மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?

பொதுப்படையான கேள்விக்கு பொதுப்படையாக பதில் சுருக்கமாக தருவதென்றால்,

சமயம் சார்ந்த கருத்துக்கள் பொதுவாக உலக நன்மைக்கே வித்திடும். முரண்பாடாகதெரியும் இந்த கருத்து அதை ஆழ்ந்து கற்காததன் விளைவு. மொழி, இட, கால பாகுபாடு அன்றி ஒரே தத்துவத்தை தாங்கி நிற்பதன் மூலம் அதன் நம்பகத்தன்மை உறுதி ஆகிறது. சமயங்கள் ஓவ்வொன்றுக்கும் முரண்கள் பல இருப்பதாக போதிக்கப்படும் நாம், ஒற்றுமைகளை பட்டியலிட்டால், சமயங்களுக்கு இடையேயான வேற்றுமை என்பது மக்களை பிளவு படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று என்னும் அளவுக்கு மிகப் பெரியது. இந்த வளையொலி முழுவதும் ஒற்றுமைகளை பட்டியலிடும் வேலையை தான் செய்கிறது.

அப்படி அனைத்து மதங்களிலும் பொது விடயங்களாவன,

  1. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  2. நிலையில்லா உலகுக்கு மட்டுமே உழைக்காமல் நிலையான வீடு பேரு பெறவும் உழை
  3. குலத்தால், மொழியால், நிறத்தால் சிறப்பில்லை, அவரவர் செய்யும் செயலால்தான் சிறப்பு
  4. அவரவர் செய்த வினைப்பயனும் உண்டு, இறைவன் எழுதிய விதிப்பயனுமுண்டு
  5. பொறாமை, பெருமை, கோபம், நயவஞ்சகம் கொள்ளாதே
  6. கொலை, திருட்டு, கொள்ளை, ஏமாற்று செய்யாதே
  7. அன்பு, கருணை, தருமம், உதவி செய்
  8. பிறன் மனை நோக்காதே, விபச்சாரம் செய்யாதே
  9. வட்டி வாங்காதே, கொடுக்காதே
  10. எடையில் குறைக்காதே
  11. நன்மை தீமையின் அளவு பொறுத்து சொர்கம் நரகம் உண்டு
  12. இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை

இவைகளை ஏற்று பின்பற்றும் ஒருவனால் தனக்கும் தன சமூகத்துக்கும் நன்மையை தவிர வேறு ஏற்படுத்த முடியாது.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமை என்பது சற்று சிக்கலான ஆனால் எல்லோரும் கற்று அறிய வேண்டிய பகுதி ஆகும்.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமையாக சொல்லப்படுவது 

  1. சில கருத்துக்கள் அறிவியலுக்கு எதிராக பேசுகிறது
  2. கடும் போக்கு வாதத்தை போதிக்கிறது
  3. சமயங்களுக்கு இடையேயான இணக்கங்களை உடைக்கிறது
  4. மக்களின் மனித தன்மையை இழக்க செய்கிறது

ஆனால் இந்த தீமைகள் எல்லாம் எதன் மூலம் ஏற்படுகிறதென்றால்,

  1. ஒரே இறைவன் தான் அனைத்து மொழிகளுக்கும் அவனது பிரதிநிதிகளை (சித்தர்/ரிஷி/நபி/தீர்க்கதரிசி/குரு) அனுப்பி மக்களை வழி நடத்துகிறான் என்பதை மறுப்பதன் மூலம் பல இறைவனை கற்பனை செய்கிறான், பல இறைவன் கோட்பாடு மக்களை பிளவுபடுத்தவும் யுத்தங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.
  2. இறைவன் தேவ தூதர்கள் (நந்தி/ஜிபிரியேல்/கேப்ரியேல்) வாயிலாக அவனது பிரதிநிதிகளுக்கு கட்டளைகளை அனுப்புகிறான் என்பதை மறுப்பதன் மூலம் இறைவனின் grand design-ஐ புரிய  மறுக்கிறான், அது அவனை அறியாமையில் ஆழ்த்தும், அறியாமை அழிவின் வாசல் ஆகும்.
  3. அந்த பிரதிநிதிகளை பற்றிய முன்னறிவிப்புமுன் சென்ற வேத ஆகம நூல்களில் கொடுக்கப்படாமல் அவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவதில்லை என்பதை அறியாமையினால், வசீகரமாக பேசும் எவரையும் குரு என்று நம்பி தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகி ஏமாற்றம் அடையும் பொழுது இறைவனை மறுக்கும் சூழலுக்கு செல்கிறான். போலி மருத்துவரால் மருத்துவத்தை விடாத மனிதன், போலி குருவால் ஆன்மீகத்தை விடுகிறான்.
  4. இறைவன் தந்த வேத நூலின் மூலமே மக்களாகிய நாம் வழிநடத்தப் படவேண்டும் என்பதை அறியாமல், அவனுடைய வேதம் என்ன என்று கூட அறியாமல் அறமும் வழிகாட்டுதலும் இல்லாமல் மனிதன் அநியாயங்களை செய்ய துவங்குகிறான்.
  5. உண்மையை, சத்தியத்தை, ஹக்கை அறியாமல் பொய் தெய்வங்களை, பொய் குருக்களை, பொய் வேதங்களை ஏற்று பாவங்களை விதைத்து நரகத்தை அறுவடை செய்யும் துர்பாக்கிய சாலிகளாக மனிதன் மாறிப்போய் நிற்கிறான்.
  6. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்படி அதற்கே உரிய விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறதோ அதேபோல இறைவனை அறியவும், உண்மையான வேதத்தை அறியவும், வேதங்களில் கலக்கப்பட்ட பொய்களை களையவும், வேதங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை திரிபுகளையும் அடையாளம் காணவும் விதிகள் உள்ளன என்பதை அறியாத நிலையில் மனிதன் உள்ளான்.

சமயம் என்பது அறிவியலை போன்று, ஆற்றல் போன்று, வாகனத்தை போன்று - முறையாக கற்று கையாளப்பட வேண்டிய ஒன்று. அறிவியலை புறந்தள்ள முடிவு செய்வது அறிவீனம், அப்படியேதான் சமயமும்.

https://ta.quora.com/மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?


கடவுள் நாம் செய்யும் தவறுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா?

 ஆம்.

தவறுகளை மட்டுமல்ல நற்செயல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவரவர் செயலுக்கான கூலி அவருக்கு தவறாமல் வழங்கப்படும் என்று அனைத்து வேதங்களும் கூறுவதின் சாரம் நம் செயல்கள் கண்காணிக்கப் படுகிறது என்பதாம். சொர்கம் நரகம் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல வழங்கப் பிஸ்ட்டும் என்பதும் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் கணக்கெடுக்கப் படுகிறது எனபதற்கான சான்று.

தமிழர் நெறி

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே. (7ம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம் - பாடல் 1)

பொழிப்புரை: அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர். 

இஸ்லாமிய நெறி

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். - (அன்-ஆனாம் 6:103)

கிறிஸ்தவ நெறி

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். - (யோபு 34:21)

முடிவுரை

எல்லாமும் கணக்கெடுக்கப் பட்டு அவைகளுக்கான கூலி சிலவற்றுக்கு இம்மையிலும் சிலவற்றுக்கு மறுமையிலும் வழங்கப்படும். வாசிக்க 

இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதத்தவர்களின் மதப்பற்று போல இந்துக்களிடம் 10 சதவீதம் கூட இல்லையே, ஏன்?

மதப்பற்று என்று கூறுவதை விட சமைய பற்று என்று இதை கூற விரும்புகிறேன். இந்த வேற்றுமைக்கான சில காரணங்களை இங்கே பட்டியலிட்டு சில கேள்விகளையும் கேட்கிறேன்.
  • இஸ்லாமும் கிறித்தவமும் புனிதர்களால் ஏற்படுத்தப் பட்டதென்றும் அவர்களின் பாரம்பரியமும் வரலாறும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கு தெரியும், ஆனால் இந்துமதம் ஆங்கிலேயர்களால் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்டது.
  • கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியும். இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரிந்தவர் எத்தனை பேர்?
  • இந்துக்களுக்கு சம்ஸ்கிருத வேதம் பற்றி அந்த மொழி பற்றி எந்த அறிவும் இல்லை. எனவே அரைகுறை சமஸ்கிருத்தைல் யாரேனும் பேசினால் ஆ-வென்று பார்த்து அவர் சொல்வதையே வேதவாக்காக எண்ணுகிறார்கள். மொழி அறிவின், தத்துவ அறிவின் ஆழம் அறியாததால் இந்த நிலை. "வேதம் ஓதி வீடு பெற்றார்" என்று தமிழர்களுக்கு சொல்கிறது திருமந்திர வேதம்.தமிழர் வேதத்தை ஓதும் சைவர் அல்லது தமிழர்கள் யார்?
  • இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் அவர்களுக்கு ஓர் பிரச்சனை என்றதும் அவர்கள் அவர்களது வேதத்தில் தீர்வை தேடுகிறார்கள், கிடைப்பதாக நம்புகிறார்கள். தம் வேதத்தை வாசிக்க கூட தெரியாத இந்துக்களோ, வேதம் என்ன என்ற அக்கறை கூட இல்லாத தமிழர்களோ அவர்களின் பிரச்னைக்கு வேதத்திலே தீர்வு தேடுவது சாத்தியமில்லை.
  • வேதம் கடவுளால் வழங்கப்பட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள், கடவுள் மீதுள்ள பற்றே அவர்களின் வேதத்தின் மீதும், அவர்களின் சமயத்தின் மீதும், அந்தந்த மக்களின் மீதும் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் அவரவர் வேதம் என்னவென்று தெரியாமல், தெரிந்தால் வாசிக்க முடியாமல், வாசிக்க முடிந்தால் பின்பற்றாமலும் பிறருக்கு சொல்லாமலும் வாழும் பொழுது சமய பற்றை எதிர்பார்ப்பது பொருத்தமில்லை.
  • இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ வேதத்தில் இந்துக்கள் கூட படித்து குறை சொல்லும் அளவுக்கு வேதங்கள் எல்லோரையும் அடையும் வண்ணம் பொதுமை படுத்தி உள்ளனர். ஆனால் இந்துக்கள் அல்லது தமிழர் வேதத்தில் ஒரு குறை சொன்னால், அது பொய்யான நூல் அல்லது பொய்யான விளக்க உரை என்று சொல்லி தப்பித்து கொள்ளும் அளவுக்கு எந்த நூல் சரி அல்லது பிழை, எந்த விளக்கம் சரி அல்லது பிழை என்று எல்லோரும் அறியும் படி அல்லது எல்லோரும் ஏற்கும் படி ஓன்று இல்லை!
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று நம்பும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் உலக வேதங்களில் உள்ள ஒற்றுமையை பட்டியலிடும் பொழுது பல்வேறு மதங்களை இனங்களை உள்வாங்கிய இந்துமதம் அவற்றுக்கு இடையேயான வேத ஒற்றுமைகளை பண்பாட்டு ஒற்றுமைகளை வெளிப்படுத்தவும் மற்ற வேதங்களையும் பண்பாடுகளையும் அங்கீகரிக்கவும் தயாராக இல்லாத நிலையே இந்து மதப்பற்று இல்லாமைக்கான காரணம்.
முதலில் இப்படி போட்டிக்கு சமைய பற்றை வளர்ப்பது பற்றல்ல. அதற்கு பொறாமை அல்லது ஈகோ என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

"கல்வி, கல்வி" என்று அனைத்து சமைய அறநூல்கள் கதறுவது வேத கல்வியையே..! ஒரு சிலருக்கு மருத்துவ கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு பொறியியல் கல்வி கிடைக்கலாம் ஒருவருக்கு கணக்கியல் கல்வி கிடைக்கலாம் ஆனால் அனைவருக்கும் வீடுபேரு அடையும் வழிக்கான கல்வி அவசியம். அவரவர் வேத அறிவை பெறுவதில் முனைப்பு காட்டுவோம். நிச்சயமாக உண்மை வேத அறிவு மதங்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தவிடு பொடியாகும்.

பிறப்பெனும் பேதமை

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
 (மெய்யுணர்தல் குறள் எண்:358)

பதவுரை: பிறப்பு-பிறப்பு; என்னும்-என்று சொல்லப்படுவது (பற்றிய); பேதைமை-அறியாமை; நீங்க-கெட; சிறப்பு-சிறப்பு; என்னும்-என்கின்ற; செம்பொருள்-செவ்வியதான மெய்ப்பொருள், கடவுள்; காண்பது-காணுதல்; அறிவு-அறிவு.

மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.

பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை (அதிகாரம்:துறவு குறள் எண்:345)

பதவுரை: மற்றும்-வேறுபிற, மற்றைய, பின்னும், மேலும்; தொடர்ப்பாடு-தொடர்பு; எவன்-என்ன பயன் கருதி? கொல்-(அசைநிலை); பிறப்பு-உயிர்வாழ்க்கை, பிறவி (த்துன்பம்); அறுக்கல்-அறுத்தல், நீக்குதல்; உற்றார்க்கு-மேற்கொண்டவர்க்கு; உடம்பும்-உடம்பும்; மிகை-அளவின் மீறுதல்.

மணக்குடவர் உரை: பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?

____________________________

உங்கள் இறைவன் ஆதமுடைய குழந்தைகளிடமிருந்து - அவர்களின் இடுப்பில் இருந்து - அவர்களின் சந்ததியினரை எடுத்துக் கொண்டு, "நான் உங்கள் இறைவன் அல்லவா?" என்று அவர்களையே சாட்சியமளிக்கச் செய்ததைக் குறிப்பிடவும். அதற்கு அவர்கள், ஆம், நாங்கள் சாட்சியம் அளித்துள்ளோம் என்றார்கள். [இது] - மறுமை நாளில், "நிச்சயமாக நாங்கள் இதை அறியாமல் இருந்தோம்" என்று நீங்கள் கூறக்கூடாது என்பதற்காக. (7:172)

89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.






சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் (அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:98)

பதவுரை: சிறுமையுள்-இழிவினின்று, இழிதகைமையினின்று, சிறுதன்மையுள், அற்பத்தனத்தினின்று; நீங்கிய-தவிர்த்த; இன்சொல்-இனியமொழி கூறுதல்; மறுமையும்-மறுபிறப்பும்; இம்மையும்-இப்பிறப்பும்; இன்பம்-மகிழ்ச்சி; தரும்-அளிக்கும்.

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

குறிப்பு:

பிறவி இருவகை: இம்மை, மறுமை 

  • மறுமைஎழுமைஎழுபிறப்பு எனபவைகள் மறு வாழ்வை குறிக்கும்
  • இம்மைபிறவி, உலகு, வையம் என்பவைகள் பூவுலகை குறிக்கும்.  
  • ஒருமை என்பது தனிமையை குறிக்கும், ஒரு பிறவி என்று பொழிப்புரையில் தவறாக கொடுக்கப் பட்டுளள்து 
மறுமை என்கிற பதிவில் இது விளக்கப் பட்டுள்ளது 
மறுமையில் வாழ்வு இருவகை: மேலுலகம், கீழுலகம் 
  • வான், சொர்கம், வீடுபேறு என்பவைகள் மறுமையில் உள்ள மேலுலக வாழ்வை குறிக்கும்
  • நரகம்அளறுநெருப்பு ஆகையவைகள் மறுமையில் உள்ள கீழுக வாழ்வை குறிக்கும் 

குறளில் சொர்க்க நரகங்கள் தனித்தனியே சில இடங்களில் கையாளப் பட்டுள்ளது..! 

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (ஈகை:222)

பதவுரை: 

நல்-நல்ல;
ஆறு-நெறி;
எனினும்-என்றாலும்;
கொளல்-ஏற்றல்;
தீது-கொடிது;
மேல்உலகம்-உயர்வாகிய உலகம்;
இல்லெனினும்-இல்லை என்றாலும்;
ஈதலே-கொடுத்தலே;
நன்று-நன்மையுடையது.

பொருள்: மேலுகம் (சுவர்க்கம்) கிடைப்பதில்லை என்றாலும் ஈகையே சிறந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை:
ஒருமை-ஒருபிறப்பு; 
செயல்-செய்தல்;
ஆற்றும்-செய்து கொள்ளும்;
பேதை-பேதை;
எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்;
தான்-தான்;
புக்கு-புகுந்து;
அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய;
அளறு-நரகம், நிரயம்

பொருள்: பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்குசான்று இந்த குரல். எழுமையில் அளறு: அதாவது மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம் என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எரிகிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் இந்த குறள் கூறும் விளக்கத்துக்கு எதிரானவர்கள்.  

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (வரைவில்மகளிர்  919)

பதவுரை: வரைவிலா - வரம்பின்றி; மாண் - சிறந்த, மாட்சிமையுடைய; இழையார் - அணி அணிந்தவர்; மென் - மென்மையான; தோள் - தோள்; புரையிலா - உயர்வு இல்லா; பூரியர்கள் - கீழ்மக்கள்; ஆழும்-புக்கு அழுந்தும்; அளறு - நரகம், நிரயம், சேறு.

மணக்குடவர் உரை: முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.

சான்றுகள்:
________________________________________