மண்ணறை *

தமிழர் சமயம் 


உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம். (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் பாடல் 174.) 
 
உறக்கம்  உணர்வோடு உயிர்ப்பின்மை அற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம் 

பரம் - உயர்ந்த  

உறக்கம், உணர்வு, உயிர் கொடுக்கப்படாமை இவை இல்லாமல் போனால் பிறப்பு இன்றி உயர்ந்த வீட்டைப் பெறலாம். 

உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம். (ஞானக்குறள் , 11 பிறப்பறுத்தல் 176.)

உடம்பு இரண்டும் கெட்டாலும் உறுபயன் ஒன்று உண்டு
திடம் படும் ஈசன் திறம்.

உறுபயன் - உண்டான பயன் 
திடம் - உறுதி 
திறம் - ஆற்றல் 

உயிருள்ள உடம்பும், இறப்புக்கு பிறகுள்ள உயிரற்ற உடல் இரண்டும் கெட்டு அழிந்தாலும், செய்த வினையின் பயன் உண்டு, அவ்வினைப்பயன் நிலைபெறும் இறைவனின் ஆற்றலினால். 

தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு. (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 177) 
 
தன்னை அறிந்து செறிந்து அடங்கித் தான் அற்றால்
பின்னைப் பிறப்பு இல்லை வீடு.

தனது நிலையை அறிந்து நிறைவாக அறநூல்களுக்கு கட்டுப்பட்டால்  இறந்த பின் மண்ணறை வாழ்க்கை இல்லை, சுவர்க்கம் மட்டுமே.  
 
செறிந்து - நிறைந்து 
அற்றால் - மரணித்தால்

மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம். (ஞானக்குறள், 11 பிறப்பறுத்தல் 178) 
 
மருள் அன்றி மாசு அறுக்கின் மா தூ வெளியாய்
இருள் இன்றி நிற்கும் இடம். 
 
மருள் = மயக்கம் 
மாசு = குற்றம் 
மா = பெருமை பொருந்திய
தூ = தூய, பரிசுத்தமான 
வெளி  = மைதானம் 

மயக்கமன்றி குற்றங்களை அறுத்தால் பெரிய பரிசுத்தமான மைதானம் போல இருள் இல்லாத இடமாக மண்ணறை மாறும். 
 
(பிறப்பறுத்தல் எனபது மண்ணறை வாழ்க்கையில் துன்பப்படாமையை குறிக்கிறது) 
 

கிறிஸ்தவம் 

பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். - (தானியேல் 12:2)

இஸ்லாம் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். (முஸ்லிம் 5503)


இறைவனை எண்ணி அழுதல் - பக்தி


தமிழர் சமயம் 


அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. (ஞானக்குறள் 93)

சிவன் மீதுள்ள அன்பால் அழுதல், கூச்சலிடுதல், தன்னை ஆளும் பெருமானை தன் எரும்பெல்லாம் உருகும்படி நினைத்தல் ஆகியவை பத்தி.

இஸ்லாம்

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத மனிதன் நரகத்தில் நுழைய மாட்டான் கறந்த பால் மடியில் மீண்டும் செல்லும் வரை. (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1633, தரம் : ஸஹீஹ் (அல்பானி))

ஏழு மனிதர்களுக்கு அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நாளை மறுமையில் அர்ஷின் நிழலை கொடுக்கின்றான். அதிலே ஒருவர்; தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடிக்கும் மனிதன். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.)

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; இரண்டு கண்கள், நரக நெருப்பு அவற்றை தீண்டாது. ஒன்று அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத கண்கள், இரண்டாவது அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வுடைய அடியார்களை பாதுகாத்துக்கொண்டிருந்த கண்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1639, தரம் : ஸஹீஹ் அல்பானி)

 கிறிஸ்தவம் 


என் வருத்தத்தை நீர் அறிகிறீர். என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர். என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர். (சங்கீதம் 56:8)

அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள் (1சாமு. 1:10)

மண்ணால் படைக்கப்பட்ட மனிதன்

தமிழர் சமயம்


மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு. 7 
 
பொருள்: மால், அயன், அங்கி, இரவி, மதி, உமை, ஏல் என்பன ஆறு சக்திகள்.

தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு. 8

பொருள்: தொக்கு என்னும் தோல், உதிரம் என்னும் இரத்தம், ஊன் என்னும் உடம்புக்கறி, மூளை, நிணம் என்னும் கொழுப்பு, எலும்பு, பாலுணர்வு ஊற்றாகிய சுக்கிலம் என்பன ஏழு தாதுக்கள்.

மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. 9- 

பொருள்: மண் நீர் தீ மதி காற்று இரவி விண் மூர்த்தி என்பன எட்டு எச்சங்கள்

இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. 10- 

பொருள்: இவையெல்லாம் ஒன்றுகூடி உடம்பாக உருவாகி விந்தைக் கொண்டுள்ளது.

இஸ்லாம் 


இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (அல் குர்ஆன் 30: 20)

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன்  21:30)

கிறிஸ்தவம் 


கர்த்தராகிய ஆண்டவர் பூமியின் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கினார். அவர் தனது நாசியில் ஜீவ மூச்சை ஊதினார், மேலும் மனிதன் ஒரு உயிரினமானான். (ஆதியாகமம் 2.7)

கூடா நட்பு

தமிழர் சமயம் 


தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. - (மூதுரை)

பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்  கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே.

இஸ்லாம் 


குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (குர்ஆன் 74 : 45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும். 
 

கிறிஸ்தவம் 

ஏமாந்துவிடாதீர்கள்: "கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கத்தை அழிக்கிறது." - ( 1 கொரிந்தியர் 15:33 )

கோபம் கொண்ட மனிதனுடன் நட்பு கொள்ளாதே, கோபம் கொண்டவனுடன் செல்லாதே, அவனுடைய வழிகளைக் கற்று, கண்ணியில் சிக்கிக் கொள்ளாதே. ( நீதிமொழிகள் 22:24-25 )

ஞானிகளுடன் நடப்பவன் ஞானியாவான், ஆனால் மூடர்களின் தோழனோ கேடு அடைவான். (நீதிமொழிகள் 13:20 )

ஒரு முட்டாள் இருப்பை விட்டு விடுங்கள், ஏனென்றால் நீங்கள் அறிவின் வார்த்தைகளை சந்திக்கவில்லை. (நீதிமொழிகள் 14:7 )

விரயம் - வரவு எட்டணா செலவு பத்தனா

தமிழர் சமயம் 


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு நல்வழி வெண்பா : 25

விளக்கம் ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும், போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது 

இஸ்லாம் 

“இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (அல்அன்ஆம்: 141)

“மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.” (அல்அஃராஃப்: 31)

“(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.” (பனீ இஸ்ராயீல்: 26, 27)


கிறிஸ்தவம் 

 சில நாட்கள் கழித்து, அந்த இளைய மகன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான். அங்கே அவன் மோசமான வாழ்க்கை* வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான்.  லூக்கா 15:13