கிலித்தொடராக கூறிக்கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அதோடு,

    1. இந்த சங்கிலித்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
    2. அனைவரும் உறுதியான நினைவாற்றல் உடைவயர்களாக இருக்க வேண்டும்.
    3. அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    4. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்.
இந்தத்தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தால் மட்டுமே அதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஒப்புக்கொள்ளப்படும். அவ்வாறல்லாமல் அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே ஒரு சம்பவம் ஆதாரப்பூர்வமான ஹதீஸாக ஆக முடியாது. 
 

சனாதனம்


முடிவுரை

இதற்கு முன் கிறிஸ்தவமமும் திருக்குறளோடு ஒப்பிட்ட வரலாறும் அதன் மூலம் பிறந்த நூல்களும் இன்றுவரை உண்டு. இதனை ஏற்காத தமிழ் பற்றாளர்கள் சாடி பேசியும் எழுதியும் வருகிறார்கள்

அதேபோல இஸ்லாமியர்களும் உலக வேதங்களோடு தனது வேதத்தை ஒப்புநோக்கி பல நூல்கள் எழுதி வந்துள்ளனர். அவைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகாமல் இல்லை. 

மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து சமயங்களும்  ஒன்று மற்றொன்றோடு ஒப்பிடப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக, 

சில ஒப்பாய்வுகள்:
    1. இஸ்லாம் Vs சைவம்  
    2. குறளும் குர்ஆனும்
    3. சைவமும் குறளும்  
    4. எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர்
    5. இசுலாம் தமிழர் சமயம்
    6. கீதையும் குறளும் 
    7. பகவத்கீதையும் திருக்குர்ஆனும்
    8. திருக்குறள் & பைபிள் - கடவுள் வாழ்த்து
    9. கன்பூஷியஸின் சிந்தனைகளுக்கும் குறளும்
    10. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
    11. விஞ்ஞானத்தின் ஒளியில் திரு குர்ஆனும் பைபிளும்
    12. இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்
    13. குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?
    14. இஸ்லாமும் இந்துமதமும் 
    15. இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்
    16. இந்து வேதங்களில் இஸ்லாம்
    17. தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு
இதுபோல ஒன்றுக்கொன்று முரணாக அறியப்படும் சமயங்கள் சமய நூல்கள் அவ்வப்போது ஒப்பிடப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்பிட முடிந்த காரணம் இவை அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வந்தது என்பதாலேயே, இதற்க்கு வேறு ஒரு தர்க்க ரீதியான பதில் இருக்க முடியாது. எனவே வேதங்களுக்கான வரையறை அறிவதன் மூலமும் மற்றும் அவைகளில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை  கொண்டு ஒப்பு நோக்குவதன் மூலமும்  உலக வேதங்களில் உள்ள மெய்யையும் பொய்யையும் தனித்தனியாக தரம் பிரிக்கலாம். அதைத்தான் இந்த நூல் முழு முதற் பொருளாக கொண்டுள்ளது. அதோடு கடவுள் என்கிற கருப்பொருள்  நிலம் சார்ந்த, மொழி சார்ந்த அல்லது காலம் சார்ந்த ஒன்று அல்ல என்பதையம் நாம் உணரவேண்டும்.