முன்னுரை

இது சுய சரிதை அல்ல, 800 கோடிக்கும் மேல் சுய சரிதைகள் உள்ளது இன்று இப்பூவுலகில். மேலும் ஆதி மனிதன் முதல் என்று கணக்கிட தொடங்கினால் சுயசரிதைகளின் எண்ணிக்கையை எவராலும் எண்ணிமுடிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் சுயசரிதையில் எனக்கு உடன்பாடு இல்லை.
அதற்கான காரணங்களாவன 
  1. சுயசரிதை எழுதுவோரின் நேர்மையும், நியாபக திறனும், மொழி ஆற்றலும் அதில் எழுதப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும். ஆனால் அதற்கான தகவல்களை நாம் அவரின் சுயவரலாற்றிலிருந்து பெறமுடியாது.
  2. சான்றோரின் வரலாறுதான் மக்களையும், சமூகத்தையும் பண்படுத்தும். ஆனால் யார் சான்றோர்? அதற்க்கான வரைவிலக்கணத்தை எங்கே பெறுவது? தொல்காப்பியரும், வள்ளுவரும், திருமூலரும், ஆப்ரஹாமும், இயேசுவும், முகமதுவும், மேலும் நாம் அறிந்த எந்த சான்றோரும் சுய சரிதையை எழுதி இருக்கவில்லை. ஏன் என்று நாம் சிந்தித்ததுண்டா? அதற்கு அவசியமில்லை என்பதுதான் கரணமாகும்.
  3. வரலாறு என்பது சமகாலத்தில் வாழ்ந்த பல்வேறு மக்களால் கூறப்பட்டு, நேர்மையான அறிஞர்களால் எழுதப்பட்டு, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் படுவதாகும். எனவே எழுதுபவரின் நேர்மையையும் நியாபக சக்தியையும் உறுதி செய்ய முடியாத நிலையில், சுயசரிதையை கொண்டு ஒருவரை எடை போட முடியாது.
வாழ்க்கைக்கு சான்றாக எடுத்துக்கொள்ள பட வேண்டியவனின் தகுதி தரம் அறியாமல் பெண்பித்தன், தற்பெருமைக்காரன், பொய்யன், ஏமாற்றுக்காரன், நடிகன் என்று யார் யாரையோ நாம் குருவாக, தலைவனாக, சான்றோனாக எடுத்துக் கொள்கிறோம். பரிதாபமான நிலையல்லவா இது?


திறமையாக செய்தால் எதையும் வியக்கும் பண்பு நமது ஆன்மாவுக்கும் நமது சந்ததிக்கும் உகந்ததல்ல. எனவே சான்றோனை கண்டறிய, சான்றோரின் பண்பு எது? அந்த பண்பை வரையறுக்கும் அதிகாரம் படைத்தவன் யார்? போன்ற என்னைக் கவர்ந்த கருப்பொருளையும், எல்லோரும் அறிய வேண்டிய மெய்ப்பொருளை எங்கேனும் பதிந்து வைத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் எவருக்கேனும் பயன்படுமே என்கிற தீராத ஆவலைத் தவிர வேறேதும் இந்த ஆய்வை தொடங்கியதற்கான நோக்கமல்ல. இதன் மூலம் ஒருவரேனும் நான் விரும்பும் விதத்தில் பயன்பெற்றால் நான் என் பிறவிப் பயனை அடைந்ததாக கருதுவேன். 

மிகைப்படுத்தி எழுதுவதோ பேசுவதோ என் இயல்பு அல்ல. மனதுக்கு பிடித்தவர்களை கவர அவ்வாறு பேச முயன்ற பொழுதெல்லாம் அசௌகரிய மன நிலைக்குத்தான் தள்ளப்பட்டேனே தவிர வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது கிடையாது. இதை இங்கே ஒப்புக்கொள்ளும் காரணம் இந்தநூல் முழுவதும் வாசகர்களை வசீகரிக்கும் அமைப்பில் எழுதப்படாது, மாறாக இயல்பாக உள்ளது உள்ளபடியே எழுதப்படும். ஆனால் இதில் உள்ள பல உண்மைகள் நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிராத, ஆச்சரியமூட்டும், நீங்கள் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய, பயனுள்ள, ஒருவேளை உங்கள் வாழ்க்கையை மாற்றும் தகவல்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

இன்று நாம் நம்பும் அறிவியல், வணங்கும் கடவுள், வழிபடு அறம், பிசாசு, சொர்க நரகம், செய்து வரும் வணக்க முறைகள், அடக்கம் செய்யும் முறை, பாவ பரிகாரம், பார்க்கும் சோதிடம் மற்றும் குறி போன்றவைகளின் உண்மை நிலை குறித்தது நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? 

இந்த விடயங்களெல்லாம் பேரின்பம் தொடர்புடையது. இந்த பூலோகம் சிற்றின்பம் என்பதும், மேலுலகம் பேரின்பம் என்பதும் நாம் அனைவரும் அறிந்த தகவல். இதுவும் ஆதார நூல்களிலிருந்து வசித்து ஆய்ந்து தெளிவதற்கு மிக தகுதியான கருப்பொருள்.

ஆனால் இந்நூல் முழுக்க முழுக்க ஆன்மிகம் தொடர்பானது என்று எண்ணிவிட வேண்டாம், நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வி, இன்ப துன்பம், சரி பிழை போன்ற நமது அன்றாட தேடலுடன் தொடர்புடைய நூலக இது அமையும். என்னுடைய விளக்கங்களைவிட, சரியான நூலிலிருந்து  ஆதாரங்களையும் அதற்கான அறிஞர்களின் விளக்கங்களையும் குவிப்பதே இந்நூலின் நோக்கம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமந்திரத்தின் வாக்கை அது எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டுமோ அவ்வாறு ஆதாரங்களுடன் உலகுக்கு வெளிப்படுத்தும் இந்த முயற்சிக்கு இறைவன் உதவி புரிவானாக. 

- சக்திவேல்
(1-செப்-22)

செய்தி & உண்மை : பசுவதை தடை

செய்தி : 

1) மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
2) மாட்டிறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் ராம கோபாலன் வலியுறுத்தல்


உண்மை : 

இதன் பின்னணியில் பிராமண கூட்டம் இருப்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் வரலாறும் இதிகாச புராணங்கள் சொல்லுவது "பார்ப்பான் மாமிசப் பிராணியே"! மேலும் அவர்கள் பசு கறி உணுவதை முக்கிய ஒன்றாக கருதி இருந்தார்கள். இந்து மதம் எதன் மீது கட்ட பட்டுள்ளதோ அவைகளே புலால் உண்ணுதல் / மாட்டு இறைச்சி உண்ணுதலை தடை செய்ய வில்லை என்பது அப்பட்டமான உண்மை. அடுக்கடுக்கான ஆதாரங்கள் வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!

1) பசுவைக் கொல்லும் போது,
  ”ஹோதா” என்ற புரோகிதர், ‘அத் ரிகோ சமீத்வம் ஸுசமி சமீத்வம் சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரிகாஉர் இதித்ரிப் ரூயத்’ என்று சொல்ல வேண்டும். - நூல் : ஐதரேய பிராஹ்மனம் - (பஞ்சிகா2, கண்டம் 7)

 பொருள் : ‘நன்றாக அடித்துக் கொல்! கொல்! கொல்! அடிப்பதை நிறுத்தாதே! என்று கூறியவாறு பசுவைக் கொல்ல வேண்டும்.


2) பசுவைக் கொல்லும் போது சொல்ல வேண்டிய மந்திரம்: அதாஸ்யா பிராணன் விஸ்ரம் ஸமானா நனுமந்த்ரயதே ஹே புருஷ்ய்ய ஸயாவரீ ராஜகவீ தவப்ராணம் சிதிலம் க்ருத வானஸ்மி பித்ருன் உபேஹி அஸ்மின் லோககே ப்ரஜா புத்திராதிகயா ஹைஷேமம் பிராய - நூல்: தைத்ரீய ஆரண்யகம் (அத்தியாயம் 6, கல்பசூத்திரம்)

 பொருள் : பசுவை கொல்லும் போது சொல்ல வேண்டியது: ‘ஓ புரு ஷனுக்குரிய ஸயாவரியே! பசுமாடு களுக்கு தலைவி (ராஜகவீ)யே நான் உனது உயிரை வாங்குகின்றேன், நீ உனது மூதாதை (பித்ருக்)களை அடையக் கடவாய். இந்த உலகில் உனது சந்ததிகளுக்கு நலத்தைக் கொடுப்பாயாகபசுவும், காளையும் புனித விலங்கு கள். எனவே அவைகளை கண்டிப்பாக உண்ண வேண்டும். - நூல் : ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் (1:5, 14:29)


3) ‘தேன் வனடு ஹெளபஷ்யம்’

பொருள் : மாடும், எருதும் உணவுக்காத்தான்! அறிவிப்பவர் : சுவாமி சிவானந்த சரஸ்வதி நூல் : மத விசாரணை (பக்கம் 105,106)

 ‘கௌசிக முனியின் ஏழு குமாரர் களும் ஒரு மனிதனின் பசுவைக் கொன்று தின்று விட்டதினால் மோட் சம் அடைந்தனர் என்று 1863ல் அச் சான சித்த மத நிரூபன் பக்கம் 334ல் உள்ளது. பிறருடைய பசுவை திருடி சாப்பிட்டவர்கள் கூட மோட்சம் பெற்றதாக வேதங்கள் கூறுகின்றன. யாகத்தில் கொன்ற பசுவின் இறைச்சியை 36 பாகங்களாக பங்கிட்டு அதனை அனைவரும் உண்டனர். இவ்வாறு செய்வதால் கொல்லப்பட்ட விலங்கிற்கு சொர்க்கம் கிட்டும் என்று நம்பினர். வேதகாலக் கட்டத்தில் ஆரியர்கள் மாமிச உணவை குறிப் பாக பசு, காளை, எருது முதலி யவற்றின் இறைச்சியை பயன்படுத்திய தற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

4) சணல் இட மருகு வேதங்கள் ஓர் ஆய்வு (பக்கம்79) வேள்விக்கு படைக்கப்பட்டது. மந்திரப்பூர்வமாய் கொல்லப்பட்டது. விதிப்படி வரிக்கப் பட்டது. ஆசார்யனால் பணிக்கப் பட்டது. ஆகிய புலால் உணவை பிராமணன் உண்ணலாம். அந்த உணவு இல்லையெனில், தன்னுயிர் போகும் என்ற போதும் புலால் உண்ணலாம். ”உண்ணமாட்டேன்!” என்று மறுப்பது தான் பெரும் பாவம்! - நூல் : மனு தர்மம் (பக்கம் 100,101)

5) சிரார்த்தத்தில் விதிப்படி வரிக்கப் பட்டது. விஜனணானவன் தோஷமென்று மாம்ஸத்தைப் புசியாவிட் டால், அவர் 21 பிறவி (ஜென்மம்) பசுவாய் பிறப்பான். - நூல் : மனுஸ் மிருதி (அத்தியாயம் 43 சுலோகம் 35)

6) பசுவைக் கொன்று அந்த கொழுப்பை எடுத்து யாகம் (ஹோமம்) செய்ய வேண்டும். - (அஷ்டகாவிதானம் 1:24,26)

7) எந்தப் பசு கொல்லப்பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிரா மணர்களுக்கு படைக்க வேண்டும். - நூல் : ஆஸ்வலாயண க்ருஷ்ய சூத்ரம் (2,5,27)

8) விருந்தினர் உபசரிப்பில் மது, மாமிசம், இல்லாமல் (பசு அல்லது எருதின் இறைச்சி இன்றி) நடத்தக் கூடாது.நூல் : மாதவ க்ருஹ்ய சூத்திரம் 1,9,200

9) ‘காளையின் இறைச்சி விருந்தினர் உபசாரத்திற்கு உகந்தது’ என வாஜஸ நேயன் கூறுகின்றார். நூல் : வேதங்கள் ஓர் ஆய்வு பக்கம்90
திவோதாசன் என்னும் பாரத மரபின் வேந்தன் பல நூறு காளை களைக் கொன்று விருந்தளித்ததினால் பெருமையுடையவனாய்த் தன்னை அதிதிக்வா எனக் கூறிக் கொண்டான். - அறிவிப்பவர் : சி.ஸா.ஸ்ரீ நிவாசாச்சாரியார். நூல் : இந்திய வரலாறு (முதல் பாகம்: பக்கம்43)

10) மாமிசத்தோடு மதுவும் கொடுக்க வேண்டும் என்ற தேவதிதியை அனு சரித்து வேத மறிந்த விருந் தாளிக்கு ஒரு பசுங்கன்றையோ, காளை மாட் டையோ, வெள்ளாட் டையோ வீட்டில் உள்ளவர்கள் பலி கொடுக்கிறார்கள். அதுதான் தர்மம் என்று தர்ம சூத்திரங்கள் கூறுகின்றன. - அறிவிப்பவர் : ராஜாஜி நூல் : உத்தாராம சரிதம்

11) சர்மண்வதி (சம்பல்) நதிக்கரை ஷத்திரிய அரசன் தந்திதேவன் அவ ருடைய விருந்தினர் மாளிகையில் தினசரி 2000 பசுக்கள் கொல்லப்பட் டன. கொல்லப்பட்ட பசுவின் ஈரத் தோல்கள் சமையல் அறைக்கு அரு கிலே குவிக்கப்பட்டிருக்கும். அதிலி ருந்து கசியும் நீர் நதிலாகப் பெருகி ஓடும். (சர்ம தோல்; ணவதி வெளிப் பட்டு ஓடுதல்) சர்மண்வதி என்ற பெயர் தோன்றியது.

12) ரந்தி தேவரு டைய மாளிகையில் விருந்தினர் களுக்காக இந்தப் பசு மாமிசங்களைச் சமைப்பதற்கு 2000 சமையல் காரர்கள்இருந்தார்கள். ஆயினும், பிராமண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால், ‘மாமிசம் குறைவாக இருப்பதால் தனய செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’ என்று விருந்தினர்களைச் சமையல்காரர்கள் கேட்டுக்கொள்ளும் நிலைமை கூட ஏற்பட்டது. - நூல்: வால்காவிலிருந்து கங்கை வரை (பக்கம் 297, 298)

13) சோம்லி’பூஷா’ தேவதைகளின் பொருட்டு பசுவைக் கொல்ல வேண்டும். நூல் : ஸாம வேத தாண்ட மஹாப்பிரஹ்மனன் 23:14:4
அஸ்வின, ஸாரஸ்வத, இந்த்ர, இம்மூன்று தேவதைகளின் பொருட்டு பசுவைப் பலியிட வேண்டும். நான்காவதாக பிரகஸ்பதிக்கும் பசு வேண்டும். - நூல் : ஆகஸ்வலாயன கலிப திரௌத சூத்ரம் (அத்தியாயம் 3, கண்டிகை 9)

14) அவர்கள் மயக்கம் தரும் சோம பானத்தையும் தானியங்களையும் இறைச்சியையும் தேவர்களுக்குப் படைத்து வழிபட்டனர்.நூல் : இந்திய வரலாறு பக்கம் 33 ஆசிரியர் : டாக்டர் சுப்பிரமணியன்

15) மகாபாரத காலத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கு மாட்டிறைச்சி கன்று இறைச்சி முதலியன வழங்கப்பட்டிருக்கின்றன.ஆசிரியர் : ஜவஹர்லால் நேரு, நூல் : டிஸ்கவ்ரி அஃப் இந்தியா

16) அறிவில் மிகுந்த கக்லயஜுர் வேதம் இயற்றிய யாக்ளு வல்கியமுனிவர், காளைகளின் தசையை விரும்பி உண்டார். - ஆசிரியர் : சிவா ஸ்ரீ நிவாசாச்சாரியார், நூல் : இந்திய வரலாறு (முதல் பாகம், பக்கம் 43)

17) ‘பிரம்மா மாமிசம் புசிக்கும் படி போதித்தார்! கபில முனிநூல்: சாதாரண இந்து மார்க்கம் பக்கம் 93

18) இந்திரனே! இதுதான் பலிபீடம், இதுதான் பலியிடக் கொண்டு வந் துள்ள பசு, இதோ சோமபானம் (சாரயம்) இந்திரனே! இங்கே உட் காரவும், சோமபானத்தைக்குடிக்கவும். (நூல் : ரிக்வேதம் 1,77,4)

19) இந்திரனே! இந்த புரோடசத்தை (மாடு அல்லது ஆட்டின் விதை) தின்னவும். எங்களுக்கு நூற்றுக்கணக் கான ஆயிரம் கணக்கான பசுக்களை அளிக்கவும். நூல் : ரிக்வேதம் 8,28,1

20) இந்திரனாகிய என்னை வணங்கு கிறவர்கள் எனக்கு பதினைந்து காளைகளையும் இருபது காளையும் சமைக்கிறார்கள். அதிலுள்ள கொழுப் புக் கறிகளை விரைவாக நான் விழுங்குகிறேன். அவை என் வயிற்றை நிரப்புகின்றன. இந்திரன் எல்லா உலகத்திற்கும் தலைவனாய் இருக்கின்றான். நூல் : ரிக்வேதம் 10,86,14

21) அக்கினியே! உனக்காக பசுவின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட தும், மிக்கச் சத்துள்ள கொழுப்புக்கறி யால் செய்யப்பட்ட உணவுப்படை யலை உனக்கு அளிக்கிறோம். உனக்காக கொழுப்புரசம் சொட்டுகிறது. அவற்றைத் தேவர்களுடன் பங்கிடவும். நூல் : ரிக்வேதம் 3,21,1 முதல் 5 வரை அக்னி ஷோத்திரஹோமம் செய் திடப் பயன்படுத்தும் பத்துப் பொருள் களுள் ஒன்று மாமிசம். நூல் : தேவாரம் தேவாரம் வேதசாரம் பக்கம்38,39

22) பசுவைக் கொல்ல வேண்டும். ஆஸ்வலாயன கல்ப சிரௌ தஸுத்ரம் (நூல் : அத்தியாயம் 3 கண்டிகை 7)

23) மஹாவ் ரத யாகத்திற்கு எருதைக் கொல்ல வேண்டும். ஏகாதசி என்னும் யாகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பசுவீதம் கொல்ல வேண்டும். ‘ஆஸ்வலாயன சிரௌதஸுத்ரம் (நூல் : உத்ரஷ்டகம் 7வது கண்டிகை)

24) பசுவின் மாமிசம் கொடுக்கிறதினால் பதினொரு மாதம் வரை பிதுர்கள் இறந்தவர்கள் திருப்தியாயிருக்கிறார்கள். கௌசிகர் புத்திரர் குருக்குருசி யின் சீடர்கள் பசுவின் மாமிசத்தை சிரார்த்தத்தில் புசித்தார்கள். நூல் : சிவபுராணம் தர்ம அத்தியாயம் 16 : அனுஹ் 3 வாஜ்பேய் என்ற யாகத்தில் பசுக் கள் கொல்லப்பட்டு உப்பு, புளிர் பாடாமல் சாப்பிட்டனர். நூல் : தெய்வத்தின் குரல் தீக்கதிர் 22.09.2003 பக்கம் 3)

25) ‘ஆரபத்வமுத மனுஷ்ய இத்யாஹ அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ரதா ஸகர்ப்யோனு ஸகா ஸயூத்ய இதி ஜனித்ரைரேனவனம் தத்ஸமனு மத மால பந்த உதிசீனாம் அஸ்யபதோ நிதத்தாத் ஸுர்யம் சக்ஷுர்கமயதாட் வாந்த ப்ராணமன் வஸ்ருத தாதந் திரி க்ஷமக்ஷும்திச ஸ்ரோத்ரம் ப்ருதிவீ சரீரம் நூல் : ஐதரேய ப்ராஹ்மணம் (பஞ்சகா 2, கண்டம் 6)

 பொருள் : இம்மந்திரத்தினால் பசுவின் தாய், தந்தையரைக் கேட்டுக் கொள்வதா வது, இந்த பசுவை எனக்குக் கொடுங் கள். இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர், ‘அத்வர்யூ’ என்னும் தலை மைப் புரோகிதருடைய கட்டளை யைப் பெற்றுக் கொண்டு, பசுவை அழைத்துக் கொண்டு போய், வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து ‘கமிதா’ என்னும் பசுவைக் கொல்லும் புரோகிதர் ‘முஷ்டி’ என்னும் குறுந்தடி யால் பசுவினுடைய கழுத்தில் அடித் துக் கொலை செய்வார். அதன் பின் ‘கரா’ ‘இடா’ ‘ஸுனு’ ‘ஸ்வதீத்’ என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவைக் கிடத்தி, தோல் உரித்து, சதையை அறுத்தெடுத்து, சிறிது நெருப்பிலிட்டு, மீதியுள்ள மாமிசத் தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்வார்கள். - அறிவிப்பவர் : ங.ஃ.கேலுண்ணி நாயர் என்ற சுவாமி சிவானந்த சரஸ்வதி நூல் : மதவிசாரணை, பக்கம் 67:69


26) உலகத்தில் மாமிசத்தின் ருசியைப் போல் வேறொரு வஸ்துவுமில்லை. மாமிசத்தினால் தேகபலம் வளர்கிறது. இரத்தம் உற்பத்தியாகிறது. மாமிசத்தை விட நேர்த்தியான வேறொரு ஆகார மில்லை என்று ராஜா ஜதேஷ்டர் அவர்கள், பஷீம்ஜீ என்பவரை நோக்கி மொழிந்தார். நூல் : மகாபாரதம், சாந்தி பர்வம், அத்தியாயம் 8 பக்கம் 1543

27) வடை முக்கிய பலகாரங்கள், பாயாசம் , கிழங்கு, ருசியுள்ள இறைச்சி, நறுமணமுள்ள நீர் இவைகள் பிராமணர்களுக்கு உரியன. (மனு .அத்.3சு227)ஒரு பிராமணன் மந்திரத்தினாற் கொல்லப்பட்ட மிருகாதிகளின் மாமிசத்தைப் புசிக்கலாம். (மனு அத் 5. சு.27)

28) உயிருக்கு ஆபத்து நேருங்கால் புசிக்கத்தக்க பிராணிகளை நாள்தோறும் புசித்த போதிலும் தோஷத்தை அடையமாட்டான். (மனு அத் 3. சு.10) இன்ன இன்ன மாமிசத்தால் சிரார்த்தம் செய்தால் பிதுர்க்கள் இவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்ற விவரம் எள், செந்நெல், அரிசி, உளுந்து, நீர், கிழங்கு , கனி இவற்றால் மனித பிதுர்க்கள் ஒரு மாதம் திருப்தியடைவர். மீனுணவால் இரு மாதங்கள் மான் மாமிசத்தால் மூன்று மாதங்கள் - செம்மறியாட்டுப் புலாலால் நான்கு மாதங்கள், பட்சி மாமிசத்தால் அய்ந்து மாதங்கள் பிதுர்த்திருப்தியாகும்.

29) வெள்ளாட்டின் மாமிசம் ஆறு மாதம்- புள்ளிமான் புலால் ஏழுமாதம், கருப்பு மான் மாமிசம் எட்டுமாதம், கலைமான் மாமிசம் ஒன்பது மாதம். முள்ளம்பன்றி, காட்டெருமைக் கடா இவற்றின் மாமிசத்தால் பத்து மாதங்கள், முயல், ஆமை, இவற்றால் பதினோரு மாதங்கள்.பசுவின் பால், தயிர், நெய், இவற்றால் ஒரு வருடம். இரண்டு காதுகளும் நீரில்பட மூழ்கிக் குடிக்கின்ற கிழ வெள்ளாட்டுக் கடா மாமிசத்தால் பன்னிரண்டு ஆண்டுகள்.

30) அந்தந்தத் காலத்தில் விளைகின்ற காய்கறிகள், வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் மாமிசத்தாலும் காட்டில் முளைக்கின்ற செந்நெல் அரிசியினாலும் செய்தால் எல்லையற்ற காலமும் பிதுர்க்கள் சிரார்த்தத்தால் திருப்தியுறுகின்றனர். மழைக் காலத்து புரட்டாசி தேய்பிறை பதின்மூன்றாம் நாளில் தேனாலும் பாயசத்தாலும் சிரார்த்தம் செய்தால் குறைவறத் திருப்தியடைவர். (மனு. அத் 2. சு 267 முதல் 273 வரை) சிரார்த்தத்தில் விதிப்படி விதிக்கப்பட்ட பிராமணன் மாமிசத்தைத் தோஷமென்று புசியாவிட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான். (மனு. அத்.5.சு 35)


கருத்து

   மேலே சொல்லப்பட்டு உள்ள ஆதார சுலோகங்கள் மற்றும் நிகழ்வுகள் அறியாதவர் பலர் அறிந்தவர் சிலர், நம் சிந்தையில் விதைக்க பட்ட உண்மை அல்லாத இப்படிப்பட்ட விஷயங்களை வெறுப்பு அரசியலுக்கு அன்றி வேறெவைகளுக்கு பயன் படுத்துவதாக நீங்கள் கருதுகிறீர்கள்? பசு புனிதம் என்று எதன் அடிப்படையில் சொல்லுகிறார்கள் இவர்கள்! வேத புத்தகங்கள் தானே ஹிந்து மதம்! அவைகளே தடைசெய்யாமல் உண்ண சொல்லுகிறதே.  நீங்கள் வேதம் சொல்லுவது எங்களுக்கு தேவை இல்லை எங்களுக்கு எங்கள் பொய்யான யூகம் மற்றும் பொய் நம்பிக்கைதான் முக்கியம் என்றால், நாங்கள் உங்களை கட்டாய படுத்தவில்லை. ஆனால் எங்கள் நம்பிக்கியில் மூக்கை நுழைக்காதீர். 

சிந்திக்க 

1) நாம் (தமிழர்கள்) யார்?
2) நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ன?
3) பசுவதை தடை அரசியலா? இல்லை உணமை புனிதமா? இதை அறிய எதை படிக்க வேண்டும்?
4) இந்து மத வேதங்கள் பசு இறைச்சி பற்றி என்ன சொல்லுகிறது?
5) தமிழருக்கும் இந்து மத வேதத்திற்கும் தொடர்பு ஏதும் உண்டா?
6) நம்மை அறிய படிக்க வேண்டிய நூல்கள் வேத இதிகாச புராணங்களா? தமிழ் நன்னெறி நூல்காளா?
7) இதை அரசியல் என்றால் மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது?

கட்டாயமாக இஸ்லாமியர்களாக மாற்றபட்டோமா?

 முகலாயர்கள் ஆட்சியில் இருந்த பொழுது அவர்கள் குடிமக்களை கட்டாய மதமாற்றம் செய்ததாக என்னிடம் பலமுறை குற்றச்சாட்டுகள் வைக்கபடுகிறது அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை எனக்குள்ளதாக உணர்கிறேன்... 

 1000 ஆண்டுகள் இருந்த சமண மதத்தை விட்டு சைவராக மாறியவர்கள்தான் உயிருக்கு பயந்து மாறியவர்கள், சைவ சமண வைணவ வரலாறையும் பெரிய புராணத்தையும் புரட்டி பாருங்கள் உண்மை புரியும். 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் பெரும்பாலானோர் நினைப்பது போல் கட்டாய மத மாற்றம் செய்து இருந்தால் இந்தியா இன்று ஹிந்து நாடாக இருந்து இருக்காது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்வார்கள்.
   வேறு நாட்டு அல்லது மொழியில் வந்த மதத்தை பின்பற்ற கூடாது என்றால் வட நாட்டில் இருந்து வந்த சமஸ்கிருதத்தில் உள்ள வேத இதிகாசங்களை பின்பற்றுபவர்கள்தான் முதலில் அதை நிறுத்த வேண்டும்.
   தமிழர்களை குரங்காகவும் அரக்கனாகவும் தீண்ட தகாதவர்களாகவும் சித்தரிக்கும் புத்தகங்களுக்காக ஏன் இப்படி வக்காலத்து வாங்குகின்றீர் என்று எனக்கு புரியவில்லை..? இன்று தேவர், உடயார் முதலியார் கவுண்டர் என்று மீசையை முறுக்கி கொள்ளலாம் ஆனால் நீங்கள் உங்கள் மதத்தில் சூத்திரன்தான் பிராமினுக்கு தீட்டு பொருள் தான் நீங்கள். சிந்திக்க விடாமல் சாதி வெறி என்னும் திசை நோக்கி மாற்றி வைத்து இருக்கிறார்கள் ஆளும் வர்கத்தினர் ..
     வாருங்கள் இஸ்லாமிற்கு, நாட்டின் அரசனையும் மார்க பண்டிதார்களையும் சகோதரனாய் கட்டி தழுவலாம். எவ்வளவு பெரிய பணக்காரனாய் இருந்தாலும் அவன் உன்னை விடதகுதியில் உயர்ந்தவனும் இல்லை, ஏழை உன்னைவிட தாழ்ந்தவனும் இல்லை. இஸ்லாமிய வேதத்தை படிக்க முஸ்லிம் அல்லாத, அவர் மதத்தில் வேதங்களை கற்றுக்கொள்ள அருகதை அற்ற தாழ்ந்தவராக கருத படுபவருக்கும் உரிமையும் தகுதியும் உண்டு...
   ஹிந்து என்ற சொல் ஏதேனும் வேத புராண இதுகாசங்களில் இருக்கிறதா என்று தேடி பார்க்கவும். நமக்கு வெள்ளயன் வைத்த பெயர் ஹிந்து.. குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களுக்கு குறிப்பிடும் சொல் அது, இந்தியாவில் வாழும் மக்கள் இந்துக்கள். அது மதம் இல்லை. மதமாய் இருந்தால் வேத புத்தகங்களில் காட்டுங்கள் பார்கலாம். சைவம் வைணவம் வைதீக மதங்கள் இன்னும் பற்பல வட்டார மதங்கள் மற்றும் கடவுள்களின் கலவைதான் ஹிந்து மதம். இதை நான் சொல்லவில்லை இந்து மதத்தின் வேத இதிகாசங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்சி மூலமாக கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட வரலாற்று ஆராய்ச்சியாளர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ரஷ்யாவை சேர்ந்த ஆன்டோநோவா எழுதிய "இந்திய வரலாறு" என்ற புத்தகம் பதிவு செய்த கருத்து இவைகள். இது வெறும் உதாரணம்தான், இன்னும் பற்பல ஆதாரபூர்வமான புத்தகங்களையும் ஆராய்ச்சிகளையும் தர முடியும்
    இப்படி கலவையாக இருந்தால் எந்த ஒரு கருத்தை சொன்னாலும் அதற்கு முரணான கருத்தும் அதிலேயே இருக்கும்.
    உதாரணத்திற்கு கடவுள் ஒன்றே, அவருக்கு உருவம் இல்லை என்று என்று ரிக் வேத ஆரம்ப சுலோகங்கள் சொல்கிறது, 9 மண்டலம் வரை இதையே தான் சொல்கிறது, 10 வது மண்டலத்தில் தான் மற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள், உருவம் கொடுத்து இருக்கிறார்கள்.. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டீர்கள்என்றால், 10 மண்டலங்களும் வெவ்வேறு ரிஷிகள் மூலம் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதப்பட்டது.. அதிலும் இந்த 10வது மண்டலம் எழுதியவர் யார் என்பது விடை இல்லா கேள்வி... மண்டலம் 10 தான் உருவ வழிபாடு கொள்கையின் முதல் அடியிட்ட வரிகள்.. அதனை அடிப்படையாககொண்டுதான் உருவ வழிபாடு சித்தாந்தங்கள் வளர்ந்து இருக்க வேண்டும். யார் எழுதினார், அவர் சுபாவம் என்ன, நல்லவரா? கெட்டவரா? என்றே தெரியாத கொள்கையைத்தான் நாம் முன்னோர்கள் தொன்றுதொட்டு நம்பி வந்துஉள்ளனர்.
   இதை நான் சொல்லவில்லை ஹிந்து பண்டிதர் ஒருவர் எழுதிய கட்டுரையில் படித்தது. என்றால் முதல் 9 மண்டலம் சொல்வது சரியா இல்லை 10 வது மண்டலம் சொல்வது சரியா?
   நான் ஆதியும் அந்தமும் அற்றவன் என்று இறைவன் கீதையில் சொல்கிறான், ஆனால் க்ரிஷ்ணர் கடவுள் என்கிறீர்கள்? க்ரிஷ்ணர் பிறந்தார் மேலும் இறக்கவும் செய்தார்.. ராமரும் அதே வகைதான்.. இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், நல்ல மனிதர்களாக, புனிதர்களாக, ரிஷிகளாக, இறைத்தூதர்களாக ஆனால் கடவுள்களாக இல்லை.. இது என் கருத்து இல்லை. மேலே சொல்லிஇருக்கும் கீதையின் கருத்து இதுதான், மேலும்

  படைப்பினங்களை வணங்குவோர் அந்தகார இருளின் ஆழத்தில் அழுத்தப்படுவர்! -  யஜூர் வேதம் 40:9
   யார் அசம்பூதியை (இயற்கை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! -  அதர்வவேதம் 40 : 09 
    வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். - பகவத்கீதை 7.20  

   இவைகளெல்லாம் சொல்வது என்ன? இயற்கையயும் படைப்பிணங்களாகிய மனிதனையும் விலங்குகளையும் வணங்காதீர்கள் என்றுதானே.. மனிதனை படைத்தது ஆதிபகவான் என்னும் தொடக்கமும் முடிவும் பிறப்பும் இறப்பும் இல்லாத அந்த ஒரு இறைவன் தானே? இவ்வாறு வேதங்கள் சொல்ல மற்ற முரணான கருத்துக்கள் எங்கிருந்து வந்தன?
   நீங்கள் கடவுள்களாக குறிப்பிடுபவர்கள் அனைவரும் இந்தியாவில் பிறந்தவர்களாகவே சொல்லுகிறது புராணங்கள்.. ஆனால் கடவுள் உலகம் அனைத்தையும் படைத்தவர் தானே, இங்கே பிறந்ததாய் சொல்ல படும் கடவுள்கள் ஏன் மற்ற நாடுகளில் மற்ற மொழி பேசும் இடங்களில் பிறக்கவில்லை...? என்றால் அவர் இந்தியாவை மட்டும் தான் படைத்தாரா? ஆம் என்றால் அவர் கடவுளாய் இருக்க வாய்ப்பு இல்லை.. இல்லை என்றால் உங்களின் புரிதலும் செயலும் தவறு.. அடிப்படை அல்லவா இது..?
   மற்ற வேதங்கள் இறைவன் ஒருவனே என்கிறது, அனேகர் அதயே பின் தொடர்கிறார்கள்.. அதை போதித்தவர்களை ரிஷிகள், சித்தர் , தூதுவர் என்று குறிக்கப்படுகிறது, கடவுள் என்று இல்லை.. ஹிந்து மதத்திலும் அதே சொல்ல பட்டு இருக்கிரது, துரதிஷ்டம் என்னவென்றால் இறைவன் ஒருவனே அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன், என இஸ்லாம் சொல்லும் அனைத்தையும் ஹிந்துமதமும் சொன்னாலும் இந்த கருத்துக்கு முரணான கருத்தையும் சேர்த்து சொல்கிறது.. இதனை ஆராய வாய்ப்போ ஆர்வமோ எவருக்கும் இல்லை.
    ஏனென்றால் சம்ஸ்கிருதம் தெரிந்தவரும் பழந்த்தமிழ் தெரிந்தவரும் வெகு குறைவு. மேலும் பணம் சம்பாதிக்கவும் வசதி வாய்ப்புகளை பெருகி கொள்ள ஆர்வம் கொண்ட நாம் எது உண்மை என்பதை அறிய ஆர்வம் கொண்டவர்களாக இல்லை.
   பாவிஷ்ய புராணம் பகுதி 3 ,3,5 இல் முகமது நபி அவர்களின் பெயருடன் அவரது வருகை பதிவு செய்யப்பட்டு உள்ளது (ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் ஒப்புக்கொண்ட உண்மை இது, வீடியோவை  பாருங்கள்). மேலும் 10 அவதாரங்களில் 10வது அவதாரமாக கருத்தப்படும், கல்கி புராணத்தில் குறிக்கப்பட்ட கல்கி அவதாரம் தான் முகம்மது நபி என்று நிரூபிக்கப்பட்ட உண்மை.. நிரூபித்தது இஸ்லாமியர்கள் அல்ல, மாறாக உப்பாத்தேயா என்ற சம்ஸ்கிருத அறிஞர்.
   9 அவதாரங்களை ஏற்றுக்கொண்ட நாம் ஏன் 10-வது அவதாரத்தை ஏற்க்க மறுக்கிறோம்? அவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதாலா? வேறு மொழியை சேர்ந்தவர் என்பதாலா? வேறு கொள்கை உடயவர் என்பதாலா?
    நாட்டை பற்றி கவலை படுவீர்களானால் நேற்றய திருப்பதி தமிழ்நாடு உடையது, இன்று ஆந்திராவிற்கு.. நாளை? நேற்றய நாடு இன்று பற்பல நாடுகளாக பிளவுகளுடன், நேற்றய பற்பல நாடுகள் இன்று ஒருங்கிணைந்த நாடாக.. இது வரலாறும் புவியியலும் அரசியலும் கட்டித்தந்த பதிவுகள்.. மறுப்பதற்கு இல்லை..
    மொழி ஒரு தடையா? என்றால் முந்தய 9 அவதாரங்களின் மொழி என்னவென்று தெரியும்? சமஸ்கிருததமாக இருந்தாலும் அது நமக்கு அந்நிய மொழியே.. அனைத்து அவதாரங்களின் மொழி சம்ஸ்கிருதம் என்பது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.. ஏனென்றால் சமஸ்கிருதத்தில் வரலாறு வெறும் ஒரு சில ஆயிரம் ஆண்டுகாள் தான் ஆனால் இந்த அவதாரங்களின் கலகட்டமோ இன்னும் ஆராய்ச்சிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.. மேலும் பல ஆய்யிரம் ஆண்டுகாள் என்று சொல்லுவோரும் உண்டு.. எனவே எந்த மொழி அவர்களின் மொழி? அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதே சர்ச்சைக்கு உரிய விஷயம், இதில் எங்கிருந்து அவர்களின் போதனையை பொய் கலக்காமல் அல்லது மறுவாமல் நாம் உண்மையை அப்படியே அறிவது? மொழி தடை எனில் முதலில் ஒதுக்க வேண்டியது தமிழ் சமணர்களை கழுவேற்றி கொலைசெய்து சைவ வைணவ மதங்களை தமிழ்நாட்டில் பரப்பிய ஆரியர்களின் அந்தணார்களின் சமஸ்கிருத போதனைகளைத்தான் நாம் விட்டு தள்ளவேண்டும்.
     வேறு கொள்கையை கொண்டவரா? தமிழன் நாம் வர்ணங்களை கொண்டவர்கள் இல்லை... இங்கு அந்தணனும் இருந்ததில்லை சூத்திரனும் இருந்ததில்லை.. அனைவரும் இறைவன் பார்வையில் சமமானவர்களே, ஒருவனின் உயர்வு தாழ்வு அவன் செய்த கருமங்களே தீர்மானிக்கும்.. தமிழன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை கொண்டவன், என்றால் முகம்மது நம் குலமல்லவா? அவர் போதிப்பதும் ஒன்றே குலம் ஒரே தேவனை அல்லவா? அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்பதை போதித்த அவதாரம் கல்கி / முகம்மது நபி அவர்கள்.. வார்த்தை பிரயோகங்கள் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் கருத்து ஒன்றே.. சைவம் தமிழ்நாட்டு வரலாற்றிலும் இலக்கியத்திலும் புகுவதற்கு முன்னால் தமிழனின் கொள்கை வணங்க தகுதி படைத்தவன் உருவமற்ற ஒரேகடவுள், படைத்தவன் அவனே, அதை தான் கல்கி அவதாரமாகிய முகம்மது நபி அவர்கள் போதித்து சென்று உள்ளார்கள்..
    மேலும் இவர்தான் 10 வது அவதாரம் என்று உறுதிசெய்த பின்னர் ஏற்க மறுத்தோமானால், நாம் உண்மையில் நாம் வேதங்கள் (இறைவனின் வார்த்தை) சொல்வதை மீறியவர்கள் ஆகின்றோம்.. பின் நாம் கஷ்ட கலங்களில் "நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் இந்த தண்டனை" என்று சொல்ல தகுதி அற்றவர் ஆகி விடுகின்றோம்
     யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் போதுமான ஆதாரம், ஸாங்க் ஆஃப் சாலமோன் 5:16 இல் முகம்மது அவர்களின் வருகை பெயருடன் குறிக்கப்பட்டு உள்ளது.
     சரி இருக்கிறது அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? ஆம் நீங்கள் உங்கள் வேதத்தையும் இறைவனையும் நம்பியவர்களாகவும் வணங்கியவர்களாகவும் இருந்தால், உங்கள் வேதம் சொல்லியிருக்கும் முன்னறிவிப்புகள் ஏன் என்று சிந்தியுங்கள்.. முகம்மது அவர்கள் வரும் காலகட்டத்தில் அவரையும் அவரது போதனையையும் ஏற்கவேண்டும் என்பதற்காகவே அன்றி வேறு காரணங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. முற்சென்ற ரிஷிகளின் போதனைகள் பாழ் படும்போழுது அதனை சரிசெய்ய அடுத்து ஒரு ரிஷி அல்லது தூதரை அனுப்புவது இயற்கை.
     ஆதாரம்?, நான்கு வேதங்களும் வெவ்வேறு ரிஷிகளால் எழுத்த பட்டது, மட்டுமல்ல ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மண்டலமும் வெவ்வேறு ரிஷிகளால் எழுதப்பட்டது . இதுபற்றி கிருஸ்தவர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் ஹிந்துக்களை போல் அன்றி அவர்களுக்கு அவர்களது பழய புதிய ஏற்பாட்டின் கதை தெரிந்து இருக்க அனேக வாய்ப்பு உள்ளது.. ..
       அனைத்து மதங்களின் வேதங்களின் சாரம் படைத்த ஓரிறைவனை மட்டும் வணங்குவது, இஸ்லாம் மட்டுமே அதில் உறுதியாக இருப்பதால் என் மார்கமாக இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.
    என் கருத்துடன் உங்கள் கருத்து வேறுபடுகிறதா? ஆம் இறைவன் அவனது வேதத்தில் சொல்லுகிறான்

   மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)

கடவுள் நம்பிக்கை என ஒன்று இருந்தால் சிந்தியுங்கள்.. இது விளையாட்டோ, தேவை அற்றதோ இல்லை, விஷயம் கடுமையான விளைவுகளை கொண்டது.

source : https://www.facebook.com/TRafeequlislam/posts/483006018498005

பிராமணன் Vs இஸ்லாமியன்

1) வரையறை 

யார் பிராமணன்?

மஹாபாரதத்தில் பல இடங்களில்"யார் பிராமணன்"? என்ற கேள்வி எழுகிறது.அதற்கு யுதிஷ்டிரனும்"எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது இருக்கிறானோ, இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல"

அதே போல் நகுஷன் என்பவன் மலைப்பாம்பின் வடிவில் பீமனை பற்றிவிடுகிறான். அவனிடம் கேட்கப்படும் கேள்வி "பிராமணனை எப்படி அறிவாய்" பீமனும் சொல்வதாவது:"எவனிடம் பொறுமை, ஒழுக்கம், இரக்கம், தவம், உண்மை, தயாள குணம் இருக்கிறதோ அவனை பிராமணனாக அறியலாம்" 
பிராமணன் என்றால் இவ்வகை குணங்களை கொண்டவர் மட்டுமே, அது சாதி அல்ல, பிறப்பால் வருவது அல்ல. ஆனால் பிராஹ்மின் என்ற கூட்டம் அதை ஒரு சாதியாகவும் மற்றவர்கள் தீண்ட தகாதவர்கள் என்றும் வேதம் அவர்களுக்கே சொந்தம் என்றும் மாற்றி விட்டது.
__________________________________________
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:30)

பொழிப்பு: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர்.
மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

இஸ்லாமியன் என்பதன் பொருள்?
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள்(தேவர்கள் ), வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும்(தயாள குணத்துடன்), தொழுகையை (தவம்) நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும் (உண்மை), வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே (பொறுமை) நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள் (இஸ்லாமியன்). - அல் குர்ஆன் 2:177

வரையறை அடிப்படையில் இஸ்லாமியன் = பிராமணன்

இந்த வரையறை கொண்ட இஸ்லாத்தை பின் தொடர விரும்புகின்ற எவரையும் இஸ்லாமியனாக அங்கீகரிக்கலாம் ஆனால் இந்து சமயத்தில் பிராமினாக ஆக முடியுமா?

2) ஏற்ற தாழ்வு :




  நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர். - கீதை 





  மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. -புனித குரான் 30:22.




  குரானிலும் கீதையிலும் வெவ்வேறு வண்ணத்தில் மனிதர்கள் படைக்க பட்டு இருப்பது தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது. அதற்கு அர்த்தம் அவர்கள் ஏற்ற தாழ்வு கொண்டவர்கள் என்பதல்ல. அவர்களின் தேவைக்கு ஏற்ப உடல் வாகுவையும் நிறத்தையும், ஒருவரை ஒருவர் இவர் இன்ன இனத்தவர் என்பதை அடையாளம் கொள்வதற்கும் ஆகும்.
   இந்த ஏற்றதாழ்வு மனிதர்களால் அவர்களது சுய லாபத்துக்காக ஏற்படுத்த பட்டதே அன்றி வேறில்லை, இந்து மதத்தில் மனிதர்களால் மாற்ற பட்ட அல்லது தவறாகபுரிதலால் நிரந்தரம் ஆக்கப்பட்டுவிட்டது,   இந்து மதத்தில்ஏற்ற தாழ்வு நிரந்தரம் ஏனென்றால் அது அவர்களை கொள்கை அக்கபட்டுவிட்டது.

3) ஆடை: 
இஸ்லாமியர்களின் ஆடையும் இந்துக்களின் ஆடையும் ஒரே காரணத்திற்காக தான் வடிவமைக்க பட்டு இருந்தது. அதாவது முழுமையாக உடலை வெட்கத்துடன் மானம் காக்க மறைப்பது. அதன் வடிவமைப்பு வேறுபட்டாலும் அதன் காரண காரியங்கள் எல்லாம் ஒன்றுதான்.இன்று ஹிந்துக்களின் ஆடை மேற்கத்திய பாதிப்பின் காரணமாக ஏறக்குறைய முற்றிலுமாக மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது. இஸ்லாமில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கொள்கை அடிப்படையில் இஸ்லாமியர்களாக இருப்பவர்கள் சரியாக மறைக்க வேண்டியவைகளை மறைத்து முறையாக பின்தொடருகின்றனர், அந்த ஆடைகள் தீவிரவாதிகளில் ஆடையாக சித்தரிக்க பட்டபோதிலும்.




4) புலால்  
ரிக்வேதா 10.86.13, 10.27.17, 10.94.3 , 10.87.16 யாஜுர் வேதா 2.5.5, 2.2.9 ஆதர்வான வேதா 1.16.4... இவைகள் ஹிந்துக்கள் புலால் உண்பதை தடை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஹிந்துக்களின் வேத புத்தகங்களின் எடுத்துக்காட்டு வாசகங்கள்..
வட்டார கடவுள்களை வணங்குபவர்கள் இன்றும் பலி கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஹிந்துக்கள் ஆனார்கள் என்று இதுவரை எனக்கு புரியவில்லை என்பது வேறு விஷயம்.

முடிவுரை : 

பிராமணன் என்பதற்கும் இஸ்லாமியன் என்பதற்கும் குறிக்க படும் வரையறை ஒன்றே, அனால் அந்த வரையறை படி நடந்து கொள்ளுவோர் இஸ்லாமியர் மட்டுமே.

சரி இதுபோல் நடைமுறயில் உள்ள வேற்றுமையாக கருத்தப்படும் அனேக விஷயங்கள் ஒற்றுமையாகவே இருக்க, எதுதான் உன்மயான வேற்றுமை?

இஸ்லாமிற்கு முன் இருந்த எல்லா மதத்தினரும் அது முடியும் தருவாயில் செய்த அதே தவறுதான்.. ஒன்றுக்கும் மேற்பட்ட படைத்தவனை அன்றி மற்றவைகளை வணங்குவது.. இது சரியா? இதனை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

அவர்அவருக்குரிய மரியாதையும் பரிசும் அங்கீகாரமும் அவரவருக்கே சென்றடைய வேண்டும் என்பது எதார்த்த உண்மை.. படிக்காதவனுக்கு சம்பளம் குறைச்சல், படித்த திறமையானவனுக்கு அவனுக்கு உரிய அங்கீகாரமும் சம்பளமும் கொடுக்க படவேண்டும், அம்மாவை அத்தை என்று அழைக்க முடியாது, அப்பாவைமாமா என்று அழைக்க கூடாது.. பிச்சைகாரனைஅரசே என்று அழைக்க முடியாது, அரசனை பிச்சைக்கார என்று கூறமுடியாது... அது ஏன் கடவுள் விஷயத்தில் மட்டும் இதனை அலட்சியம்... கண்ணில் பட்டவனெல்லாம் கடவுள், காசு குடுத்தாஅவன் சாமி, செத்துபோனா அவன் கடவுள், அழகானசிலை இருந்த அதுவும் கடவுள்..?

இறைவன் பேசுகிறான் நம்மோடு வேதத்தின் மூலமாக..நாம் என்ன செய்யவேண்டும் என்று அறிவிக்கிறான்.. செய்தால் என்ன நன்மை இல்லை என்றால் என்ன தீமை என்றும் விளக்குகிறான்.. அவன் எவ்வளவு அன்பு கொண்டவன் பாருங்கள்,அவன் தான் இறைவன் என்று பல குறிப்புகள், அத்தாட்சிகள், அதிசயங்கள், முன்னறிவிப்பு, நமக்குத்தெரியாத அறிவியல் உண்மைகள் சொல்வதன் மூலம் நிரூபிக்கிறான். அதற்கான அவசியமும் கட்டாயமும் அவனுக்கு கிடயாது,நம் மீது கொண்ட கருணை மட்டுமே கரணம் இதனை அவன் செய்வதற்கு. வேதங்கள் என்று எஞ்சி இருப்பவை வெகு சிலவே அதை படிப்பதில் அல்லது அறிஞர்கள் மூலம் அறிவதில் என்ன சிரமம்? வேதங்களின் அறிவு நமக்கு விளக்கம் கொடுக்கும் என்பது உண்மை, அணைத்து வேதங்களையும் ஒப்பீடு செய்தல் அதிக விளக்கத்தை கொடுத்து உண்மையை விளங்க செய்யும்.
(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கடுபட்டவன்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)
அல்லாஹ்வே அறிந்தவன்..

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்...