தவம்

தவமும் பிராத்தனையும் ஏன்?

 

தமிழர் சமயம்


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (குறள் 265)

பொருள்: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (குறள் - 266)

பொருள்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்; வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்; கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை; நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது; சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்; யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று வேண்டுறோம்.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். (மூதுரை பாடல் 7)

பொருள்: அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோஅவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. நாம் செய்யும் தவத்தின் அளவே நாம் பெரும் செல்வம். குணம் நாம் தோன்றிய குலத்தின் அளவே. 
 

இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை”. அறி: உக்பா பின் ஆமிர் (ரலி), (நூல்: முஸ்லிம்-397)
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள். அறி: ஸவ்பான் (ரலி). (நூல்: அஹ்மத்-22414 (22467)
 
உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்த னைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.(அல்குர்ஆன்-2:186)

தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரு போதும் நிராசை ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான் என்று (நபியே) நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன் 39:53)

கிறிஸ்தவம்

உங்களில் யாருக்காவது ஞானம் இல்லாதிருந்தால், குறை காணாமல் அனைவருக்கும் தாராளமாகக் கொடுக்கும் கடவுளிடம் கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் கேட்கும்போது, ​​நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் சந்தேகப்படுகிறவர் காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட கடல் அலையைப் போன்றவர் - (யாக்கோபு 1:5-6) 
 

ஆற்றல் பெற தவம் அவசியம்  
தமிழர் சமயம்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (குறள் - 270)

பொருள்ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். 

கருத்து: தவம் செய்யாதவற்கு ஆற்றல் இல்லை  

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332) 
 
பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரைசத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி; 

குறிப்பு: எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ, பெண்ணோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். இதுமட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், சமயத்தை (சிவன் சொல்லா பொருளில் கையாண்டால் அது சிவா சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம்.  

இஸ்லாம் 

நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். - (குர்ஆன் 7:10)

மக்கள், உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான். (அல் அன்பால் : 26)

கிறிஸ்தவம் 

எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள் “கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். பயப்படாதே, நான் உனது தேவன். நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்” - (ஏசாயா 41:10)

கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார். ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.” - (ஏசாயா 40:29)

கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப் போங்கள்(1 நாளாகமம் 16:11) 


ஒரு தமிழனாய் ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? சித்தாந்த ஒற்றுமை என்ன?

நன்மை தீமையை ஆய்ந்து அறிய வேண்டும்...!

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். - குறள் 511

- எப்படி தெரியுமா நன்மையையும் தீமையையும் பிரித்து வரையறை செய்ய முடியும்? 

சுயஅறிவும் நூலறிவும் சேர்தல் வேண்டும்!

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. - குறள் 636

- தமிழில் வேதம் (முதல் நூல் எனப்படும் கடவுள் மனிதனுக்கு பணித்தது- நன்னூல்& தொல்காப்பியம் பொருள் அதிகாரம் மரபியல்.94) உண்டு அவை என்னவென்று உனக்கு தெரியுமா?

அந்த நூலைத்தான் ஆய்ந்து அறியவேண்டும்! அவைகளின் சிந்தாந்த தொகுப்பு பின்வருமாறு

தமிழர் மதம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறது (திருமந்திரம் 2104) : அதாவது சாதி, மதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு இல்லை, பல கடவுள்களும் இல்லை.

- ஒவ்வொரு மதத்திற்க்கும் ஓர் தெய்வம் இல்லை :

எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே? - சிவவாக்கியர் 222

- சிலைகளை இறைவனாக வணங்க கூடாது - சித்தர் சிவாவாக்கியர் பாடல்கள்

செங்கலும் கருங்கலும் "சிவந்தசாதி லிங்கமும்"
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ! 35

பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! 36

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

- மறு ஜென்மம் பூர்வ ஜென்மம் என ஏதும் கிடையாது !!

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47

- ஆனால் மறுமை உண்டு !!

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு 158)

மறுமை என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

- சோதிடம் பைத்தியகாரத்தனம் !!

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில். - நாலடியார் 52

புனிதமாக கருதப்படும் தாலி தமிழர் மதம் இல்லை 

அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை'''

19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் இந்துமத ஆதிக்கம் அதிகமானபிறகு தொடங்கியதே!

- வரதட்சணை கூடாது !!

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே! - அகநானூறு பாடல் 90 - மருதன் இளநாகனார்

திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ’விலை’(சீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர்.

- வட்டி பெரும்பாவம் !!

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
(திருமந்திரம் - முதல் தந்திரம் - 20, அறஞ்செயான் திறம் - பாடல் எண் 1.)

மனிதனின் பிறப்பே இறைவனை வணங்கத்தான் 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - குறள் - 01:09.

- அவனை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா? 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - நாலடியார் 001

- இத்தனையும் அறிந்தபிறகு ஏன் இஸ்லாத்தை ஏற்கலாம்? இவை அனைத்தும் இஸ்லாத்தின் சித்தாந்தம். இந்து மதத்திற்கு எதிரான கொள்கைகள்.

இந்து மதத்தில் இருந்துகொண்டு
சிலையை வணங்காமல் இருக்க முடியுமா?
சாதி இல்லை என்று சொல்ல முடியுமா?
தாலி வேண்டாம் என்றோ?
வரதட்சணை வேண்டாம் என்றோ?
ஆண் தான் பெண்ணுக்கு விலை கொடுக்க வேண்டும் என்றோ?
வட்டி கூடாது என்றோ?
சோதிடம் பொய் என்றோ?
மறு ஜென்மம் இல்லை என்றோ கூறிவிட முடியுமா?

"முடியாது" ஏனென்றால் இவைகள் தான் இந்து மதத்தின் அடிப்படைகள். ஒரு தமிழன் இஸ்லாமியனாய் இருந்தால்தான் தமிழனாக இருக்க முடியும். இந்துவாக அல்ல.

- ஏற்றுக்கொள்ளும் சித்தாந்ததில் பிழைகள் இருக்க கூடாது, பின்பற்றுபவர்களில் இருக்கத்தான் செய்யும். இது அனைவர்க்கும் பொருந்தும், தமிழனாய் இஸ்லாமிய கொள்கைகளே ஏற்றுகொள்ள சிறந்தது இணக்கமானது. முஸ்லிம்களிடத்தில் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் இஸ்லாமிய கட்டமைப்பு ஒரு தானியங்கி சமூக சுத்திகரிப்பு இயந்திரம் போல, தன்னை தானே அவ்வப்போது சீர்திருத்திகொள்ளும்.

- அரபி மொழி பிரச்னை என்றால் இந்துமதம் சம்ஸ்கிருத மொழியை புனிதமாக சொல்கிறது தமிழை சூத்திர மொழி என்கிறது. ஆனால் முகமது நபி அவர்கள் எந்த ஒரு அரபியும் எந்த ஒரு அரபி அல்லாதவரை விட சிறந்தவர் கிடையாது, மொழியால் சிறப்பில்லை, குலத்தால் சிறப்பில்லை, நிறத்தால் சிறப்பில்லை என்பதொடு நற்குணமும் இறை அச்சமுமும் அதிகம் கொண்டவரே சிறந்தவர் என்ற அவரின் முற்போக்கு போதனைகளை வாசித்தால் உனக்கு ஒருவேளை அறிவு வளரலாம்.

- இத்தனை கற்ற பிறகும் இதை அப்படியே விட்டுவிடலாமா என்றால்? 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - 391

ஹிந்துக்கள் மாடு சாப்பிடுவது இல்லை, என்றால் சில ஹிந்துக்கள் உண்ணுகிறார்கள், ஹிந்து மதத்தில் அனுமதி உள்ளதா?

"ஹிந்து" என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் என்ன? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் தான் "இந்து மதத்தில் பசு மாமிசம் உண்ண அனுமதி உண்டா?" என்ற கேள்விக்கான பதில்.

இந்து என்பது சமயத்தின் பெயரா? அல்லது பூகோள பெயரா?

பூகோள பெயரென்றால், நிச்சயமாக மக்களிடையே சமயங்கள் வேறுபடும், எனவே அதன் பண்பாடும் வேறுபடும். எனவே அதில் சிலர் பசு மாமிசம் உண்ணுவதில் ஆச்சரியம் இல்லை. அது அவர்களது பண்பாடு!

மேற்கண்ட தகவலின் படி ஹிந்து என்பது பூகோலப்பெயர். அதாவது சிந்துநதியை சுற்றி இருந்த மக்கள் என்று பெயர். இது பூகோலப் பெயர் என்றால் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல.

ஹிந்து என்பது ஒரு சமயத்தின் பெயரென்றால், அது ஒரு பாரம்பரித்துடன் இருக்கவேண்டும். தொல்காப்பிய முதல்நூல் வழிநூல் தத்துவம் உலக சமயம் அனைத்துக்கும் பொருந்தும். இதை உறுதிப்படுத்த, ரிக்வேதம் 350 ரிஷிகளாலாலும், எழுதப்பட்டது, பைபிள் 40 தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டுள்ளது, தமிழர் நூலான புறநானூறு கிட்டத்தட்ட 150 புலவர்களாலும், அகநானூறு 146 புலவர்களாலும், நற்றிணை 175 புலவர்களாலும், குறுந்தொகை 206 புலவர்களாலும், ஐங்குறுநூறு ஐவராலும், பாத்திற்றுப்பத்து எட்டு பேராலும், கலித்தொகை ஐவராலும் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும். ஒரு நூலை பலர் எழுதுவது எப்படி சாத்தியமானது? யார் வேண்டுமானாலும் இப்படி ஒருநூலில் பாடலை இணைத்துவிட முடியுமா? இல்லை. அதுதான் பாரம்பரியம். பின்னாளில் வரும் ஆசிரியரை பற்றி தீர்க்க தரிசனம் வழங்கப்பட்டு இருக்கும். இந்த செய்திகளை ரிக் வேதத்திலும், அவ்வையாரின் நல்வழியிலும், பைபிளிலும் காண முடியும். இது ஒரு நீண்ட தலைப்பு.

எனவே இந்து என்கிற சமயம் எங்கே? யாரால்? பாரம்பரியமாக பின்பற்றப் பட்டு வந்தது என்கிற தரவுகள் உள்ளது என்று ஆராய்ந்தால் அதன் மொழியும் நமக்கு சொல்வது தமிழர்களுக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை என்று. எனவே தமிழர்கள் பசுமாமிசம் உண்ணக் கூடாதென்று இல்லை. தமிழர்களைப் போல இந்து பாரம்பரியத்தை சாராத யாரும் பசுமாமிசம் உண்ணகூடாதென்று இல்லை.

சரி, இப்போ உண்மையில் இந்துக்கள் பசுமாமிசம் சாப்பிடக் கூடாதா? wiki

இனவெறி!


ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து, 
இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா?” 
என்று கேட்டார்கள். 

அதற்கு நபி அவர்கள்,

 “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” 
என்றார்கள். - நூல்: அஹ்மத்
    • இறைவன் ஞானம் வழங்கிய எந்த இஸ்லாமிய அறிஞரும் இன மத வெறியர்களாக இருக்கவில்லை.
    • உலக தீவிரவாத்தில் மிக சொற்பமாக இஸ்லாமிய தீவிர வாதிகள் இருந்த போதிலும்,  ஐ.எஸ் உட்பட அனைத்து தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அறிஞர்களும் பிரச்சாரம் செய்பவராகவே இருக்கின்றனர்.
    • கொடுமைகளுக்கு குண்டு வெடிப்பு போன்று தீவிரமாக மார்கத்திற்கு முரணான முறையில் எதிர்வினை ஆற்றிய ஒரு சிலர்ர்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் ஆதரிக்கவில்லை.
    • எத்தனையோ நிழல் உலக தாதக்கள் இந்த துணைக்கண்டத்தில் இருந்தும் ஒரு சில அரபி பெயர்தாங்கிகளை ஊடகங்கள் முன்னிலைபடுத்தி பேசி வருகின்றன ஆனால் அவர்களையும், கொலை கொள்ளை நிகழ்த்துபவர்களையும் அவர்கள் செயல்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் விமர்சிப்பவர்களாகவே கண்டனம் செய்பவர்களாகவே உள்ளனர்.
    • தினமும் அறிஞர் வாயிலாக இறைவனின் போதனைகளை கேட்கும் திருக்குரானை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்த உண்மை இது.
எனவே இஸ்லாம் இதை போதிப்பது மட்டுமின்றி அதிகார, மத, இன வெறி என அனைத்தையும் நடைமுறையில் தடை செய்துள்ளது.

பற்று வேறு வெறி வேறு.

அல்ஹம்துலில்லாஹ்.

இன்பமும் துன்பமும் இணைந்தே வரும்

தமிழர் சமயம்


இன்பம், இடர்என்று இரண்டுஉற வைத்தது;
முன்புஅவர் செய்கையி னாலே முடிந்தது;
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்புஇலார் சிந்தை அறம்அறி யாரே(திருமந்திரம் 267)

இன்பம், நன்மை, அறம் என்று நேராக மட்டுமே வகுத்துவைக்காமல் இன்பத்தோடு துன்பம், நன்மையோடு தீமை, அறத்தோடு மறம் என்று எதிராகவும் வகுத்து இரண்டையும் இணைத்தே வைத்தான் இறைவன். நன்மையோ தீமையோ, ஒருவர் முன்பு செய்தது எதுவோ அதுவே அவர்க்குப் பின்னும் விளைந்தது என்றால் எதைச் செய்யவேண்டும்? எதைச் செய்தால் அறமாகும் என்று அறியாமல் முட்டிக்கொள்கிற மூடர்களைப் பற்றி என்ன சொல்ல? அன்பைக் கொடுத்தால் இன்பம் விளையாதா?

இஸ்லாம்


நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. - (குர்ஆன் 94:5-7)

கிறிஸ்தவம் 


[கடவுளின்] கோபம் ஒரு கணம் மட்டுமே, அவருடைய தயவு வாழ்நாள் முழுவதும் இருக்கும். அழுகை இரவைத் தாமதப்படுத்தலாம், ஆனால் காலையில் மகிழ்ச்சி வரும். - (சங்கீதம் 30:5)