அனைத்தையும் படைத்த இறைவனை தொழ முதல் மனிதனால் கட்டப்பட்ட இறை இல்லம் காஅபா. அதில் சிவலிங்கம் எல்லாம் கிடையாது. யார் பரப்பிய புரளி என்று தெரியவில்லை.
நடுவில் இருக்கும் கப்போர்ட்-ஐ சிவலிங்கம் என்று கிளப்பிவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை.
இஸ்லாமியர்களின் காஅபா-வை ஆராய்ச்சி செய்யும் முன் சிவ ஆகமத்தை ஆராய்ச்சி செய்யக்கூடாதா?
சிவ ஆகமப்படி
சிவன் லிங்கத்தில், கோவிலில், செம்பில், தாரவில், சிலையில் என எதிலும் இல்லை.
சிவன் உம்பரில் (சுவர்க்கத்தில்) உள்ளான்.
சிவனை கண்டவரும் இல்லை
சிவன் ஆணுமல்ல பென்னுமல்ல அலியுமல்ல
சிவன் உரையற்றவன் (யாரும் வரையறுத்தது கூற முடியாதவன்)
இவ்வாறு சிவ ஆகம நூல்கள் வரையறுக்கும் எந்த ஒன்றும் இன்று நீங்கள் சிவனாக நீங்கள் கூறும் பாத்திரத்தோடு ஒத்துப் போகாது. அப்படி என்றால் நீங்கள் சிவனையே வழிபடவில்லை. இதுவெல்லாம் அறியாமல் இருப்பதன் காரணம், உங்க வேதத்தை படிக்காமல், குறை கூறுவதற்காக பிறரின் வேதத்தை வாசிப்பதுதான் காரணம்.
லிங்கம் என்றால் குறியீடு என்று பொருள். "சீவன் சிவலிங்கம்" என்கிறது திருமந்திரம். அதாவது மனித உயிர்தான் சிவனின் குறியீடு என்கிறது. அந்த உயிர்தான் சிவனின் பெயரால் ராமனின் பெயரால் பசுவின் எடுக்கப் படுகிறது. விந்தை.
தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)
பொருள்: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார்
பொருள்: இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்! தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயை விட வெம்மை உடையவன்; (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையை விட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயை விட அருள் செய்பவன். சிவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.
இஸ்லாம்
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான். [ஸூரது மர்யம் 96]
அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான். (அல்குர்ஆன்: 3:76)
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 2:195)
பொய்யையே! அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 5:42)
அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 3:146)
அல்லாஹ் கூறுகிறான் "என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத் 21114)
இறைவனின் அன்பு கிடைத்துவிட்டால்?
அல்லாஹ் கூறினான்: எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.»(ஆதாரம் ஹதீஸுல் குத்ஸி புகாரி). {அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.}. [ஸூரதுல் மாஇதா 54]
அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரயீல் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் நீங்களும் அவரை நேசியுங்கள் என்று சொல்லுகிறான் எனவே விரைவில் அவர் நேசிக்கிறார் பின்பு வானத்திலே மற்ற மலக்குமார்களை அழைத்து இறைவன் இந்த மனிதரை நேசிக்கிறான் எனவே நீங்கள் நேசியுங்கள் என்று கூறுகிறார் வானத்தில் உள்ளவர்கள் அவரை நேசிக்கிறார்கள் பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது அல்லாஹ் ஒரு அடியானை கோபம் கொண்டால் விரைவில் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை கோபம் கொண்டு விட்டேன் நீங்களும் அவர் மீது கோபம் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்முடைய கோபம் கொள்கிறார்கள் என்பவரை அழைத்து அல்லாஹுத்தஆலா இவர் மீது கோபம் கொண்டு விட்டால் நீங்களும் அவரை கோபப்படும் என்று சொல்கிறார்கள் ஆனால் அதிலுள்ள மலக்குமார்கள் அந்த மனிதர் மீது கோபம் கொள்கிறார்கள் பின்பு பூமியிலே அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தப்படுகிறது. (முஸ்லிம் ; 2637)
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன்.(புஹாரி ; 6502)
கிறிஸ்தவம்
ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்! (உபாகமம் 5:10)
தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும். (சங்கீதம் 85:10)
என இரண்டே பிறப்புகள் தான் உண்டு என்றும் பலர் பல விதமாக பிறப்பு தொடர்பான கொள்கைகளை முன்மொழிவதை நாம் காணலாம்.
இதில் வள்ளுவர் கூறும் எழுமை என்பது ஏழு பிறப்பை கூறுகிறது என்று பொழிப்புரையில் எழுதபட்டு இருப்பதை காணலாம். இந்த பொழிப்புரை வள்ளுவர் வாழ்ந்த ஆண்டிலிருந்து ஏறக்குறைய1000 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.
இக்கருத்தை பிரித்து விளக்கும் ஒரு குறளை வாசிப்போம் வாருங்கள்.
மணக்குடவர் உரை: : பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.
மாற்று உரை: அறிவிலி தனிமையில் செய்யும் செயலாலே, இவ்வுலகில் படும் துன்பத்துடன் மீண்டும் எழும் உலகிலும் நரகத்தில் புகுத்தப்பட்டு அழுத்தப்படுவான்.
குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்கு சான்று இந்த குறள்.
"எழுமையில் அளறு" அதாவது "மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம்" என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எறிகிறது.
எழுமை என்பதனை "ஏழு" என்று பொருள் கொண்டால், ஏழு பிறவியிலும் நரகம் என்ற கருத்து வரும். ஏழு பிறவி என்பது இவ்வுலகில் நிகழும் என்றால், நரகத்தை நாம் இங்கு நமது கண்முன் கண்டதுண்டா? அல்லது நம்முடன் வாழும் நபர் யாராவது நரகில் வாழ்கின்றனாரா?
முதல் பிறவியில் ஒருவன் பாவங்கள் செய்து இருந்தால் கூட அடுத்த ஆறு பிறவியில் தான் நரக வாழ்க்கை இருக்குமே தவிர இதில் குறிப்பிட்டது போல ஏழு பிறவியில் அல்ல.
நரகம் என்பது இடத்தை குறிக்கிறதா அல்லது வாழ்க்கை நிலையை குறிக்கும் சொல்லா என்று யோசித்தால் அது ஒரு குறிப்பிட்ட தன்மைகள் கொண்ட இடத்தை குறிக்கும் சொல் ஆகும்.
கடுமையான வாழ்கை நிலையை "நரகம்" என்று குறிப்பிடுவதாக கொண்டால் கூட வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் உள்ள யார் ஒருவரையும் உங்களால் காட்ட முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை. இந்த நிலையாமை தத்துவத்தை தான் வள்ளுவரும் கூறுகிறார்.
நிதர்சனம் என்னவென்றால் நரகம் முடிவில்லாதது, நெருப்பு சூழ்ந்தது. அதற்கும் இவ்வுலகத்திற்கு தொடர்பில்லை.
எழுமையில் மனிதன் "வீடு" அல்லது "அளறு" என இரண்டில் ஒன்றை அடைவான் என்கிற இதன் மறைமுக பொருளானது எழுமையில் ஒருவன் புவியில் மீண்டும் பிறப்பான் என்ற ஏழு ஜென்ம இந்துமத கற்பனை கருத்தை புறக்கணிக்கிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் திருவள்ளுவருக்கு எதிரானவர்கள்.
ஏழு பிறவி இருப்பதை ஏற்றால் கூட மகனை பெற ஒருவர் குறைந்தது ஒரு பிறவி எடுக்க வேண்டும். எனவே மீதம் 6 பிறவி மட்டுமே இல்லாது, 7 அல்ல. எனவே இப்படல் ஏழு பிறவி கொள்கையை கூறவில்லை என்று ஏற்கலாம்.
குறிப்பு: இந்த இரண்டில் ஒன்று இறந்த பிறகு உள்ள அனைத்து நிலைகளையும் குறிக்கிறது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட நிலையை குறிக்கிறது.
எழுமை நிலைகள்: 1) இறந்த பிறகுக்கும் மீண்டும் எழுப்பப்படும் வாழ்வுக்கும் இடைபட்டது, 2) அடுத்து வினைகளை விசாரிக்கும் காலம், 3) சொர்கம் அல்லது நரகம் அடையும் காலம்.
இதில் எழுபிறப்பு இரண்டாவது நிலையை குறிக்கலாம்.
இந்து மதத்தின் ஏழு பிறவி கொள்கை என்ன?
மேலே உள்ள பாடலில் 7 பிறவிகளை எடுத்து களைத்து விட்டதாக திருவாசகம் சொல்கிறது.
அதை இன்றைய பொழிப்புறையளர்கள் கீலுள்ளவாரு கூறுகிறார்கள். ஏழு முறை பிறவி என்று குறிப்பிட பட்டது ஏழு வகை பிறவி என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
ஆனால் புராணங்கள் கூறும் இந்த கருத்துக்கு தமிழ் மறைகளில் எந்த ஆதாரமும் இல்லை.
அனைத்துக்கும் விடை உடையவன். அவன் பிறப்பற்றவன். (பஞ்ச) பூதப் படையை உடையவன். தன் விருப்பம் போல உலகினை உருவாக்குவான். தன்னைப் பணிவோர் வேண்டுகின்ற வற்றை அவர்கள் வேண்டியவாறே அளிக்கும் கொடை வள்ளல். எண் குணம் உடையவன். சிந்தையில் குடி கொண்ட அவன் ஒளி வீசுகின்ற சடையை உடையவன்.
எண்குணம்?
பரிமேலழகர் – சைவ ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள் - தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.
புலவர் குழந்தை – திருக்குறள் வழியே கூறும் 8 குணம்
ஆதிபகவன் - (பொருள்: பகவான் - ஒருவன், கடவுள்)
வாலறிவான் - ((வால்=பெருமை) + அறிவு + அன் = வாலறிவன் = பெரும் அறிவைக் கொண்டவன்)
மலர்மிசை ஏகினான் (மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு 'பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்பவன்' என்பதே பொருள் ஆகும். 'மலர்தல்' என்ற வினைச்சொல்லுக்கு 'விரிதல்,பரவுதல்' என்று பொருள். 'மிசை' என்னும் சொல்லுக்கு 'மேலிடம்' என்றும் பொருள் ஆகும். வினைத்தொகை ஆகிய 'மலர்மிசை' என்பது 'மலர்ந்த மிசை' என்று விரியும். இதற்கு 'பரந்த மேலிடம்' என்று பொருள். இது அண்டவெளியினைக் குறிக்கும். 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல 'மலர்மிசை' என்பது அண்டவெளியினைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும். 'ஏகுதல்' என்னும் சொல்லுக்கு இங்கே 'கடத்தல்' என்னும் பொருளே பொருத்தமாகும்.)
வேண்டுதல் வேண்டாமை இலான் (தேவைகள் அற்றவன்)
இறைவன் - முறை செய்து காப்பாற்றுவான் (அ) அனைத்து உயிர்களுக்கும் நடுநிலையோடு நடப்பவன், கொடுப்பவன்.
பொறிவாயில் ஐந்தவித்தான் - ஐந்து புலன்களுக்கும் பொறிகளுக்கும் புலப்படாமை.
தனக்கு உவமை இல்லாமை (உடலாலும், உருவிலும், காண முடிந்த எதை கொண்டும் உணமை கூற முடியாதவன்)
(அன்றி) “என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 25:28)
கிறிஸ்தவம்
தான் தேர்ந்தெடுக்கிற நண்பர்களைப் பற்றி நல்லவன் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் தீயவர்களோ கெட்ட நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். (நீதிமொழிகள் 12:26)
ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும் (நீதிமொழிகள் 13:20)
நட்பை ஏற்படுத்தி கொள்ளும் முன் / ஏற்படுத்திய பின் நோக்க வேண்டியது.
உரை: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
இஸ்லாம்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள்.அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (குர்ஆன்: 9:71)
கிறிஸ்தவம் / யூதம்
நறுமணமும் தூபமும் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, மேலும் ஒரு நண்பரின் இன்பம் அவர்களின் இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து உருவாகிறது. —நீதிமொழிகள் 27:9
2) வழி தவறும் பொழுது நேர்வழிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.
எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப் படுத்துங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:11)
நறுமணமும் தூபமும் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, மேலும் ஒரு நண்பரின் இன்பம் அவர்களின் இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து உருவாகிறது. —நீதிமொழிகள் 27:9
உரை: ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
இஸ்லாம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. (புகாரி 3336)
அந்த (விசாரணை) நாள் வந்துவிடும்பொழுது, இறையச்சத்துடன் வாழ்ந்தவர் தவிர ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவார்கள். (அல்குர்ஆன் : 43:67)
கிறிஸ்தவம் / யூதம்
"...ஒரே காரியத்தைப் பற்றிய நம்பிக்கையில் உங்கள் அனைவரது மனமும் ஒன்று சேரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவருடன் ஒருவர் அன்புடன் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, ஒரே நோக்கம் உடையவர்களாக இருங்கள்." - (பிலிப்பியர் 2:2)
உரை: உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
இஸ்லாம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு இறை அடியானுக்கு மற்றொரு அடியான் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு அடியானின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான்… (புகாரி 2442)
கிறிஸ்தவம் / யூதம்
நண்பனிடம் கருணை காட்டாதவன் (உதவாதவன்) எல்லாம் வல்ல இறைவனின் பயத்தை விட்டுவிடுவான். - (யோபு 6:14)
உரை: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.
இஸ்லாம்
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப் படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 6133)
கிறிஸ்தவம் / யூதம்
முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை. (நீதிமொழிகள் 14:7)
இந்த பண்புகள் இல்லாத நட்பை அறியாமல் ஏற்படுத்தி கொண்டால்?
மேல்சொன்ன தகுதிகள் எல்லாம் உள்ளனவா என்று ஆய்ந்து நட்பு பாராட்ட வேண்டும். சில சமயங்களில் அவ்வாறு முயன்றும் கெட்டவர்களை நபர்களாக்கி கொள்ள நேரிடும். அப்பொழுது என்ன செய்வது இந்த நாலடியார் பாடல் பதில் சொல்கிறது.
பொருள்: மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக.
இஸ்லாம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும்தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்து இருப்பவரிடம் இருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர். (நூல்: புகாரி-2101)
எனவே தீய நட்பை விட்டுவிட வேண்டும் என்கிறது இந்த செய்திகள்.
ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். நான் அவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் ரகசியமாக எதையோ சொல்ல அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ரகசியத்தை நான் பரப்பமாட்டேன் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ஃபாத்திமா (ரலி) ஒன்றும் கூறவில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல் : புகாரி-3623)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளதுஇரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி). (நூல் : முஸ்லிம்-2833)
அதே போல ஒருவர் கூறிய இரகசியத்தைஎப்பொழுதும் வெளிய கூறக்கூடாது என்று சொல்கிறது இந்த செய்திகள்.
கிறிஸ்தவம்
மிக சீக்கிரத்தில் கோபம் கொள்கிறவர்களோடு நட்பு கொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும். (நீதிமொழி 22:24–25)
நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை. அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை. அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன். தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன் (சங்கீதம் 26:4–5)
தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப் போன்று வாழாமலும், தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான் (சங்கீதம் 1-1)
முட்டாளாக்கப்படாதீர்கள். “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள். (1 கொரி 15:33)